Wednesday 30 September 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 30.09.2009

இலங்கை பங்குச்சந்தை இன்று 0.87 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.87 சதவீதம் (25.39 புள்ளி) உயர்ந்து 2,938.64 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.15 சதவீதம் (37.47 புள்ளி) உயர்ந்து 3,297.43 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.24 பில்லியன் ரூபாய்.

புதன்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 38.7 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 131.7 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 93.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/30092009.html"

Tuesday 29 September 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 29.09.2009

இலங்கை பங்குச்சந்தை இன்று 0.68 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.68 சதவீதம் (19.61 புள்ளி) உயர்ந்து 2,913.25 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.31 சதவீதம் (10.21 புள்ளி) உயர்ந்து 3,259.96 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 729.4 மில்லியன் ரூபாய்.

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 62.3 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 186.2 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 123.9 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். உங்கள் பின்னுட்டல்கள் எதிர்பாக்கப்படுகிறது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/29092009.html"

Monday 28 September 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 28.09.2009

இலங்கை பங்குச்சந்தை இன்று சிறிதளவு உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.05 சதவீதம் (1.59 புள்ளி) உயர்ந்து 2,893.64 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.54 சதவீதம் (17.58 புள்ளி) உயர்ந்து 3,248.75 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 326.8 மில்லியன் ரூபாய்.

திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 21.4 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 69.4 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 48.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். உங்கள் பின்னுட்டல்கள் எதிர்பாக்கப்படுகிறது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/28092009.html"

* பங்கு வர்த்தகம் சூதாட்டமா? என் பார்வையில்-03

மார்ஜின் டிரேடிங்கை (Margin Trading or Intraday Trading) எல்லா நேரங்களிலும் லாபமுடன் செய்ய முடியாது ?அதில் ரிஸ்க் அதிகம். பங்கு விலை ஏறும் என நீண்ட கால முதலீட்டில் காத்திருக்கலாம். ஆனால் சில மணித்துளிகளில், சரிந்த பங்கு மறுபடியும் எகிறும் என காத்திருக்க முடியாது. சந்தை சூழ்நிலையைப் பொறுத்து ஏறலாம் அல்லது இன்னும் சரியலாம்.

நான் பங்கு எகிறும் எனக் காத்திருக்க, பணம் காணாமல் போய் விட்டது. பங்கு முதலீட்டுக்கும், ஸ்பேக்குலேஷனுக்கும் வித்யாசம் தெரியாமல், முதலீட்டாளர் மன நிலையில் ஸ்பேக்குலேட் செய்து கொண்டிருந்தது தான் நான் செய்த தவறு. நம்முடைய மனநிலைக்கு ஏற்றவாறு தான் வர்த்தகம் செய்ய வேண்டும். சமரவீரவால் ஜெயசூரிய போல் ஆட முடியுமா என்ன? அவரவர் பலத்திற்கு ஏற்றவாறு தான் ஆட வேண்டும். அப்பொழுது தான் வெற்றி பெற இயலும். முதலீட்டிற்கும் இது பொருந்தும்.
அடுத்து, நம்முடைய தரகு நிறுவனங்கள் கொடுக்கும் டிப்சை நம்புவதும் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். முதலில் எனக்கு தெரிந்த துறையில் வர்த்தகம் செய்த நான், எனக்கு ஒன்றுமே தெரியாத துறையில் தரகர் சொன்னார் என்று வாங்கியதால் தானே நட்டம் ஏற்பட்டது. முதலீட்டில் ஆராய்வது முக்கியம்,தெரியாத துறையில் கால் வைக்க கூடாது.

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது ஒன்றும் கடினமானது அன்று. ஆனால் சில நெறிமுறைகளை கையாள வேண்டும். எனக்கு உகந்த ஒரு வர்த்தக முறை மற்றவருக்கு பொருத்தமாக இருக்காது. நமக்கு உகந்த முறையைக் கையாளுவதே சிறந்தது.
சாலைகளில் பைக்கில் சிலர் பல வித்தைகள் காட்டுவார்கள். வேகமாக பறப்பார்கள். இதையெல்லாம் செய்து பழக்கமில்லாத நாம் அவர்கள் செய்கிறார்களே என்று வித்தைகள் செய்தால் என்னாகும் ? உடம்பு புண்ணாகி போகும் அல்லவா ? நாம் பல நேரங்களில் நமக்கு உகந்த ஒன்றையே செய்கிறோம். முதலீட்டிலும் அதையே செய்ய வேண்டும்.

பங்கு வர்த்தகத்தில் பல முறைகள் இருக்கின்றது. சிலர் அவ்வப்பொழுது பங்குகளை விற்று லாபம் பார்ப்பார்கள். சிலர் நீண்ட கால முதலீடு செயவதே நல்லது என்று முடிவு செய்வர்கள். நமக்கு லாபம் தரும் ஒரு முறையை நமது மனநிலைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டும். அடுத்தவர்களுக்கு இது தவறாக கூட தெரியலாம். அதனைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. எதுவும் இங்கு விதிமுறையாகாது.

பங்குச் சந்தைப் பற்றி அறிந்து வர்த்தகம் செய்யும் பொழுது தான் அது ஒன்றும் சூதாட்டம் இல்லை, அதன் உயர்வுக்கும் அர்த்தமுள்ளது, சரிவுக்கும் காரணமுள்ளது. அந்த சரிவுகளிலும் கூட நம் பணத்தை பாதுகாத்து, பெருக்கிக் கொள்ள முடியும் என்பது புரிபடும்.


முற்றும் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/03.html"

Sunday 27 September 2009

* சேமிப்பு Vs முதலீடு (Difference between savings and Investments)




சேமிப்பு (Savings)

முதலீடு (Investment)

சேமிப்பு என்பது வருமானத்தின் ஒரு பகுதி. இதன் மூலம் பலனை எதிர்பார்க்காமல், பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு வங்கிகளில் நீண்ட காலத்திற்கு சேமித்து வைப்பது.

(Money will be safe)

லாபம் தரும் என்ற நம்பிக்கையில், வருமானத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை ஏதேனும் ஒரு பொருளின் (நிலம், வீடு, தங்கம், பங்குகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்) மீது முதலீடு செய்வதே இன்வஸ்மெண்ட் ஆகும்.

இதில் பாதுகாப்பு நிறைய, லாபம் குறைவு.

(More safe, less profit)

முதலீடு உங்களுக்கு லாபகரமாகவும் அமையலாம், அதே சமயம் நட்டமும் ஏற்ப்படலாம். மொத்தமாக சொல்லப்போனால் இதில் பாதுகாப்பு குறைவு.

சேமித்த பணத்தை நம் அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

(Liquidity is the key feature)

பொருளாதார அடிப்படையில் சொல்வதென்றால், முதலீடு என்பது தற்போதய உபயோகத்திற்க்கு அல்லாமல் வளமான எதிர் காலத்தை கருத்தில் கொண்டு செய்யப்படுவது. (No Liquidity)

முதலீட்டில் அவசர தேவையை பூர்த்தி செய்யவது சற்று கடினமே. அவ்வாறு செய்ய நினைத்தால், அது நட்டத்திலும் அமையலாம்.

submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/vs-difference-between-savings-and.html"

Saturday 26 September 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 25.09.2009


இலங்கை பங்குச்சந்தை இன்று சிறிதளவு உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.12 சதவீதம் (3.38 புள்ளி) உயர்ந்து 2,892.05 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.59 சதவீதம் (19.22 புள்ளி) உயர்ந்து 3,267.33 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 436.0 மில்லியன் ரூபாய்.

வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 53.28 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 32.1 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 85.38 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். உங்கள் பின்னுட்டல்கள் எதிர்பாக்கப்படுகிறது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/24092009.html"

Thursday 24 September 2009

* எனது பங்குச்சந்தை குரு - வார்ன் பப்ட் (Warren Buffet)

பணக்கார பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் வார்ன், அமெரிக்காவில் உள்ள ஒமகா என்னும்மிடத்தில் (Omaha, Nebraska America), 1930, ஆகஸ்ட் மாதம் (August 30th) தேதி பிறந்தார்.

பங்குச் சந்தையின் மிகப்பெரிய முதலீட்டாரான இவர், பெர்க்சயர் ஹத்வே (Berkshire Hathaway) கம்பெனியின் சி.இ.ஒ (CEO – Chief Executive Officer) ஆவார்.


வார்னும் பங்குச் சந்தையும்: (Warren and Share Market)


பெஞ்சமின் கிரஹாம் (Benjamin Graham) எழுதிய (The Intelligent Investor) என்ற புத்தகத்தை படித்ததில் இருந்து, அவர் வாழ்க்கைப் பாதையே மாரியது. அந்த புத்தகத்தின் மூலம் அவர் தெரிந்து கொண்ட விசயம் “பெரிய நிறுவனங்களிள் முதலீடு செய்வதை விட, வருங்காலத்தில் மிகப்பெரியதாக வரக்கூடிய நிறுவனங்களிள் முதலீடு செய்தால் பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்கலாம்” என்பது தான்.

* 20ஆம் வயதில் தனது எம்.எஸ் பொருளாதாரம் ((MS – Master Of Science in Economics) படிப்பை கொலம்பிய பல்கலை கழகத்தில் ((Columbia University) முடித்த வார்ன் சிறிது காலம் பங்கு தரகராக (Stock Broker) வேலை பார்த்தார்.

* 22ஆம் வயதில் சூசன் தாம்ஸன் (Susan Thompson) என்பவரை மணந்தார்.

* 24ஆம் வயதில் பென்சமின் (Benjamin) என்பவரிடம் ஆண்டுக்கு $12,000 சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார்.

* 26ஆம் வயதில் தனது சொந்த ஊரான ஒமகா-வுக்கு (Omaha) திரும்பிய வார்ன் பஃப்ட் (Warren Buffet) பார்ட்னர்சிப் லிமிட் (Buffett Partnership Ltd) என்னும் கம்பனியை தொடங்கினார்.

* 29ஆம் வயதில் ஆறு கம்பனிகளை நிர்வகித்தார்.

* 32ஆம் வயதில் தனது அணைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து ஒரே நிறுவனமாக மாற்றினார். (Merged six companies into one)

* பஃப்ட் ஜவுளித் துறையில் (Textile) முதலீடு (Invest) செய்தால் லாபம் சம்பாதிக்கலாம் என கண்டறிந்து, பெர்க்சயர் ஹத்வே (Berkshire Hathaway) என்னும் நிறுவனத்தின் பங்குகளை (Shares) $7.60 க்கு/share வாங்கினார்.

* 35ஆம் வயதில் தொடர்ந்து பெர்க்சயர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதன் முலம், அந்நிறுவனத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். (He has become the chairman of Berkshire Hathaway)

* 36ஆம் வயதில் முதன் முறையாக தனியார் நிறுவனங்களான கோன் அன்டு கோ (Kohn and Co), மற்றும் கோச்சைல்டு-ல் (Hochschild) முதலீடு செய்தார்.

* 43ஆம் வயதில் வாசிங்டன் போஸ்ட் கம்பனியின் (Washington post company) பங்குகளை வாங்கி, அந்நிறுவனதின் நிர்வாக உறுப்பினராக பங்கேற்றுக் கொண்டார்.

* 47ஆம் வயதில் மறைமுகமாக பஃப்பலோ ஈவ்னிங் நியூஸ் (Buffalo Evening News) என்ற கம்பனியை $1.02 billion வாங்கினார்.

* 58ஆம் வயதில் கோக்க-கோலா கம்பனியின்(Coca-Cola company) ஏழு சதவீகித பங்குகளை (7 percentage of shares) பில்லியன் டாலர்களுக்கு (Billion dollars) வாங்கினார். இது பஃப்ட்டுக்கு மிகுந்த லாபம் கொடுத்துக் கொண்டிருக்கும் பங்குகளாக விளங்குகியது

* 69ஆம் வயதில் இவர் Money manager என்று கார்ஜன் குருப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. (survey by the Carson Group in 20th century)

* 75ஆம் வயதில் தனது பெர்க்சயர் நிறுவனத்தின் 85% பங்குகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாக கொடுத்தார்.இதில் பெரும்பான்மையான பங்குகள் பில் கேட்ஸ் மணைவின் மெலின்டா கேட்ஸ் பவுண்டேசனுக்கு (Bill and Melinda Gates Foundation) கொடுக்கப்பட்டது.

* 77ஆம் வயதில் உலகின் முதல் பணக்காரர் என்ற பெயர் பெற்றார். (Buffett becomes the richest man in the world according to Forbes) submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/warren-buffet.html"

* பங்கு வர்த்தகம் சூதாட்டமா? என் பார்வையில்-02

பங்குச் சந்தைக்கும் அந்த நுணுக்கம் தேவைப் படுகிறது. பங்குச் சந்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் பணம் இருந்தால் போதுமென முடிவு செய்து களத்தில் இறங்கி விடுவதால் தான் பல நேரங்களில் இழப்பு ஏற்படுகிறது. நமக்கு இழப்பு ஏற்படும் பொழுது தான் பங்குச் சந்தை சூதாட்டமாக தெரிகிறது.

பங்குச் சந்தையில் நான் முதலில் Margin Trading or Intraday Trading ல் இருந்து தான் ஆரம்பித்தேன். ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்று விடுவது தான் மார்ஜின் டிரேடிங். நான் செய்த முதல் வர்த்தகத்திலேயே, அரை மணி நேரத்தில் 450 ரூபாய் லாபம். அடுத்தடுத்த நாட்களில் நான் செய்த சில வர்த்தகங்களும் லாபத்தில் தான் முடிவடைந்தது. கொஞ்ச நாள் என் கால் தரையில் படவே இல்லை. காற்றில் மிதந்து கொண்டே இருப்பேன். நமக்கு பங்குச் சந்தையின் நுணுக்கம் தெரிந்து விட்டது என்றே முடிவு செய்தேன்.


ஒரு நாள் என்னுடைய தரகர், ஒரு நிறுவனம் இன்று லாபகரமாக இருக்குமென்றார். பேராசை யாரை விட்டது. நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற முடிவில், இது வரை 100, 200 என்று குறைந்த எண்ணிக்கையிலேயே பங்குகளை வாங்கி வந்த நான் அன்று 500 பங்குகளை வாங்கினேன். என்னுடைய மொத்த Exposure limit க்கு பங்குகளை வாங்கி விட்டேன்.

நான் எப்பொழுதும் DIST,SLTL,CABO போன்ற எனக்கு தெரிந்த பங்குகளில் தான் வர்த்தகம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் பேராசை, தரகரின் டிப்ஸ் நம்பி என்னை அந்த கம்பனிப் பக்கம் இழுத்துச் சென்றது.

அன்று பார்த்து அந்த கம்பனி பங்குகள் சரியத் தொடங்கின. சரி, எப்படியும் விலை ஏறும் என்று எதிர்பார்த்து காத்திருந்து விட்டு நான் விற்ற பொழுது, இது வரைப் பெற்ற லாபம் அனைத்தும் காணாமல் போனது மட்டுமில்லாமல், நட்டமும் ஏற்பட்டது.


பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று முடிவு செய்து கொஞ்ச நாள் சந்தையில் இருந்து ஓடி விட்டேன்.



நேரம்
கிடைக்கும் போது என் பார்வையில்-03(இறுதி பார்வை)தொடரும் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/02_23.html"

Tuesday 22 September 2009

* பங்கு வர்த்தகம் சூதாட்டமா? என் பார்வையில்-01

பல நேரங்களில், சந்தையின் போக்குப் பற்றி புரிபடாமல் போகும் பொழுது பங்கு வர்த்தகத்தை சூதாட்டம் என்று சொல்கிறார்கள். சந்தையைப் பற்றி அறியாதவர்களுக்குத் தான் அதன் போக்கு புரிபடாமல் போகும், பங்குச் சந்தை சூதாட்டமாக தெரியும்.

சீட்டுக்கட்டு போன்ற ஒரு சூதாட்டத்ததில் கூட சீட்டுக்கட்டுப் பற்றி அதிகம் தெரியாதவர்களால் அதில் வெற்றி பெற்று விட முடியுமா என்ன ? அதில் வெற்றி பெறக் கூட சீட்டுக்கட்டுப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

சீட்டுக்கட்டு விளையாடும் பொழுது, நமக்கு வரும் சீட்டில் ஜோக்கர் உள்ளதா, ரம்மி சேருமா என்று முதலில் சோதிப்போம். ரம்மி சேரக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே விளையாடுவோம். இங்குமங்குமாக பல எண்கள் இருந்தால் சீட்டைக் கீழே வைத்து விட்டு, அதற்கு தரப்படும் 20புள்ளிகளை சந்தோசமாக வாங்கிக் கொண்டு, நம் பக்கத்தில் இருப்பவர் முழுப் புள்ளிகளும் வாங்க வேண்டுமென வேண்டிக் கொள்வோம். சீட்டுக் கட்டில் ஜோக்கர் இருந்து ரம்மி சேரும் வாய்ப்பு இருந்தால் மேற்கொண்டு விளையாடுவோம். விளையாட ஆரம்பித்து நம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தால் பாதியிலேயே விலகிக் கொண்டு அதனால் கிடைக்கும் குறைந்தப் புள்ளிகளை பெற்றுக் கொண்டு, 80ல் இருந்து தப்பித்து, கூடிய வரையில் ஆட்டத்தில் இருந்து வெளியேறி விடாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். அது மட்டுமின்றி எதிராளி எந்த சீட்டுகளை எடுக்கிறார்கள், என்பதைக் கொண்டு அவர்களுக்கு ரம்மி சேர்ந்து விடாதவாறு சீட்டுகளை இறக்குவோம். இதுப் போன்ற பல நுட்பங்களைக் கையாண்டால் தான் வெற்றி பெற இயலும்.




சீட்டுக்கட்டுப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களால் இவ்வாறு விளையாடமுடியுமா ? முதலில் தன்னிடம் இருக்கின்ற சீட்டுகளைக் கொண்டு விளையாடலாமா, வேண்டாமா என்று அவர்களால் முடிவு செய்ய இயலாது. பல நேரங்களில் விளையாடி தான் பார்ப்போமே என்று விளையாடுவார்கள். ரம்மி சேரா விட்டால் விலகி விடலாம். ஆனால் சேர்ந்து விடும் என்ற எண்ணத்திலேயே விளையாடிக் கொண்டிருப்பார்கள். பிறகு முழுப்புள்ளிகள் கிடைக்கும் பொழுது நொந்துப் போவார்கள். அற்புதமான சீட்டுகளே கிடைத்தாலும், அடுத்தவர்கள் சீட்டுகளை இறக்குவதை கணித்து ஆடினால் தான் வெற்றி பெற இயலும். இல்லாவிட்டால் தோல்வி தான்.

சீட்டுக்கட்டுப் போன்ற சூதாட்டங்களுக்கே இவ்வளவு நுணுக்கங்கள் தேவைப்படுகிறது.

விளையாட்டு முதல் தொழில் வரை ஒரு துறையைப் பற்றி நன்கு தெரிந்தால் தான் அதில் வெற்றிப் பெற முடியும். நம் சிறிய வயதில் கிரிக்கெட் விளையாடி இருப்போம். எந்தப் பந்து வந்தால் எப்படி அடிப்பது என்பதெல்லாம் நமக்கு தெரியாது. பந்து வந்தால் ஓங்கி ஒரே அடி. சில நேரம் பந்து பறக்கும். சில நேரங்களில் நம்முடைய ஸ்டெம்ப் பறந்து போகும். பிறகு தான் இந்தப் பந்தை தடுத்து ஆடி இருக்கலாமோ என்று தோன்றும். அடுத்த முறை அதை செயல் படுத்துவோம்.

நேரம் கிடைக்கும் போது என் பார்வையில்-02 தொடரும் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/blog-post_21.html"

Monday 21 September 2009

* பங்கு முதலீட்டில் பணம் சம்பாதிக்க சில விதிகள்


பங்குகளில் பணம் சம்பாதிக்க இரண்டே விதிகள் தான் உள்ளதாக Warren Buffett கூறுகிறார். இவர் கூறிய எளிய விதியை எப்பொழுதும் மனதில் நிறுத்தினால் வெற்றி நம் பக்கம் தான். அப்படி என்ன விதி அது.

விதி 1 : நம் பணத்தை எப்பொழுதும் இழந்து விடக் கூடாது

விதி 2 : முதல் விதியை மறந்து விடக்கூடாது

மிக எளிதான விதி, ஆனால் பின்பற்ற மிகவும் கடினமான ஒன்று.

முதலீடு செய்யும் பணத்தை மிகத் தெளிவாக ஆராய்ந்தப் பின்பே முதலீடு செய்ய வேண்டும் என்பது எல்லோரும் சொல்வது தான். ஆனால் எப்படி ஆராய்வது என்பது தான் கடினமான ஒன்று.

பலர் பல வழிகளை கையாண்டுள்ளனர். வெற்றியும் பெற்றுள்ளனர். பலர் அதைப் பின்பற்ற முயன்று தோல்வியும் கண்டுள்ளனர். அவரவர்க்கு ஏற்ற முறைகளை, நம் உள்மனது சொல்வதை ஏற்று முதலீடு செய்யும் பொழுது பலன் நிச்சயம் கிடைக்கும்.

வாரன் பப்பட் மிகக் குறைந்த விலையுள்ள பங்குகளை, ஆனால் மிகப் பலமான அடித்தளம் உள்ள நிறுவனங்களின் பங்குகளை, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Market Captitalization) குறைவாக இருக்கும் பொழுது தான் வாங்குவார்.

உதாரணமாக 10 Billion மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 Billion இருந்தால், அந்தப் பங்குகளின் விலை மிகவும் குறைவாக இருப்பதாகத் தானே பொருள் (Undervalued Stocks). அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு நிச்சயம் பத்து Billion எட்ட வேண்டும். குறைந்தது அதன் மதிப்பை எட்டி விடும் தூரத்தில் நெருங்கும். அந்தப் பங்குகளில் பணத்தை முதலீடு செய்தால் பணம் பெருகும் என்றார் வாரன் பப்பட். இதைத் தான் Value Investing என்று சொல்வார்கள். இதில் பல கணக்குகள் உள்ளன. அந்த நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை ஆய்வு செய்தல், பங்குகளின் கடந்த கால செயல்பாடுகளை ஆராய்தல் என நிறைய கட்டங்களை கடந்த பிறகே முதலீடு செய்ய வேண்டும்.

இந்த முறையில் வாரன் பப்பட அடைந்த குறிப்பிடத்தகுந்த வெற்றி, அவர் .com நிறுவனங்களில் முதலீடு செய்யவேயில்லை. அந்த நிறுவனங்களின் அடித்தளம் சரியில்லை என்று கருதினார். அந்தக் கருத்தும் நிருபிக்கப்பட்டுவிட்டது

சிலர் பங்குக் குறியீடுகளில் உள்ளப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்வார்கள். சிறந்த நிறுவனங்களின் பங்குகள் மட்டும் தான் பங்குக் குறியீட்டில் இடம் பெறும் என்பதால் நம்முடைய முதலீடு பெரிய அளவில் சரிந்து போகக் கூடிய வாய்ப்புகள் இல்லை.

அதைப் போலவே நமக்கு நன்கு அறிந்த துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் நம்முடைய முதலீடு எந்தப் போக்கில் செல்லக் கூடும் என்று நம்மால் கண்டுகொள்ள முடியும்.

மென்பொருள் துறையில் உள்ளவர்கள் Pharmaceutical பங்குகளை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கடந்த மாதம் பல மருந்துகளின் புரியாத பெயர்களைச் சொல்லி, இந்த மருந்துகளின் சந்தை விலை, அதன் தயாரிப்புச் செலவை விட மிக அதிகமாக இருப்பதாகவும், சாதாரண மக்களின் பாரத்தை குறைக்கும் பொருட்டு இதன் விலையைக் குறைக்க அரசு முயற்சி செய்யும் என்றும் அறிவிப்பு வெளியாகியது.

மென்பொருள் துறையில் உள்ளவர்கள், தாம் பங்குகள் வாங்கிய நிறுவனம், அந்த மருந்துகளை தயாரிக்கிறதா எனத் தெரிந்து கொள்வதற்குள் பங்குகள் விலைச் சரிந்துப் போயிருக்கும். ஆனால் அந்தத் துறையில் உள்ள ஒருவர் மிகச் சுலபமாக அதனை அறிந்திருப்பார். அதற்கேற்ப பங்குகளை விற்றிருப்பார்.

பங்கு வர்த்தகத்தில் எளிய பல வழிகளை பல வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள். நாமாக சென்று பணத்தை இழந்து, அனுபவ பாடம் கற்பதை விட இந்த விழிகளைப் பின்பற்றலாம். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/blog-post_20.html"

* மியூச்சுவல் யூனிட்களை எப்பொழுது வாங்கலாம் ?. (When to purchase units)

யூனிட்களை நாம் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம், மியூச்சுவல் பஃண்ட் நிறுவனங்கள் அதை முதன் முதலாக வெளியிடும் பொழுதோ அல்லது அதற்கு பிறகு கூடவோ வாங்கிக் கொள்ளலாம். யூனிட்கள் (units) முதன் முதலாக வெளியிடும் பொழுது முகப்பு விலைக்கு (Face value) கிடைக்கும். அந்த நிதியினைக் (funds) கொண்டு வாங்கிய பங்குகளின் விலை ஏற்ற இறங்கங்களை பொறுத்து யூனிட்களின் விலை மாறுபடும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/when-to-purchase-units.html"

Friday 18 September 2009

* மியூட்சுவல் ஃபண்ட் ஆஃபர் டாக்குமண்ட் என்றால் என்ன ? (Mutual Funds Offer Document)

மியூட்சுவல் பஃண்ட் நிறுவனங்கள், தாங்கள் திரட்டிய நிதியை (Funds) பங்குச்சந்தையில் எந்தெந்த துறைகளில் (Sectors) முதலீடு செய்வார்கள் என்பதை பற்றியும், அவ்வாறு முதலீடு செய்யும்பொழுது எவ்வளவு வட்டி (Interest) கிடைக்கும் என்பதையும் பற்றியும், முதலீட்டை சார்ந்த விதிமுறைகளை (Terms & Conditions) பற்றியும் விளக்கும் தொகுப்பே “மியூட்சுவல் ஃபண்ட் ஆஃபர் டாக்குமண்ட்” ஆகும். எந்த ஒரு மியூட்சுவல் ஃபண்ட்-யில் முதலீடு செய்வதற்கு முன், அதனுடைய ஆஃபர் டாக்குமண்டை படித்து புரிந்து கொள்வது மிகவும் அவசியம். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/mutual-funds-offer-document.html"

Thursday 17 September 2009

* மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் உள்ள ரிஸ்க் என்னென்ன ? (What are the risks involved in mutual fund investments?)

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க், பங்குச்சந்தையை சார்ந்தே அமையும் (Mutual funds high risk is based on share market). எப்போதெல்லாம் பங்குச்சந்தை சரிவை சந்திக்குமோ அப்போதல்லாம் ஈக்விட்டி நிதிகளும் சரிவுவைக் காணும் (Whenever stock market slides down, equity funds also fall down).

ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிபுணர்களின் ஃபண்ட் மேனேஜ்மெண்ட் திறமை முலம் பெருமளவு ரிஸ்க் குறைக்கப்படும் (Mutual funds - Professional Fund management can reduce the chance of risk). submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/what-are-risks-involved-in-mutual-fund.html"

* விரைவில் உங்கள் பங்குச்சந்தை - ஸ்ரீலங்காவில் நான் ஷேர் மார்க்கெட் துறைக்கு வர காரணங்களும், ஷேர் மார்க்கெட் வாழ்க்கையில் சில முக்கியமான தருணங்களும்.

submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/blog-post_17.html"

Tuesday 15 September 2009

* பங்குச்சந்தை முதலீட்டை வீட மியூச்சுவல் ஃபண்ட் பாதுகாப்பானதா? (Is mutual fund investment safer than stock market?)

இல்லை. அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பாதுகாப்பானதல்ல. பொதுவாக சொல்லப்போனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பங்குச்சந்தை முதலீடுகளைப் போல அதே ரிஸ்க் (risk) கொண்டவைதான். ஆனால், பங்குச்சந்தை முதலீட்டைப் போல அல்லாமல், மியூச்சுவல் ஃபண்டில் சந்தையைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர்களால் முதலீடு செய்யப்படுவதால், சொஞ்சம் ரிஸ்க் குறைவு. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/is-mutual-fund-investment-safer-than.html"

Sunday 13 September 2009

* மியூசுவல் ஃபண்ட்ஸ் (Mutual Funds)

மியூச்சுவல் ஃபண்ட் என்பது தமிழில் பரஸ்பர நிதிகள் என்று அழைக்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டும் பங்குச்சந்தையை (Share market) போன்றதுதான். ஆனால், இதில் ஈடுபடுவதற்கு பங்குச்சந்தையைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஏன் ? எப்படி என்கிறீர்களா?…. நமக்குதானே தெரியாது, ஆனால் அதைப் பற்றி தெரிந்தவர்களிடம் கொடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்ய சொன்னால், நன்றாகத்தானே இருக்கும்!. அப்படிச் செய்தால், அதுதான் மியூச்சுவல் ஃபண்ட்.

இன்னும் சற்று விளக்கமாக சொல்லப்போனால், மியூச்சுவல் ஃபண்டை ஒரு நிறுவனமாக எடுத்துக் கொள்வோம். இதில் நம்மை போல பல முதலீட்டாளர்களை ஒன்று சேர்த்து, அதன் மூலம் திரட்டப்பட்ட தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். இதனால் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், அவரவர் கொடுத்த தொகைக் ஏற்ப யூனிட்டுகள் (Units) எனப்படும் அலகுகளை கொடுத்து விடுவார்கள். யூனிட் என்றால் என்ன என்பதை பார்ப்பதற்கு முன், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விசயங்கள். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/mutual-funds.html"

* அன்டர் சப்ஸ்கிரைப்டு என்றால் என்ன ? (What is meant by Under-subscribed?)

ஒரு நிறுவனம் புதிய பங்குகளை (Issue stocks) வெளியிடும் பொழுது, அதற்கு முதலீட்டாளர்களின் போதிய வரவேற்பில்லாமல் ஒரு குறிப்பிட்ட சதவிகதற்கு (percentage) பங்குகள் கோரப்பட வில்லை என்றால், அது அன்டர் சப்ஸ்கிரைப்டு (Under subscribed) என்பார்கள். C.S.E விதிமுறைப்படி, அவ்வாறான பங்கு வெளியீட்டை ரத்து (Cancel) செய்துவிட்டு, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/what-is-meant-by-under-subscribed.html"

* பங்குச்சந்தையில் ஓவர்-சப்ஸ்கிரைப்டு என்றால் என்ன? (What is meant by over subscribed?)

உதாரணமாக ஹட்டன் நேஷனல் பேங்க் (Hatton National Bank -H.NB) நிறுவனம் ஐந்தாயிரம் மில்லியன் ருபாய்க்கு பங்குகள்(Issues stock)வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். H.N.B சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாகும்.அப்படியொரு நிறுவனம் புதிய பங்குகள் வெளியிடுகிறார்கள் என்றால் அதை வாங்க ஏகப்பட்ட கிராக்கி ஏற்ப்படும்.நீ நான் என்று நிறையபேர் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்க விண்ணப்பிப்பார்கள். இப்பொழுது ஐந்தாயிரம் மில்லியன் ருபாய்க்கு பங்குகள் வெளியிட்ட H.N.B க்கு ஒன்பாதாயிரம் மில்லியன் ருபாய்க்கு பங்குகள்கோரப்பட்டு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளது என்றால் அதை ஓவர் சப்ஸ்கிரைப்டு (Over subscribed) என்பார்கள்.

அது எப்படி என்கிறீர்களா?........ இப்படிப்பட்ட பெரிய லாபம்கொழிக்கும் நிறுவனங்கள் புதிய பங்குகள் வெளியிடுகிறாகள் என்றால் சும்மாவா நிறைய பேர் விண்ணப்பம் செய்வார்கள் இப்படிபட்ட உண்மையான சம்பவங்கள் ஏராளம். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/what-is-meant-by-over-subscribed.html"

* அலாட்மெண்ட் என்றால் என்ன? (What is meant by Allotment?)

உதாரணத்திற்கு ஜான் கீல்ல்ஸ் ஹோல்டிங்க்ஸ் (JKH) ஆயிரம் மில்லியன் ருபாய்க்கு பங்குகள் வெளியிடுகிறார்கள் (Issues stocks) என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறான செய்தி வெளியானதும், பங்குகளை (shares) வாங்க நிறைய பேர் விண்ணப்பம் செய்வார்கள். சிலர் நூறு பங்குகள் வேண்டியும், சிலர் ஆயிரம் பங்குகள் வேண்டியும் விண்ணப்பங்கள் வந்து குவியும். அதுவும் ஜான் கீல்ல்ஸ் ஹோல்டிங்க்ஸ் (JKH) போன்ற பெரிய நிறுவனம் என்றால் சொல்லவா வேண்டும்.

அப்படி கோரப்பட்ட பங்குகளின் மதிப்பு ஆயிரம் மில்லியன் மேல் குவிந்துள்ளது என்றால் பங்குகளை அலாட்மெண்ட் முறையில் ஒதுக்குவார்கள். ஆதாவது ஒருவர் நூறு பங்குகள் கோரினால் நூறுமே கிடைக்காது, ஐம்பது கிடைக்கலாம், இருபது பங்குகள் கிடைக்கலாம். ஏன் சில நேரங்களில் கிடைக்காமலே கூட போகலாம். இவ்வாறு ஒதுக்கப்படும் பங்குகளை அலாட்மெண்ட் எனபார்கள்.


என் நண்பர் 2005 இல் வெளியான டயலாக் (Dialog Telekom) பங்குகளை வாங்க விண்ணப்பம் செய்தார்.அவரைப்போல நிறைய பேர் ஆர்வமான விண்ணப்பித்தார்கள். இறுதியில் டயலாக் பங்குகள் அவருக்கு கிடைக்கவில்லை. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/what-is-meant-by-allotment.html"

Thursday 10 September 2009

* Prospectus என்றால் என்ன ?

ஒரு நிறுவனம் பங்குகளை வெளியிடும் முன் prospectus தயார் செய்ய வேண்டும். அதில் கீழ் காணும் விவரங்களை விளக்கப்பட்டிருக்க வேண்டும்,

* வெளியிடப்படும் பங்களைப்பற்றி முழு விவரம். (Details of share)
* திரட்ட படும் பணத்தின் மூலம் என்ன வியாபாரம் செய்வார்கள்.
* அதன் மூலம் அவர்கள் பெற நினைக்கும் லாபம்.
* லாபத்தை பகிர்ந்து எவ்வளவு டிவிடண்ட் தருவார்கள். (What is the dividend?)
* கடந்த காலத்தில் எவ்வளவு டிவிடண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
* போனஸ் பங்குகள் கொடுத்திருக்கிறர்களா. (Bonus share)

சரி அதனால் முதலீட்டாளருக்கு என்ன பயன் என்கிறீர்களா?… சரியான கேள்விதான்…. ஒரு முதலீட்டாளர் எந்த பங்கை வாங்கலாம் என்று முடிவு செய்வதற்கு முன் இவ்வறான prospectus படித்து தெரிந்து கொள்வது மிக அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கினால் நமக்கு லாபம் கிடைக்குமா?, டிவிடண்ட் கிடைக்குமா?, போனஸ் பங்குகள் கிடைக்குமா? போன்ற கேள்விகளுக்கு prospectus ஓரளவுக்கு பதில் சொல்லி விடும். கவனம், சில நேரங்களில் நட்டமும் ஏற்ப்படலாம், அது சந்தையின் நிலவரத்தை பொறுத்து மாறுபடும். Prospectus தயார் செய்வதற்கு சில விதி முறைகள் உள்ளது. இவ்விதி முறைகளை (CSE) வகுத்துள்ளார்கள் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/prospectus.html"

* வித்-பிரிமியம் என்றால் என்ன ? (What is meant by With-Premium?)

உதாரணத்திற்கு ஜான் கீல்ல்ஸ் ஹோல்டிங்க்ஸ்(JKH) நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். அவர்கள் சந்தையில் மிகப்பெரிய நிறுவனம். அது மட்டுமில்ல லாபம் கொழிக்கும் நிறுவனம் என்று சொன்னால் மிகையாகாது. அப்படிபட்ட நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடுகிறார்கள் என்றால் அதற்கு ஏகப்பட்ட கிராக்கி உண்டு. நீ-நான் என்று போட்டி போட்டு கொண்டு வாங்குவார்கள். அவ்வாறான நிறுவனங்கள் பத்து ருபாய் பங்குக்கு நூறு ருபாய் அதிக விலை (Rs. 100 more) வைத்து விற்பார்கள். அதாவது நூற்றிபத்து ருபாய் (Rs 10+100=110) என்று. இதை வித்-பிரிமியம் (With-Premium) எனபார்கள். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/what-is-meant-by-with-premium.html"

* முகப்பு விலை என்றால் என்ன? (What is meant by Face Value?)

IPO என்றால் என்ன என்பதை பார்த்தோம். இதில், ஒரு நிறுவனம் முதன் முதலாக பங்குகளை வெளியிடும்பொழுது அதற்கு முகப்பு விலை ஒன்றை நிர்ணயித்து வெளியிடுவார்கள்.

உதாரணத்திற்கு, (SAS) என்ற நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம் (நினைவில் இருக்கட்டும், இது உதாரணமே !). இந்நிறுவனத்தை நடத்த அவர்களுக்கு பணம் தேவை. அதை திரட்ட புதிய பங்குகளை (Shares) வெளியிடுவார்கள். அவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு முகப்பு விலையை நிர்ணயம் செய்து வெளியிடுவார்கள், ஒரு பங்குகின் விலை ருபாய் பத்து (Rs. 10) என்று. அதாவது பத்து பங்குகள் வாங்கினால் நூறு ருபாய். இதை சந்தையில் யார் வேண்டுமானலும் வாங்கிக்கொள்ளலாம். அதென்ன பத்து ருபாய் பங்கு என்று உங்களுக்கு தோன்றுமே !.. அதையும் பார்ப்போம்.

மேலே கூறப்பட்ட SAS என்பது மிக சிறிய நிறுவனம். அந்நிறுவனம் பங்குகள் வெளியிடும்பொழுது, ஒரு பங்கின் விலை பத்து ருபாய் என்று சிறிய தொகையை நிர்ணயம் செய்வார்கள். ஏனென்றால் அந்நிறுவனத்தை நம்பி யாரும் அதிக விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். அது போலதான் நிறைய சிறு நிறுவனங்கள் குறைந்த விலையில் பங்குகளை வெளியிடுவார்கள். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/what-is-meant-by-face-value.html"

* தொழில் அடிப்படை (Business Basics)

இன்றைய தினங்களில் செய்திதாள்களிலும், தொலைகாட்சிகளிலும் அதிகமாக பேசப்படுகின்ற செய்தி பங்குச்சந்தை. அதை நீங்களே கூட படித்திருக்கலாம், ஏன் இறங்கிதான் பார்ப்போமே? என்றும் தோன்றிருக்கலாம். ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாய் இருப்பது பங்குச்சந்தையை பற்றி போதிய தெளிவுயின்மையே காரணம். சரி, அப்படி என்னதான் அதில் இருக்கிறது?… சற்று உள்ளே சென்று பார்ப்போம் வாருங்கள்.

பங்குச்சந்தையை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விசயங்கள்

நீங்கள் தொடங்கும் ஒரு தொழிலுக்கு (Business) தேவைப்படும் முதலே கேப்பிட்டல் ஆகும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு வியாபாரம் ஆரம்பித்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இவ்வியாபாரத்திற்கு தேவையான பொருட்கள், கடை அமைப்பதற்க்கான இடம், போக்குவரத்து போன்றவற்றிக்காக செலவிடும் தொகையே கேப்பிட்டல் ஆகும்.

All the money that you invest to start a business is called as capital.


கேப்பிட்டலை கீழ்கானும் வகைகளில் சேகரிக்கலாம்,

* தொழில் தொடங்குவதற்கு தேவையான பணத்தை தாமே முதலீடு செய்வது. (Self Investment – Full ownership)

* தொழில் தொடங்குவதற்கு தேவையான முதலை கடனாக (debt) பெறுவது. இம்முறைக்கு, குறிப்பிட்ட தொகையை வட்டியாக (Interest) செலுத்த வேண்டும்.

மேற்க்கண்ட இரு முறைகளில் தொடங்கப்படும் தொழிலில் பெறப்படும் லாபம் (Profit), நட்டம் (Loss) போன்றவைகள் உங்களையே சாரும் (Self responsibility).

* முதல் திரட்டுவதற்கு நீங்கள் பங்குகள் (Share) வெளியிடலாம். இம்முறையில் பெறப்படும் லாபம் மற்றும் நட்டம் ஆகியவற்றை பங்குதாரர்களிடம் (Share Holder) பகிர்ந்து கொள்ள வேண்டும். (Like Partnership)

கம்பனிகள் கேப்பிட்டலை/நிதி திரட்டுவதற்காக பங்குகளை வெளியிடுவார்கள். (Issue Stocks)

பங்குகள் வெளியிடுவதனால் ஏற்படும் நன்மைகள், (Advantages of issuing stocks)

* கடன் (Loan) வாங்குவதை விட அதிகமான கேப்பிட்டலை / நிதியை (fund) திரட்டலாம்.

* திரட்டபட்ட நிதிக்கு, வட்டி (Interest) மற்றும் முழுத்தொகை கட்ட வேண்டிய அவசியமில்லை. (Need not pay back money/interest)

பங்குகள் வெளியிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை,

* பங்குகள் வெளியிடுவதனால், அந்நிறுவனம் தனியொருவருக்கு மட்டும் சொந்தம் ஆகாமல் பங்கு நிறுவனம் ஆகிவிடும். இதனால் நிறுவனத்தின் லாபம் நட்டங்களில் பங்குதாரர்களுக்கும் (share holder) சம உரிமை உண்டு.

ஒரு கம்பனியின் பங்குகளை வாங்குவதன் முலம், அக்கம்பனி ஈட்டும் லாபதில் பங்குதாரருக்கும் பங்கு உண்டு. இதனால் அக்கம்பனி வளர்ச்சி அடைய, அடைய பங்கின் மதிப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உதாரணத்திற்கு, ஜான் கீல்ல்ஸ் ஹோல்டிங் (JKH – Leading Conglomerate firm in SriLanka) நிறுவனத்தின் நூறு (100) பங்குகளை நூறு(Rs.100) ருபாய் வீதம் (per) பத்தாயிரத்திற்கு (Rs.10,000) வாங்கி உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது ஜான் கீல்ல்ஸ் ஹோல்டிங் (JKH) நிறுவனத்தின் வளர்ச்சி காரணமாக ஒரு பங்கின் விலை ருபாய் நுற்றியிருபது (Rs.120) கூடி உள்ளது என்று எடுத்துக்கொண்டால், நீங்கள் வைத்துள்ள மொத்த பங்குகளின் மதிப்பு பனிரெண்டாயிரம் ருபாய் (Rs.12,000). இதனால் நீங்கள் பெற்ற லாபம் இரண்டாயிரம் ருபாய் (Rs.2000).

ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு (Issuing stocks to public) வெளியிடுமிடம் முதன்மை பங்குச்சந்தை (Primary Market) ஆகும். இதற்கு .பி. (IPO) என்று பொருள்.

The first sale of stocks to the public is called an Initial Public Offer (IPO), and occurs on the primary market. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/business-basics.html"

Tuesday 8 September 2009

* பங்குகளின் விலை மாறுபடுவதற்கு காரணம் என்ன? (What Causes Stock Prices To Change?)

சந்தையின் நிலையை பொறுத்து பங்குகளின் விலை மாறுபடும். உதாரணமாக, அதிக மக்கள் ஒரு பங்கை (stock) வாங்க முன்வருகிறார்கள் என்றால் அப்பங்கின் விலை அதிகரிக்கும். அதாவது, வாங்குவது அதிகரித்து விற்பது குறைகிறது. (What causes stock prices to change)

அதிக மக்கள் ஒரு பங்கை வாங்குவதற்கு பதிலாக விற்கிறார்கள் என்றால், அப்பங்கின் விலை குறையும். அதாவது வாங்குவது குறைவு, விற்பது அதிகம். (When the selling is more, price falls down)

சற்று எளிமையாக சொல்லப்போனால், மக்கள் அதிகளவில் வெங்காயம் வாங்குகிறார்கள் என்றால் அதன் தேவை அதிகரித்து, விலை ஏறும். அதே வெங்காயத்தின் தேவை குறைந்தால், விலையும் குறையும். அதே கதைதான் பங்குச்சந்தையிலும்.

சரி, முதலீட்டாளர்கள் ஒரு பங்கை வாங்க வேண்டுமென்றும், வேண்டாமென்றும் எவ்வாறு முடிவெடுக்கிறார்கள். (How investor decides to buy/not to buy particular stock) இதற்கு பல காரணங்கள் உண்டு. பெறும்பாலும் அது முதலீட்டாளரின் மன நிலையை பொறுத்து.

சரி சில காரணங்களைத்தான் பார்ப்போமே !

ஒரு கம்பனி மேல் கூறப்படும் செய்தி (what news is positive for a company and what news is negative). அது நல்ல செய்தியாகவும் இருக்கலாம், கெட்ட செய்தியாகவும் இருக்கலாம். பொதுவாக முதலீட்டாளர்கள் ஒரு கம்பனியின் மேல் வைத்துள்ள நம்பிக்கையை பொறுத்தே, அக்கம்பனியின் பங்கு ஏற்றத்தையோ, வீழ்ச்சியையோ சந்திக்கும்.

ஒரு கம்பனியின் சந்தை மதிப்பு. (Market capitalization)

ஒரு கம்பனியின் சொத்து, அதன் சந்தை மதிப்பை பொறுத்து. அதாவது ஒரு பங்கின் விலை * மொத்த பங்குகள். (price per share * no of shares)

உதாரணமாக, ஒரு கம்பனி (Company A) பங்கின் விலை $100 என்று வைத்துக்கொள்வோம். மொத்தம் 1 Million பங்குகள் (shares) என்றால் அக்கம்பனியின் மதிப்பு என்பது $100 * 1 million shares = $100 millionஆகும்.


அதே மற்றொரு கம்பனி (Company S) பங்கின் விலை $50 என்று வைத்துக்கொள்வோம். மொத்த 5 million பங்குகள் என்றால், அக்கம்பனியின் மதிப்பு $50 * 5 million shares = $250 million ஆகும். அதாவது முன்பு கூறப்பட்ட (Company A) கம்பனியை வீட இதற்கு (Company S) சந்தையில் மவுசு அதிகம்.


கம்பனியின் ஆண்டு வருமானம். (Company Earnings)
ஒரு கம்பனி லாபகரமாகவும், அதிக வருமானம் ஈட்டுகிறது என்றால் சந்தையில் நீண்ட காலம் நிலைக்க கூடியது என்று அர்த்தம்.

அதே ஒரு கம்பனி நட்டத்தில் ஓடுகிறது என்றால், அக்கம்பனியின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் தயங்குவார்கள். அவ்வறான நிறுவனங்கள் சந்தையில் நிலைக்க முடியாது.

இதற்காகத்தான் பொது நிறுவனங்கள் ஒவ்வொரு காலண்டிற்கும் லாபம்/நட்டங்களை வெளியிடுவார்கள். அவ்வாறான முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கு வகையில் இருந்தால், அக்கம்பனி பங்குகளின் விலை ஏறும். அதே எதிர்பார்த்த அளவிற்கு முடிவுகள் இல்லாமல் அதிர்ச்சியை கொடுக்கும் என்றால் பங்குகளின் விலை இறங்கும்.

பங்குகளின் விலை ஏற்றத்திற்கும் வீழ்ச்சிக்கும் கம்பனியின் காலாண்டு முடிவுகளை (Quarterly results) மட்டும் சாராது, வேறு நிறைய காரணங்களும் அடங்கும். அவ்வாறான சில காரணங்கள் பின்வருமாறு,

-நாட்டின் பொருளாதார நிலையை பொறுத்து.

-பணவீக்க விகிதத்தை பொறுத்து. (Inflation)

-நிதி அமைச்சகத்தின் பொருளாதார கொள்கைகள்.

-அந்நிய முதலீடுகள். (Foreign Investments)

-கச்சா எண்னை விலை ஏற்றம், இறக்கத்தை பொறுத்து. (Oil prices)

-பருவ மழை பெய்ய வில்லை என்றால் தானிய உற்பத்தி குறைந்து, அதை சார்ந்த பங்குகள் பாதிப்படையும்.

-மத்திய வங்கி வெளியிடும் செய்திகள். (Central Bank news)

-புயல், சுனாமி, வெள்ளம் போன்ற பேரழிவுகள். (Natural disaster)

-அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள். (American economical status)

-அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை.

என்று எவறுமே கனிக்க முடியாத நிறைய விசயங்கள் பங்குச்சந்தை பாதிக்கும். மேலே குறிப்பிட்டது போல இவை சில காரணங்களே. பங்குச்சந்தையின் நிலை கனிப்பது சற்று கடினமான விசயம் என்று நிறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/what-causes-stock-prices-to-change.html"

Sunday 6 September 2009

* பங்குச்சந்தையின் போக்கை பொறுத்து, மார்க்கெட் இரண்டு வகைகளாக பிரிக்கலாம். புல் மார்க்கெட் (BULL Market) மற்றும் பேர் மார்க்கெட் (Bear Market) ஆகும்.

புல் மார்க்கெட் என்றால் என்ன ? (What is meant by BULL market?)

BULL Marketபுல் மார்க்கெட் என்றால், பங்குச்சந்தை ஆரோக்கியமான நிலையில் உள்ளதை குறிக்கும்.

பொதுவாக கீழே விளக்கப்பட்ட காரணங்களால் பங்குச்சந்தை புல் பேஸ்சை/புல் மார்க்கெட் நிலையை அடையும்.
*பங்குகளின் விலை உயர்வு. (Increase in stock prices)
* பொருளாதார முன்னேற்றம் (Increase in economic growth)
* அதிக முதலீடுகள் (More Investor confidence)

பேர் மார்க்கெட் என்றால் என்ன ? (What is meant by BEAR market?)

பேர் மார்க்கெட் என்பது புல் மார்க்கெட்-க்கு எதிர்மறை ஆனாது. (Bear market is opposite to Bull market)

பொதுவாக கீழே விளக்கப்பட்ட காரணங்களால் பங்குச்சந்தை புல் பேர் பேஸ்சை/பேர் மார்க்கெட் நிலையை அடையும்.

* பொருளாதார பின்னடைவு (Downfall in economic growth)
* ஒரு கம்பனியோ, செக்டாரோ, மார்கெட்டோ சரிவை சந்திக்கும் என்னும் எண்ணத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுவிடுவது. (if the investor belives market in go down)

போன்ற வற்றின் காரணமாக பங்குச்சந்தை சரிய தொடங்கும், இதை பேர் மார்க்கெட் என்பார்கள். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/blog-post.html"

* பங்கு தரகர்கள் ? (Stock Brokers)

பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள் மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் ஒரு கணக்கை தொடங்க வேண்டும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/stock-brokers_06.html"

* பங்குதாரர் என்றால் என்ன ? (Share Holder)

பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும் சேர்களை வெளியிடுவார்கள். இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட முகப்பு விலையை (Face Value) நிர்னயம் செய்வார்கள். இப்பங்கை முகப்பு விலையோ அல்லது அதற்கு மேலோ விலை கொடுத்து வாங்குபவர்கள் பங்குதாரர்கள் ஆவார். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/share-holder_06.html"

* பங்குச்சந்தை இரண்டு வகைப்படும், அவை (Different types of stock market)

· முதன்மை பங்குச்சந்தை (Primary Market)

ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம் (Issuing first stocks to public) முதன்மை பங்குச்சந்தை ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO – Initial Public Offer) என்று பொருள்.

· இரண்டாம் நிலை பங்குச்சந்தைவெளிச்சந்தை (Secondary Market)

முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளை விற்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ வெளிச்சந்தையை அனுக வேண்டும். ஒரு கம்பனி ஐ.பி.ஓ (IPO) முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் (Will be listed in stock market). அதன் பிறகு அக்கம்பனியின் பங்குகளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும். இப்பங்கின் நடப்பு விலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர் வாங்கிக்கொள்ளலாம். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/different-types-of-stock-market-primary_06.html"

* பங்குச்சந்தை என்றால் என்ன ? (What is meant by Stock Market?)

பொதுவாக பங்குகளை வாங்கி விற்குமிடமே (டிரேடிங்) பங்குச்சந்தை ஆகும். இங்கு சிறு முதலீட்டாளர்கள், தரகர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள், தரகர்கள் வரை பங்குபெறலாம். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/what-is-meant-by-stock-market_06.html"

* பங்கு என்றால் என்ன ? (What is meant by stock?)

கம்பனிகள் முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/what-is-meant-by-stock-shares_1653.html"

* கம்பனி என்றால் என்ன ? (What is meant by company?)

மேலே கூறப்பட்ட Partnership என்பது முகம் தெரிந்தவர்களை மட்டும் சேர்த்து இயங்கக்கூடியது. இவற்றுடன் முகம் தெரியாத பலரையும் சேர்த்து வியாபாரம் செய்வதற்காக உருவாக்கப்படுவதற்கு கம்பனி என்று பொருள்.

இந்த கம்பனிகள் ரெஜிஸ்டார் ஆப் கம்பனீஸ் (Registrar of Companies) என்னுமிடத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் அந்த கம்பனியின் கடன்களுக்கு அக்கம்பனியே பொறுப்பு, பங்குதாரகள் பொறுப்பல்ல. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/what-is-meant-by-company-partnership_06.html"

* தனியார் நிறுவனம் என்றால் என்ன ? (Private Company)

ஒரு நிறுவனம் என்பது கீழ்கண்ட இரு வகைகளில் உருவாக்கப்படுகிறது,

* தனியொருவர் மட்டும் முதல் போட்டு வியாபாரம் செய்தால் அது தனியார் வியாபாரம். (Private Business)

* சில நபர்கள் கூட்டு சேர்ந்து முதல் போட்டு வியாபாரம் செய்தால், அது பங்கு நிறுவனம் எனப்படும். (ஆங்கிலத்தில் Partnership எனப்படும்) submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/private-company_06.html"