Saturday 21 August 2010

* இலங்கைப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் பங்குலாப அறிவித்தல்கள்


Ceylon Tea Services PLC - (CTEA)
Date of Announcement:-23. Jul.2010
Rate of Dividend:- Rs.17.50 per share Final Dividend
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM:-03.Sep.2010
XD:-06.Sep.2010
Payment:- 08.Sep.2010

LANKA MILK FOODS PLC - (LMF)
Date of Announcement:-12.Aug.2010
Rate of Dividend: - Rs. 1.50 per share - First and Final Dividend
Financial Year: - 2009/2010
Shareholder Approval:- Required
AGM:- 15.Sep.2010
XD:-16.Sep.2010
Payment: - 27.Sep.2010


THE COLOMBO PHARMACY CO PLC - (PHAR)
Date of Announcement:-13.Aug.2010
Rate of Dividend: - Rs. 4.25 per share - Final Dividend
Financial Year: - 2009/2010
Shareholder Approval: - Required
AGM: - 23.Sep.2010
XD:-24.Sep.2010
Payment: - 04.Oct.2010

LANKA ASHOK LEYLAND PLC - (ASHO)
Date of Announcement:-16.Aug.2010
Rate of Dividend: - Rs. 15.00 per share - First & Final Dividend
Financial Year: - 2009/2010
Shareholder Approval: - Required
AGM: - 27.Sep.2010
XD:-28.Sep.2010
Payment: - 06.Oct.2010

LANKA ALUMINIUM INDUSTRIES PLC - (LALU)
Date of Announcement:-18.Aug.2010
Rate of Dividend: - Rs. 1.25 per share - First & Final Dividend
Financial Year: - 2009/2010
Shareholder Approval: - Required
AGM: - 28.Sep.2010
XD:-29.Sep.2010
Payment: - 07.Oct.2010

ROYAL PALM BEACH HOTELS PLC - (RPBH)
Date of Announcement:-18. Aug.2010
Rate of Dividend:- Rs.0.40 per share First & Final Dividend
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM:- 23.Sep.2010
XD:-24.Sep.2010
Payment :- 04.Oct.2010

RENUKA HOLDINGS PLC - (RHL)
Date of Announcement:-18. Aug.2010
Rate of Dividend:- Rs.0.80 per share First & Final Dividend (Voting & Non Voting)
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM:- 27.Sep.2010
XD:-28.Sep.2010
Payment :- 30.Sep.2010

RENUKA AGRI FOODS PLC - (RAL)
Date of Announcement:-18. Aug.2010
Rate of Dividend:- Rs.0.10 per share First & Final Dividend (Tax Free)
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM:- 27.Sep.2010
XD:-28.Sep.2010
Payment :- 30.Sep.2010

COCO LANKA PLC - (COCO)
Date of Announcement:-18. Aug.2010
Rate of Dividend:- Rs.1.00 per share First & Final Dividend (Rs. 0.94 Tax Free, Voting & Non Voting)
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM:- 27.Sep.2010
XD:-28.Sep.2010

CARGO BOAT DEVELOPMENT COMPANY PLC - (CABO)
Date of Announcement:-20. Aug.2010
Rate of Dividend:- Rs.2.25 per share First & Final Dividend
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM Date:- 21.Sep.2010
XD:-23.Sep.2010
Payment :- 29.Sep.2010

RENUKA CITY HOTELS PLC - (RENU)
Date of Announcement:-20. Aug.2010
Rate of Dividend:- Rs.5.50 per share First & Final Dividend
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM Date:- 21.Sep.2010
XD:-23.Sep.2010
Payment :- 29.Sep.2010


CEYLON TEA BROKERS PLC - (CTBL)
Date of Announcement:-20. Aug.2010
Rate of Dividend:- Rs.0.15 per share First & Final Dividend
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Not Required
XD:-01.Sep.2010
Payment :- 13.Sep.2010 submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/08/blog-post_21.html"

Tuesday 10 August 2010

* யாழ்ப்பாணத்தில் இந்திய வங்கியின் மேலும் ஒரு கிளை

இந்தியாவில் சென்னையைப் பிரதான தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கி யாழ்ப்பாணத்தில் அதன் கிளை ஒன்றை நிறுவ உள்ளது.ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த இந்தியன் வங்கி இயல்பற்ற சூழ்நிலை காரணமாக தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டது

இலங்கையில் இடம்பெற்று முடிந்த உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த அகதிகளுக்கான இந்தியாவின் உதவிகள் இவ்வங்கிக் கிளை மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிய வருகின்றது.

இதேவேளை, ஏற்கனவே கொழும்பில் கிளையை கொண்டுள்ள இந்தியன் வங்கியின் கிளைகளை அடுத்த இரண்டு வருட காலத்தில் இலங்கையின் ஏனைய இடங்களிலும் திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஸின் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கிளை தொடங்கப்பட்ட பிறகு கண்டியில் மேலும் ஒரு கிளை தொடங்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே போல இந்தோனேசியாவில் மேலும் ஒரு பிரதிநிதி அலுவலகம் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ளதகாவும் அவர் தெரிவித்தார். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/08/blog-post_10.html"

Tuesday 3 August 2010

* அமெரிக்காவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் அளவுக்கு வளர்ச்சி வேகம் இல்லை

அமெரிக்காவில் தொடர்ந்து வரும் வேலையின்மைக்குக் காரணம் அங்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய வளர்ச்சி இல்லாததே என்று கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 9.5 சதவீதமாக குறைந்துள்ளது என்றாலும், இதற்குக் காரணம், வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது அல்ல என்றும், வேலை வாய்ப்புக் கோரி பதிவு செய்திருந்த 5 இலட்சம் பேர் வேலை தேடும் முயற்சியைக் கைவிட்டுவிட்டதே என்று கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தில் மட்டும் புதிதாக 83,000 பேருக்கு பணி வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் வேலையின்மையைப் போக்க வேண்டுமெனில் பல லட்சக்கணக்கான பணி வாய்ப்புகள் ஒவ்வொரு மாதமும் உருவாக வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை.வீட்டுக் கடன் சிக்கலால் பாதிப்பிற்குள்ளான பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அமெரிக்க அரசு செய்த உதவிகள் பெரிய அளவிற்கு வளர்ச்சியை உறுதி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

பொருளாதாரப் பின்னடைவி்ற்குப் பிறகு இரண்டாவது ஆண்டின் இரண்டாவது அரையாண்டு துவங்கியுள்ள நிலையில், அமெரிக்க அரசு செய்த ஊக்கமளிப்பு நிதியுதவிகளின் தாக்கம் குறையத் துவங்கியுள்ளது அந்நாட்டில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/08/blog-post.html"

* பிரித்தானியர்கள் ஒவ்வொருவரும் £65,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் கடனாளிகள்

பிரித்தானியாவில் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் மொத்த கடன் சுமையை பிரித்துப் பார்க்கும் போது நாட்டில் இருக்கக்கூடிய ஆண், பெண், குழந்தைகள் என ஒவ்வொருவர் மீதும் 65,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் கடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான விபரங்களை தேசிய புள்ளி விபர அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. இதன் படி நாட்டிற்கு இருக்கும் மொத்த கடன் தொகை மட்டும் 4 ட்ரில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் என கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட ரீதியில் ஆய்வாளர்கள் கணித்து கூறிய தொகையை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். சராசரியாக பார்க்கப்போனால் ஒவ்வொரு குடும்பமும் இந்த பெருங்கடனை தீர்க்க ஐந்து வருடம் உழைக்க வேண்டியதிருக்கும்.

வரிப் பாக்கித் தொகைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக ஏற்படும் ஓய்வூதிய இழப்பீடு, அரசு ஓய்வூதிய திட்டங்கள் , தனியார் நிதி நிறுவனங்களில் தொழிலாளர்கள் பெற்றிருக்கும் கடன் தொகை, பொருளாதார சீரழிவால் முடங்கிப் போன வங்கிகளுக்காக செலவழிக்கப்பட்ட தொகைகள் இவை போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டே இந்த இறுதி புள்ளி விபரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய புள்ளி விபர அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசு சொத்துக்களின் மதிப்புக்கள், பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்புக்கள் அனைத்தும் முறைப்படி கணக்கிடப்பட்டு மொத்தமாக வந்த தொகையிலிருந்து கழிக்கப்பட்ட பின்னரே இந்த 4 ட்ரில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் பெறப்பட்டுள்ளது என்றும் புள்ளி விபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது சிட்டி திங் பேங்க் என்ற பொருளாதார ஆய்வு மையம் கடந்த வாரம் வெளியிட்ட 2 ட்ரில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் என்ற மதிப்பை விட இரட்டிப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/08/65000.html"