Monday 26 July 2010

* புதிய உத்தியை கையாண்டு வேலையை பெற்ற பிரித்தானிய இளைஞர்

எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு தனி தான். " தயவுசெய்து எனக்கு வேலை கொடுங்கள் " என்ற வாசகம் அடங்கிய பலகையுடன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொழிலதிபர்கள் அதிகம் பயணிக்கும் சாலையில் நின்ற வேலையில்லா இளைஞர் ஒருவர் நின்ற இடத்திலேயே பணி நியமனத்தை பெற்றுள்ளார்.

இரண்டு வருடங்களாக வேலையின்றி அரசு கொடுக்கும் நன்மைகளைப் பெற்று வாழ்ந்து வந்த பிரித்தானிய இளைஞர் 23 வயதான மார்க் வீல்டன். அரசு அளிக்கும் நன்மைகளிலேயே வாழத் தொடர விரும்பாத இவர் நேற்று புதிய உத்தி ஒன்றை கடைப்பிடித்தார். பலரும் பயணிக்கக் கூடிய சாலையில் " தயவுசெய்து எனக்கு வேலை கொடுங்கள் " என்ற வாசகம் அடங்கிய பலகையுடன் தன்னைத்தானே விளம்பரம் செய்து கொண்டார்.

மிக வேகமான பணி நேரத்தில் அந்த சாலையில் சென்ற அனைத்து வாகன ஓட்டிகளும் இதைக் கவனித்தனர். மழையையும் பொருட்படுத்தாது அந்த இளைஞர் நின்றது அனைவராலும் பார்க்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்த பின் அந்த வழியே வாகனத்தில் சென்ற மரவேலைகள் தொடர்பான நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் மார்க் வீல்டனிடம் நேர்காணல் நடத்தி 20 நிமிடங்களுக்குப் பின் அவருக்கு பணி நியமனமும் அளித்தார். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_26.html"

Friday 23 July 2010

* அரசாங்க செலவுக் குறைப்பால் பிரித்தானியாவில் குற்றச் செயல்கள் பெருக வாய்ப்பு

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் செலவீனக் குறைப்புக்களும்
,வேலையிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.

காவல்துறையில் அதிகப்படியான செலவீனக் குறைப்பு இங்கிலாந்திலும் வேல்ஸிலும் குற்றங்கள் அதிகம் பெருகவே வழி வகுக்கும் எனத் தலைமை காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசு துறைகளையும் போலவே காவல்துறைக்கு நிதி அளித்து வரும் உள்துறையிலும் 25 சதவீத செலவீனக் குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காவல் துறையில் அதிகாரிகளும், காவலர்களும் பணியாற்றும் விதத்தை மாற்றியமைப்பதன் மூலம் 12 சதவீத நிதியை சேமிக்க முடியும் என்றும் 25 சதவீத குறைப்பு என்பது மிகவும் அதிகப்படியானதால் காவலர்கள் திறமையுடன் பணியாற்ற முடியாத சூழல்கள் ஏற்படுவதோடு குற்றங்கள் பெருகும் என எச்சரித்துள்ளார் சர் டெனிஸ் ஒ கொன்னோர்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயம் என்பதால் அரசும் , உள்துறை அமைச்சகமும் இணைந்து காவல்துறையில் செலவை குறைப்பதை பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_23.html"

Thursday 22 July 2010

* அமெரிக்காவில் 7 மாதங்களில் 90 வங்கிகளுக்கு மூடு விழா

பொருளாதார மந்த நிலை காரணமாக, நிதிபிரச்னையை சமாளிக்க முடியாமல் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் 90 வங்கிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெரும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. அது, உலக அளவில் பொருளாதார மந்த நிலை யையும் ஏற்படுத்தியது.

நிதிப் பிரச்னையை சமாளிக்க முடியாமல், ஏராளாமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் நஷ் டத்தில் இயங்கி வருகின்றன; பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இதன் காரணமாக, அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்துள்ளது. அரசு ஊக்குவிப்பு சலுகைகளை அறிவித்தபோதும், நிதி ஆதாரமின்றி வங்கிகள் மூடப்படுகின்றன.கடந்த மாதம் மட்டும் அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் 9.5 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. நிதிப் பிரச்னை, வேலையிழப்பு போன்ற காரணங்களால் வங்கிகளும் தள்ளாடத் துவங்கிவிட்டன.

மிகப் பெரிய வங்கிகள் தவிர, நடுத்தர மற்றும் மூன்றாம் நிலை வங்கிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஹோம் நேஷனல் வங்கி, பே நேஷனல் வங்கி, ஐடியல் பெடரல் சேமிப்பு வங்கி போன்றவை கடந்த மாதத்தில் பெரும் நஷ்டத்தில் இயங்கின. கடந்த ஏழு மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் 90 வங்கிகள் மூடப் பட்டுள்ளன. சராசரியாக ஒரு மாதத்துக்கு 13 வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. பொருளாதார மந்த நிலை சீராகும் பட்சத்தில் தான், அமெரிக்காவில் வங்கிகளின் நடவடிக்கை இயல்பு நிலைக்கு திரும்பும். வங்கிகளின் நடைமுறைகளில் ஏற்பட்ட பாதிப்பு இந்த மூடலுக்கு காரணம் என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/7-90.html"

Tuesday 20 July 2010

* பிரித்தானியாவில் பொதுத்துறையில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களின் ஊதிய உயர்வு 2 வருடங்களுக்கு நிறுத்தி வைப்பு

பிரித்தானியாவில் வருடத்திற்கு 21,000 பவுண்டுகளுக்கும் குறைவான ஊதியம் பெற்றுகொண்டு பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களின் சம்பள உயர்வு இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

21,000 பவுண்டுகளுக்கும் குறைவான ஊதியம் பெறுபவர்களுக்கு அவர்களை பாதுகாக்கும் விதமாக 250 பவுண்டுகள் சம்பள உயர்வாக அளிக்கப்படும் என அமைச்சர்கள் முன்பு சுட்டிக் காட்டியிருந்தனர். இது போன்று சம்பளம் நிறுத்தி வைக்கப்படுவதன் விளைவாக பலர் தங்கள் வேலையை இழப்பது தடுக்கப்படுமென அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

பொதுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பொருளாதார சூழல்களுக்கு ஏற்ப தான் ஊதியம் அளிக்கப்படுகிறதே தவிர அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவில்லை என சில தொழிலாளர் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

குறைவான ஊதியம் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு இந்த இரண்டு வருடங்களில் குழந்தைகளுக்கான தொகை அதிகம் கொடுப்பதன் மூலமாக உதவப்படும் என்றும் அரசுக் கருவூல தலைமை செயலர் டன்னி அலெக்சாண்டர் மேலும் கூறியுள்ளார்.

லங்கா சிறி இணையத்தளத்தில் (உலகச்செய்திகள்):-பிரித்தானியாவில் பொதுத்துறையில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களின் ஊதியம் 2 வருடங்களுக்கு நிறுத்தி வைப்பு submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/2.html"

* பிரித்தானியாவில் வங்கிகளாக செயல்பட உள்ள தபாலகங்கள்

பிரித்தானியாவின் இயந்திரமயமான வாழ்க்கைக்கு இடையே வங்கிகளுக்கு சென்றால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தபால் நிலையங்களும் இனிமேல் சிறிய வங்கிகளாக செயல்படும் என்ற அரசின் அறிவிப்பு மக்களுக்கு சிறிது நிம்மதியை கொடுத்துள்ளது.

பிரித்தானியாவில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் எவரும் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் தங்கள் அடிப்படை கொடுக்கல் வாங்கல் தேவைகளுக்கு தபால் நிலையங்களையும் பயன்படுத்தலாம் என பிரித்தானிய அரசு இன்று அறிவித்துள்ளது.வங்கியிலிருந்து பணம் எடுப்பது, பாக்கித்தொகையை சரிபார்ப்பது, காசோலைகளுக்கு பணம் செலுத்துவது உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் இதில் அடங்கும். நடப்பு கணக்கு வைத்திருக்கும் அனைவருமே நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களையும் பயன்படுத்தலாம் என தபால் விவகார அமைச்சர் எட்வர்ட் டவே தெரிவித்தார்.

அதிகப்படியான மக்கள் தபால் நிலையங்களை பயன்படுத்தும் போது தபால் நிலையங்களின் சேவைகளும் அதிகரிப்பதுடன் மக்களின் நேர விரயமும் இதனால் குறையும் என நம்புவதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார். இந்த முறையை நாட்டில் உள்ள பிரபல வங்கிகள் வரவேற்றுள்ளன. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_20.html"

Monday 19 July 2010

* ஊழியர்களை குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு

பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோ சாப்டிலும், ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பல முன்னணி நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையை கையாளத் துவங்கியுள்ளன.பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க துவங்கியுள்ளன.

சிறிய அளவில் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 5,000 பேரை வேலை நீ்க்கம் செய்தது. இந் நிலையி்ல் இந்த வாரத்தில் மேலும் பலரை நீக்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.எத்தனை பேர் நீக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், அது மிகச் சிறிய அளவிலேயே இருக்கும் என்று அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாப்ட் கிளைகள் முழுவதிலும் இந்த பணி நீக்கம் அமலாக்கப்படும் என்று தெரிகிறது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_19.html"

Friday 16 July 2010

* அமெரிக்காவில் வீடு விற்பனை கடும் சரிவு

இந்த ஆண்டு மே மாதத்தில் அமெரிக்காவில் வீடுகள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீடுகள், ரியல் எஸ்டேட் விற்பனை மோசமடைந்துள்ளது.ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 33 சதவீதம் (கிட்டத்தட்ட 4.46 லட்சம் வீடுகள்) சரிவாகும்.

மே மாதத்தில் 3 லட்சம் வீடுகளே விற்பனையாகியுள்ளன.சென்ற ஆண்டு மே மாதத்தில் 3.69 லட்சம் வீடுகள் விற்பனையாகின. அதனுடன் ஒப்பிடுகையில் சரிவு 19 சதவீதம் ஆகும்.

வீடுகள் விற்பனையில் ஏற்படும் சரிவு பொருளாதார தேக்க நிலையை குறிப்பிடும் அம்சம் என்பதால் அமெரிக்கா இன்னும் பொருளாதார மந்த நிலையிலிருந்து முழு அளவில் மீளவில்லை என்பது தெளிவாகிறது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_16.html"

Thursday 8 July 2010

* நிதி பற்றாக்குறையை குறைக்க G 20 நாடுகள் கூட்டத்தில் முடிவு

உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவில் இருந்து நிறுவனங்களைக் காப்பாற்ற அளிக்கப்பட்ட நிதிகளைத் திரும்பப் பெற்று 3 ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறையை பாதியாகக் குறைக்க G 20 நாடுகள் மாநாடு ஒப்புக் கொண்டுள்ளது.

பொருளாதாரப் பின்னடைவால் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொண்ட நிறுவனங்களைக் காப்பாற்ற அளிக்கப்பட்ட நிதியை குறுகிய காலத்தில் திரும்பப்பெற்றால் அது மீண்டும் சிக்கலை உருவாக்கிவிடும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையிலும், நிதி நிலையை மேம்படுத்த பற்றாக்குறையை பாதியாகக் குறைக்க வளர்ந்த நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பற்றாக்குறையை பாதியாகக் குறைப்பது தொடர்பான இந்த உறுதி மொழி ஜி 20 நாடுகள் மாநாட்டின் இறுதி அறிக்கையில் அளிக்கப்படும். மூன்றாண்டுகளில் நிதிப் பற்றாக்குறைத்து அதன் மூலம் கடன் சிக்கலால் ஏற்பட்ட நிதி நிலை சமமின்மையை சீர்படுத்துவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

லங்கா சிறி இணையத்தளத்தில் (உலகச்செய்திகள்):- நிதி பற்றாக்குறையை குறைக்க G 20 நாடுகள் கூட்டத்தில் முடிவு submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/g-20.html"

Wednesday 7 July 2010

* மிலங்க விலைச்சுட்டியில் பட்டியலிடப்படவுள்ள 25 கம்பனிகள்-(01 July,2010 - 31 Dec 30, 2010 )



01 July,2010 - 31 Dec 30, 2010 வரை மிலங்க விலைச்சுட்டியில் (Milanka Price Index -MPI) பட்டியலிடப்படவுள்ள 25 கம்பனிகள்.

* Banks, Finance and Insurance


- Commercial Bank of Ceylon

- DFCC Bank

- Hatton National Bank

- Janashakthi Insurance

- Merchant Bank of Srilanka

- National Development Bank

- Nations Trust Bank

- Pan Asia Banking Corporation

- Sampath Bank

- Seylan Bank


* Beverages, Food and Tobacco

- Distilleries Company of Sri Lanka

* Diversified

- John Keells Holdings

- Richard Pieris

* Manufacturing

- ACL Cables

- Chevron Lubricants Lanka

* Telecommunications

- Dialog Telekom

* Hotels and Travels

- Asian Hotels and Properties

- John Keells Hotels

* Health Care

- Nawaloka Hospitals


* Investment Trusts

- Environmental Resources Investments

* Land and Property

- Overseas Reality (Ceylon)

* Power and Energy

- Lanka IOC

* Chemical and Pharmaceuticals

- Chemical Industries (Colombo)

* Construction and Engineering

- Colombo Dockyard

* Trading

- Brown and Company submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/25-01-july2010-31-dec-30-2010.html"

Monday 5 July 2010

* ஆசிய சந்தையில் மசகுஎண்ணெயின் விலை குறைந்தது

அமெரிக்க பங்குச் சந்தை சரிவைத் தொடர்ந்து மசகுஎண்ணெயின் விலை ஆசிய சந்தையில் மேலும் சரிந்துள்ளது.ஆசிய சந்தையில் மசகுஎண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 75 டொலருக்கும் கீழ் குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் மசகுஎண்ணெய்க்கான தேவையில் ஏற்பட்ட பெரும் சரிவுதான் இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் டோக்கியோ, நியூயார்க் பங்குச் சந்தைகளில் சரிவு காணப்படுவதாலும் சர்வதேச சந்தையில் மசகுஎண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த நிலை நீண்ட நாள் நீடிக்காது என்றும், இந்தியா, சீனா போன்ற நாடுகளின் மசகுஎண்ணெய் தேவை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்ப்பதால், நம்பிக்கையுடன் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

லங்கா சிறி இணையத்தளத்தில் (உலகச்செய்திகள்):- ஆசிய சந்தையில் மசகுஎண்ணெயின் விலை குறைந்தது submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post.html"