Wednesday 1 September 2010

* பிரித்தானிய வங்கிகளில் 2014 வரை மிக குறைந்த வட்டி வீதமாகவே பேணப்படும்

2014 வரை 0.5 வீதம் என்ற மிக குறைந்த வட்டியிலேயே இங்கிலாந்து வங்கி தன்னுடைய பணிகளை தொடர வேண்டிய நிலையில் உள்ளது என பிரபல பொருளாதார கணிப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.


அரசு செலவீனக் குறைப்பை தொடங்கியுள்ளதால் அதை திறம்பட சமாளிப்பதற்காக வட்டி வீதத்தை அதிக படுத்த முடியாத நிலையில் இங்கிலாந்து வங்கி உள்ளது என ஒரு பொருளாதார கணிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

அதே நேரத்தில் இது குறித்த பல வேறுபட்ட கருத்துக்களும் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அடுத்த வருடத்திலிருந்து இங்கிலாந்து வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்கத் துவங்கும் என சட்டம் பொறுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டிலிருந்தே இங்கிலாந்து வங்கி 0.5 வீதம் என்ற மிக குறைந்த வட்டியிலேயே இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/09/2014.html"