Tuesday 5 March 2013

* ஹற்றன் நஷனல் வங்கியிடமிருந்து 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசு கடனாக பெற அனுமதி

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் 210 இரும்பு பாலங்களை அமைப்பதற்கு தேவையான 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இதற்கமைவாக இந்த தொகை இலங்கையின் ஹற்றன் நஷனல் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

தற்போதைய நாணயமாற்று வீதங்களுக்கு அமைய இலங்கை ரூபாவின் இந்த கடன் தொகையின் பெறுமதி 1.2 பில்லியன்களாக அமைந்துள்ளது. இந்த கடன் தொகையை மீள் செலுத்தும் காலம், வட்டி வீதம் குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

நன்றி:- Tamil Mirror
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2013/03/10.html"

No comments: