Wednesday 8 December 2010

* அமெரிக்க நிறுவனங்கள் பொருளாதார விழ்ச்சியில் இருந்து மீள்கின்றனவா?


அமெரிக்க நிறுவனங்களின் மேலதிகாரிகள் மற்றும் நிதித்துறை நிர்வாகிகள் செல்வக்கொழிப்பிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் பத்து மில்லியனுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பொருளாதார மந்த நிலைக்கு முகம் கொடுத்துக்கொண்டுவரும் நிலையில் இவர்கள் மிக உயர்ந்த கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

2009ம் ஆண்டு அமெரிக்காவின் 450 பெரிய நிறுவனங்களின் நிர்வாகிகள் பெற்ற வருடாந்த கொடுப்பனவுகள் 11% அதிகரித்திருப்பதாக The Wall Street Journal வெளியிட்ட புதியதொரு கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாய், சராசரியான ஊதியம் (சம்பளங்கள், கொடுப்பனவுகள், பங்குகள் மற்றும் பிற ஊக்கச் சலுகைகள் ஆகியவை உட்பட) 3 சதவீதம் உயர்ந்து 2009ல் 7.3 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

நிறுவனங்களின் இலாபம் முந்தைய வருடத்தை விட இருமடங்காய் அதிகரித்திருந்ததன் விளைவே இந்த அதிகரித்த ஊதியங்கள். இதனால் மொத்தமாய் பங்குதாரருக்கான வருடாந்த வருவாய் 29% அதிகரித்திருந்தது.கடந்த இருவருட காலங்களில் நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கை குறைப்பு,மற்றும் ஊதியங்கள் மற்றும் நல உதவிகள் குறைப்பு என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன.முழு-நேரத் தொழிலாளர்களை விடுத்து வறுமை நிலை ஊதியங்களைப் பெறும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு பணியமர்த்தி கொஞ்சம் கொஞ்சமாய் உற்பத்தித் திறனை உயர்த்திக் கொண்டன.

சென்ற வருடத்தில் பெரும் ஊதியங்களை தட்டிச் சென்றிருக்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியல் பின்வருமாறு:

1. Gregory B.Maffei - Liberty Media Corp - இவர் சென்ற ஆண்டில் 87.1 மில்லியன் டொலர் தொகையை மொத்தமாய் ஊதியமாய் பெற்றுள்ளார் - இது அவரது 2008 தொகையைக் காட்டிலும் நான்கு மடங்கு.

2.Larry Ellison - Oracle's Founder - இவர் 68.6 மில்லியன் டொலர்களை பெற்றிருந்தார்.

3.Ray r.Irani - Occidental Petroleum Corp - இவர் பெற்ற தொகை 52.2 மில்லியன் டொலர்கள்.

4.Carol Bartz -Yahoo - இவர் 44.6 மில்லியன் டொலர்கள் பெற்றிருந்தார்.

5.Leslie Moonves - CBS - இவர் 39 மில்லியன் டொலர்கள் பெற்றிருந்தார்.

S&P 500 குறியீடு இந்த ஆண்டில் இதுவரை 7.5 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், 2010ல் மேல்நிலை நிர்வாகிகள் இன்னும் கூடுதல் ஊதியங்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்களும் வருவாய் எதிர்பார்ப்புகளை விஞ்சுகின்றன, பங்கு விலைகள் அதிகரிக்கின்றன, செயல்திறன் நன்றாக உள்ளது.ஆயினும், இந்த வருட இறுதியில் வோல் ஸ்ட்ரீட் தனது கொடுப்பனவுகளை அளிக்கும்போது நிதி மேலாளர்களும் (Hedge fund) தனியார் பங்கு வர்த்தகர்களும் பெறவிருக்கும் விசித்திரமான பெரும் தொகைகளுடன் ஒப்பிட்டால் ஊடகத் துறை, எரிசக்தித் துறை மற்றும் இணைய நிறுவனங்களின் தலைவர்கள் பெறக்கூடிய தொகை குறைவாகவே இருக்கிறது. Goldman Sachs, Morgan Stanley, Citigroup, Bank of America and JPMorgan Chase ஆகியவை தங்களது வருட-இறுதி கொடுப்பனவுகளுக்காக 89.54 பில்லியன் டொலர் தொகையை ஒதுக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தை உருக்குலைவின் விளிம்பிற்குக் கொண்டுவந்த நிதி முறிவின் வெறும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பெருநிறுவனங்கள் மற்றும் நிதிச் சந்தைகளின் “போட்டித்திறனையும்” ”இலாபமீட்டுநிலையையும்” பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்க முடியாது என்று வாதிட்டுக் கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் முதலாளித்துவ அரசாங்கங்கள் சிக்கனத்தையும், செலவுக் குறைப்பையும் கோருகின்றன.தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கைத் தரங்கள் நிரந்தரமாக குறைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளாதவரை வேலைக்கு அமர்த்தப் போவதில்லை என்பதை பணமூட்டைகளின் மீது அமர்ந்திருக்கும் அமெரிக்க பெருநிறுவனங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.

பொருளாதாரத்தை சமநிலைக்குக் கொண்டுவர யாருக்காவது ஊதிய வெட்டு அவசியம் என்றால், அது நிச்சயமாக கொழுத்த சம்பளத்தைப் பெறும் முதலீட்டு வங்கியாளர்கள்,மற்றும் பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் ஆகியோருக்குத் தான் அவசியம் என்று இதைப் படிக்கும் உங்களில் பலரும் நினைப்பீர்கள் என்று நிச்சயமாக எனக்குத் தெரியும். அப்படித்தான் சோசலிச சொர்க்கத்தில் விடயங்கள் நடக்கும், ஆனால் நியாயமானது என்பதைக் காட்டிலும் செயல்திறனை உருவாக்குவதில் மிகவும் மேம்பட்டவையான சந்தைப் பொருளாதாரங்களில் அப்படி நடக்காது.

உண்மையில், முதலாளித்துவம் இம்முறையில் தான் வேலை செய்கிறது, ஆனால் அதற்கும் “செயல்திறனுக்கும்” சம்பந்தமில்லை. கண்ணியமான இருப்பிடம், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு சீரமைப்புகள் ஆகிய சமூகத்தின் மிக அடிப்படையான தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் விடப்படும் நிலையில் மில்லியன் கணக்கான மக்களை வேலையின்மைக்கும் வறுமைக்கும் சபிப்பதில் என்ன செயல்திறன் கொட்டிக் கிடக்கிறது?

”மிகை நுகர்வு” பற்றிய எல்லா பேச்சுக்களிலும், ஆளும் வர்க்கத்தின் நுகர்வைக் குறைப்பதைப் பற்றி ஒருபோதும் ஆலோசிக்கப்பட்டதில்லை. அவர்களது முதலாளித்துவ அமைப்பு முறையும் குற்றவியல் நடவடிக்கைகளும்தான் உலக மக்களில் பெரும்பான்மையானோர் எதிர்கொள்ளும் திக்கற்ற நிலைமைகளுக்கு பொறுப்பானவை ஆகும்.

வீரகேசரி இணையத்தில்:- அமெரிக்க நிறுவனங்கள் பொருளாதார விழ்ச்சியில் இருந்து மீள்கின்றனவா? submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/12/blog-post.html"

4 comments:

ம.தி.சுதா said...

தகவலுக்கு மிக்க நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraception

ARV Loshan said...

நல்ல பகிர்வு அச்சு. தெரியாத தகவல்கள்.

Atchuthan Srirangan said...

//ம.தி.சுதா said...

தகவலுக்கு மிக்க நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//

ம.தி.சுதா உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி....

Atchuthan Srirangan said...

//LOSHAN said...

நல்ல பகிர்வு அச்சு. தெரியாத தகவல்கள்.//

என்னால் முடிந்த வரை புதிய தகவல்களை தர முயல்கிறேன்.

lOSHAN ANNA உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி....