Tuesday 15 March 2011

* ரூ.121.3 பில்லியன் வருமானத்தை EPF ஈட்டித் தந்துள்ளது

கடந்த ஆண்டில் ரூ.121.3 பில்லியன் வருமானத்தை ஊழியர் சேமலாப நிதியம் ஈட்டித் தந்துள்ளது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.6% வளர்ச்சி என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மொத்தமாக ரூ.900 பில்லியனை கடந்த ஆண்டில் ஊழியர் சேமலாப நிதியம் கொண்டிருந்தது. இதில் 94% க்கும் மேலான அளவு நிதியினை அரச பிணைகளில் முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலமாக கடந்த ஆண்டில் வட்டியாகவும் இலாபமாகவும் ரூ.118 பில்லியன் வருமானத்தைப் பெற முடிந்துள்ளது.

இதேவேளை ரூ.32 பில்லியன் நிதியினை பங்கு வானிபத்திலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனினும் இதன் தொகை அதிகமாக உள்ளதாக பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக பொருளியல் துறை விரிவுரையாளர் Dr.எஸ்.சந்திரசேகரம் ஒன்லைன் உதயனுக்கு கருத்து தெரிவிக்கையில், பங்கு சந்தையில் இவ்வாறு அரசு முதலீடு செய்வதனை இரண்டு விதமாக நோக்கலாம்.

அரச நிதி வளத்தினை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் மேலதிக வருமானத்தையும் பங்குச் சந்தையிலான வளர்ச்சியினையும் அடைய முடியும். எனினும் அரசின் பங்குச் சந்தையிலான பாரிய முதலீடானது பங்கு வானிபத்தில் ஒர் போலியான வளர்ச்சியை தோற்றுவிக்கின்றது. இதனை நம்பி முதலீடு செய்யும் தனியார் துறையினர் இலாபத்தை மட்டுமன்றி ஆபத்தினையும் சந்திக்க நேரிடுகின்றது.

குறிப்பாக பங்கு வானிபம் சிறப்பாக உள்ள காலத்தில் அரசு தான் வைத்திருக்கும் பங்குகளை விற்று வருமானத்தை உயர்த்த முனையும் போது இந்த அதிர்ச்சியினை தனியார் துறையால் ஈடு செய்ய முடியாத நிலையில் பங்குதாரர்கள் நஷ்ரம் அடைகின்றனர் எனத் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது வைப்புகளிற்கான வட்டி வீதங்கள் மிகக் குறைவாக உள்ள நிலையில் ஊழியர் சேமலாப நிதியத்தில் உள்ள வைப்புக்களிற்கு 12.5% வட்டி வழங்கப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/03/1213-epf.html"

No comments: