Monday 14 February 2011

* மின் உற்பத்தியில் வடபகுதியும் முன்னேற்றம்

2012 முடிவதற்குள் இலங்கை முழுவதும் மின் ஒளி பெறவேண்டும் என மகிந்த சிந்தணை எதிர்பார்க்கின்றது. இதற்கமைய மின்சார உற்பத்தியில் வடபகுதியும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தை கண்டிருப்பதாக அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு இறுதி நிலவரப்படி மின் வழங்களில் கிளிநொச்சி 10%, முல்லைத்தீவு 16%, மன்னார் 44%, வவுணியா 68%, யாழ்ப்பாணம் 72% என்றளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் 100% மின் வழங்களை பெற்ற மாவட்டங்களாக கொழும்பு, கம்பகா, அம்பாந்தோட்டை ஆகிய
மாவட்டங்கள் காணப்படுகின்றன. அத்துடன் 90% க்கு மேலான அளவில் மின் வழங்களை பெற்ற பிரதேசங்களாக களுத்துறை, மாத்தறை, காளி, கண்டி ஆகிய மாவட்டங்கள் காணப்படுகின்றன என அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_14.html"

No comments: