Thursday 10 February 2011

* வேலைதேடி வெளிநாடு செல்வோர் வயதெல்லை அதிகரிப்பு

வேலைதேடி வெளிநாடு செல்லும் இலங்கையரின் வயதெல்லை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடு செல்லும் இளம் பெண் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இவ்வயதெல்லை அதிரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கையரில் 50 வீதமானவர்கள் பெண்கள். அத்துடன் 2010 யூன் வரை 134,670 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றனர். இவர்களில் 59,377 பேர் பெண்கள் என லங்கா பிஸ்னஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

பெண்களை வேலைக்கெடுக்கும் பெரும்பாலான வெளிநாடுகள் இவர்களிற்கான குறைந்த வயதெல்லை கட்டுப்பாட்டை கொண்டிருக்கவில்லை. அதேவேளை வெளிநாடு செல்லும் இலங்கையருக்கு இழைக்கப்படும் பல்வேறு வகையான சுறண்டல்களில் இளம் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என லங்கா பிஸ்னஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_10.html"