Wednesday 9 February 2011

* எரிபொருள் விலை அதிரிக்க வேண்டும்: லங்கா ஐ.ஓ.சி அரசிடம் கோரிக்கை

ஒரு லீற்ரர் பெற்ரோலின் விலை 9 ரூபாவாலும், ஒரு லீற்ரர் டீசலின் விலை 21 ரூபாவாலும் அதிகரிக்க அரசிடம் கோரியுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி யின் இயக்குனர் சுரேஸ் குமார் தெரிவித்துள்ளதாக லங்கா பிஸ்னஸ் இனையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் எரிபொருட்களிற்கான விலை அதிகரித்துள்ளது.இதற்கமைய லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் விலையதிரிப்பினை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசு ஒரு லீற்ரர் பெற்ரோலுக்கான தீர்வையினை 10 ரூபாவால் குறைக்க திட்டமிட்டுள்ளதாக இன்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.

இதுவரை ஒரு லீற்ரர் பெற்ரோலிற்கு 15 ரூபா தீர்வை விதிக்கப்பட்டு வந்ததுடன் தற்போது 5 ரூபாவாக தீர்வை அமைவதால் பெற்ரோல் விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ஒரு லீற்ரர் பெற்ரோல் 115 ரூபாவிற்கு விற்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_09.html"

No comments: