Friday 23 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 23.10.2009

இலங்கை பங்கு சந்தை வெள்ளிக்கிழமையும் 2.13 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 2.13 சதவீதம் (63.75 புள்ளி) உயர்ந்து 3,056.6 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 2.02 சதவீதம் (68.13 புள்ளி) உயர்ந்து 3,434.00 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 398.3 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 23.10.2009



மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 21.10.2009


வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 28.2 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 23.0 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 51.2 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/23102009.html"

2 comments:

Subankan said...

நன்றி. எனக்கு பங்குச்சந்தை தொடர்பாக அவ்வளவு அறிவில்லை. படித்துத் தெரிந்துகொள்கிறேன்.

Atchuthan Srirangan said...

உங்கள் பின்னுட்டலுக்கு நன்றி.