Thursday 31 December 2009

* பண வீக்கமும் முதலீடும்-01

உலகில் உள்ள வரிகளிலேயே கடுமையான வரி பண வீக்கம் தான் என்று கூறுவர். அது மிகவும் உண்மைதான்.பண வீக்கத்தால் நமக்கு வரும் வருமானத்தை விட கூட ஆகும் செலவை அரசு வரியாக போட்டுருந்தால் யாருமே அதை ஏற்று கொள்ளாமல் போராட்டம் நடத்தி வாபஸ் பெற்றிருப்பர். ஆனால் நம் கண்ணுக்கு நேரடியாக தெரியாமல் மறைமுக வரியாக வருடம் தோரும் வருமானத்தை மிஞ்சும் பண வீக்கம் பற்றி அவ்வளவாக நாம் கவலை படுவதில்லை.

சூடான வெந்நீரில் ஒரு தவளையை தூக்கி போட்டால் அது உடனே முயற்சி செய்து வெளியே குதித்து தப்பி விடும். ஆனால் அதே தவளையை சாதாரண நீரில் போட்டு சிறிது சிறிதாக கொதிக்க விட்டால் அது தப்பிக்க இயலாமல் இறந்து விடும். பண வீக்கம் என்பது இரண்டாவது வகையை சேர்ந்தது.

பண வீக்கம் என்பது குறைவான பொருளை நிறைய பணம் துரத்துவது எனலாம். கடந்த சில காலமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பணத்தை வரலாறு காணாத அளவில் அடித்து வெளியிடுவதால் கூடிய சீக்கிரம் மிக பெரிய பண வீக்கம் வர கூடிய வாய்ப்புகள் உள்ளது. 1990களில் ஜப்பானில் இது போன்ற பொருளாதார நெருக்கடி வந்த போது ஜப்பான் அரசு எடுத்த நடவடிக்கைகளை ஒத்தே தற்போது மற்ற நாட்டு அரசுகள் செயல் படுகின்றனர்.

இந்த பதிவு பண வீக்கத்தின் காரணத்தை ஆராய்வது இல்லை.

பண வீக்கமும் முதலீடும்-02 ல் தொடரும்....... submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/01.html"

2 comments:

Nimal said...

Informative and useful.

Admin said...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...