Thursday 26 November 2009

* பங்குகளின் விலை மாறுபடுவதற்கு காரணம் என்ன? (What Causes Stock Prices To Change?)

சந்தையின் நிலையை பொறுத்து பங்குகளின் விலை மாறுபடும். உதாரணமாக, அதிக மக்கள் ஒரு பங்கை (stock) வாங்க முன்வருகிறார்கள் என்றால் அப்பங்கின் விலை அதிகரிக்கும். அதாவது, வாங்குவது அதிகரித்து விற்பது குறைகிறது. (What causes stock prices to change)

அதிக மக்கள் ஒரு பங்கை வாங்குவதற்கு பதிலாக விற்கிறார்கள் என்றால், அப்பங்கின் விலை குறையும். அதாவது வாங்குவது குறைவு, விற்பது அதிகம். (When the selling is more, price falls down)

சற்று எளிமையாக சொல்லப்போனால், மக்கள் அதிகளவில் வெங்காயம் வாங்குகிறார்கள் என்றால் அதன் தேவை அதிகரித்து, விலை ஏறும். அதே வெங்காயத்தின் தேவை குறைந்தால், விலையும் குறையும். அதே கதைதான் பங்குச்சந்தையிலும்.

சரி, முதலீட்டாளர்கள் ஒரு பங்கை வாங்க வேண்டுமென்றும், வேண்டாமென்றும் எவ்வாறு முடிவெடுக்கிறார்கள். (How investor decides to buy/not to buy particular stock) இதற்கு பல காரணங்கள் உண்டு. பெறும்பாலும் அது முதலீட்டாளரின் மன நிலையை பொறுத்து.

சரி சில காரணங்களைத்தான் பார்ப்போமே !

ஒரு கம்பனி மேல் கூறப்படும் செய்தி (what news is positive for a company and what news is negative). அது நல்ல செய்தியாகவும் இருக்கலாம், கெட்ட செய்தியாகவும் இருக்கலாம். பொதுவாக முதலீட்டாளர்கள் ஒரு கம்பனியின் மேல் வைத்துள்ள நம்பிக்கையை பொறுத்தே, அக்கம்பனியின் பங்கு ஏற்றத்தையோ, வீழ்ச்சியையோ சந்திக்கும்.

ஒரு கம்பனியின் சந்தை மதிப்பு. (Market capitalization)

ஒரு கம்பனியின் சொத்து, அதன் சந்தை மதிப்பை பொறுத்து. அதாவது ஒரு பங்கின் விலை * மொத்த பங்குகள். (price per share * no of shares)

உதாரணமாக, ஒரு கம்பனி (Company A) பங்கின் விலை $100 என்று வைத்துக்கொள்வோம். மொத்தம் 1 Million பங்குகள் (shares) என்றால் அக்கம்பனியின் மதிப்பு என்பது $100 * 1 million shares = $100 millionஆகும்.

அதே மற்றொரு கம்பனி (Company S) பங்கின் விலை $50 என்று வைத்துக்கொள்வோம். மொத்த 5 million பங்குகள் என்றால், அக்கம்பனியின் மதிப்பு $50 * 5 million shares = $250 million ஆகும். அதாவது முன்பு கூறப்பட்ட (Company A) கம்பனியை வீட இதற்கு (Company S) சந்தையில் மவுசு அதிகம்.

கம்பனியின் ஆண்டு வருமானம். (Company Earnings)
ஒரு கம்பனி லாபகரமாகவும், அதிக வருமானம் ஈட்டுகிறது என்றால் சந்தையில் நீண்ட காலம் நிலைக்க கூடியது என்று அர்த்தம்.

அதே ஒரு கம்பனி நட்டத்தில் ஓடுகிறது என்றால், அக்கம்பனியின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் தயங்குவார்கள். அவ்வறான நிறுவனங்கள் சந்தையில் நிலைக்க முடியாது.

இதற்காகத்தான் பொது நிறுவனங்கள் ஒவ்வொரு காலண்டிற்கும் லாபம்/நட்டங்களை வெளியிடுவார்கள். அவ்வாறான முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கு வகையில் இருந்தால், அக்கம்பனி பங்குகளின் விலை ஏறும். அதே எதிர்பார்த்த அளவிற்கு முடிவுகள் இல்லாமல் அதிர்ச்சியை கொடுக்கும் என்றால் பங்குகளின் விலை இறங்கும்.

பங்குகளின் விலை ஏற்றத்திற்கும் வீழ்ச்சிக்கும் கம்பனியின் காலாண்டு முடிவுகளை (Quarterly results) மட்டும் சாராது, வேறு நிறைய காரணங்களும் அடங்கும். அவ்வாறான சில காரணங்கள் பின்வருமாறு,

-நாட்டின் பொருளாதார நிலையை பொறுத்து.

-பணவீக்க விகிதத்தை பொறுத்து. (Inflation).

-நிதி அமைச்சகத்தின் பொருளாதார கொள்கைகள்.

-அந்நிய முதலீடுகள். (Foreign Investments).

-மசகுஎண்ணெய் விலையில் ஏற்றம், இறக்கத்தை பொறுத்து. (Oil prices).

-பருவ மழை பெய்ய வில்லை என்றால் தானிய உற்பத்தி குறைந்து, அதை சார்ந்த பங்குகள் பாதிப்படையும்.

-மத்திய வங்கி வெளியிடும் செய்திகள். (Central Bank news).

-புயல், சுனாமி, வெள்ளம் போன்ற பேரழிவுகள். (Natural disaster).

-அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள். (American economical status).

-அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை.

என்று எவறுமே கனிக்க முடியாத நிறைய விசயங்கள் பங்குச்சந்தை பாதிக்கும். மேலே குறிப்பிட்டது போல இவை சில காரணங்களே. பங்குச்சந்தையின் நிலை கனிப்பது சற்று கடினமான விசயம் என்று நிறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/what-causes-stock-prices-to-change.html"

6 comments:

Subha said...

Can you tell me which company share is profitable at the current moment?it might help some of the onvestors to consider buying shares from them. TQ

Atchuthan Srirangan said...

//Can you tell me which company share is profitable at the current moment?it might help some of the onvestors to consider buying shares from them. TQ//


இந்த இணையதளம் பங்குச்சந்தையைப் பற்றி அறிந்து கொள்ளவும், பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி புரிந்து கொள்ளவும் உதவும் வகையில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. எந்தெந்தப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எந்த அறிவுரையும் இந்த இணையதளத்தில் கொடுக்கப்படவில்லை. பங்குச்சந்தையில் நீங்கள் செய்யும் எந்த வேலையும் முழுவதும் உங்கள் முடிவாகும்.

Subha உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Maximum India said...

நல்ல பதிவு.

உங்கள் சேவை தொடரட்டும்!

நன்றி!

Atchuthan Srirangan said...

// Maximum India said...
நல்ல பதிவு.

உங்கள் சேவை தொடரட்டும்!

நன்றி!//

Maximum India உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

sivam said...

Usefull details 4 all.Very nice blog.

sivam said...

Very nice details.Usefull mag 4 every one.