Monday 28 September 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 28.09.2009

இலங்கை பங்குச்சந்தை இன்று சிறிதளவு உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.05 சதவீதம் (1.59 புள்ளி) உயர்ந்து 2,893.64 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.54 சதவீதம் (17.58 புள்ளி) உயர்ந்து 3,248.75 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 326.8 மில்லியன் ரூபாய்.

திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 21.4 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 69.4 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 48.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். உங்கள் பின்னுட்டல்கள் எதிர்பாக்கப்படுகிறது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/28092009.html"

1 comment:

கந்தர்மடம் கவின் said...

மிக..மிக பயனுள்ள நல்ல முயற்சி, பாராட்டுக்கள். தொடருங்க.
இப்படியான நல்ல விடயங்களுக்கெல்லாம் பின்னூட்டம் எதிர்பார்க்காதீங்க...பின்னூட்டம் எல்லாம் “பெரிய பதிவர்களை” பந்தம் பிடிக்க இல்லை , ஷ்ரேயாவின் பாவடைக்குள் என்ன ..? பொன்ற பதிவுகளுத்தான் அதிகளவாக வரும்.
உங்கள் பயனுள்ள பதிவை சேவையாக நினைத்து தொடருங்கள்.

வாழ்த்துக்கள்.