Wednesday 20 January 2010

* அமெரிக்காவில் ஒரே நாளில் 3 வங்கிகளுக்கு மூடு விழா......

ஒரு பக்கம் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாக அமெரிக்க நிதித் துறை கூறினாலும்,வங்கிகள் மூடு விழா தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது.அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் ரியல் எஸ்டேட் துறைக்கு அடுத்து, மிக மோசமான பாதிப்புக்கு உள்ளானது வங்கித் துறைதான்.

2010ம் ஆண்டின் தொடக்கத்திலேயே அமெரிக்க வங்கித் துறையில் 4 வங்கிகள் மூடப்பட்டன.ஜனவரி 15ம் தேதி அன்று மட்டும் பார்ன்ஸ் பேங்கிங் கம்பெனி(Barnes Banking Company), செயின்ட் ஸ்டீபன் வங்கி(St Stephen State Bank), டவுன் கம்யூனிட்டி வங்கி(Town Community Bank & Trust) உள்ளிட்ட மூன்று வங்கிகள் மூடப் பட்டன. கடந்த வாரம் வாஷிங்டனைச் சேர்ந்த ஹாரிசன் வங்கி (Horizon Bank) திவாலானது.

அமெரிக்க காப்பீட்டுத் துறையால் உத்தரவாதமளிக்கப்பட்ட மொத்த வங்கிகள் 8000.இந்த 3 வங்கிகள் திவாலானதால் 296.3 மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க காப்பீட்டுத் துறை அறிவித்துள்ளது.

2009-ம் ஆண்டில் மட்டும் 140க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு மேல் மூடு விழா கண்டுள்ளன. 2008-ல் 20 வங்கிகளும், 2007-ல் மூன்று வங்கிகளும் மூடப்பட்டன.

அமெரிக்கா:ஒரேநாளில் 3 வங்கிகளுக்கு மூடு விழா-வீரகேசரி submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/3.html"

2 comments:

A.V.Roy said...

நம் நாட்டு தனியார் வங்கிகளுக்கு இந்நிலை ஏற்படாத வரை நாமெல்லாம் பாக்கியவான்கள்..காரணம் அதிகமானவர்களின் வைப்பு தனியார் வங்கியிலே தங்கியுள்ளது...
(thanks for the link)

Atchuthan Srirangan said...

//A.V.Roy said...

நம் நாட்டு தனியார் வங்கிகளுக்கு இந்நிலை ஏற்படாத வரை நாமெல்லாம் பாக்கியவான்கள்..//

நல்ல கவலை...

//thanks for the link//

வீரகேசரி இணையத்தில் உள்ளதும் என் ஆக்கம் தான்.

A.V.Roy உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி