Monday 14 February 2011

* மின் உற்பத்தியில் வடபகுதியும் முன்னேற்றம்

2012 முடிவதற்குள் இலங்கை முழுவதும் மின் ஒளி பெறவேண்டும் என மகிந்த சிந்தணை எதிர்பார்க்கின்றது. இதற்கமைய மின்சார உற்பத்தியில் வடபகுதியும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தை கண்டிருப்பதாக அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு இறுதி நிலவரப்படி மின் வழங்களில் கிளிநொச்சி 10%, முல்லைத்தீவு 16%, மன்னார் 44%, வவுணியா 68%, யாழ்ப்பாணம் 72% என்றளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் 100% மின் வழங்களை பெற்ற மாவட்டங்களாக கொழும்பு, கம்பகா, அம்பாந்தோட்டை ஆகிய
மாவட்டங்கள் காணப்படுகின்றன. அத்துடன் 90% க்கு மேலான அளவில் மின் வழங்களை பெற்ற பிரதேசங்களாக களுத்துறை, மாத்தறை, காளி, கண்டி ஆகிய மாவட்டங்கள் காணப்படுகின்றன என அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_14.html"

Friday 11 February 2011

* எலக்ட்ரானிக் பிக் பாக்கெட் (Electronic Pick Pocket)

கிரெடிட் கார்டுகளை வைத்துக்கொண்டு பெருமையுடன் ஸ்விப் பண்ணும் ஆசாமிகள் இனி தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டும்.

அந்த எளிய முறைக்கும் ஆப்பு தயாராகி விட்டது. உங்களின் கிரெடிட் கார்டுகளை கண்களால் காணாமல், கைகளால் கூட எடுக்காமல் அதனை அப்படியே ஸ்கேன் செய்து காப்பி அடிக்கும் நவீன சாதனங்களும் வந்துவிட்டன.

கிரெடிட் கார்டு என்றில்லாமல்,பாஸ்போர்ட் போன்ற அதி முக்கியமான தகவல்களையும் இம்முறையில் எளிதாக திருடலாம்.




submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/electronic-pick-pocket.html"

Thursday 10 February 2011

* வேலைதேடி வெளிநாடு செல்வோர் வயதெல்லை அதிகரிப்பு

வேலைதேடி வெளிநாடு செல்லும் இலங்கையரின் வயதெல்லை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடு செல்லும் இளம் பெண் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இவ்வயதெல்லை அதிரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கையரில் 50 வீதமானவர்கள் பெண்கள். அத்துடன் 2010 யூன் வரை 134,670 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றனர். இவர்களில் 59,377 பேர் பெண்கள் என லங்கா பிஸ்னஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

பெண்களை வேலைக்கெடுக்கும் பெரும்பாலான வெளிநாடுகள் இவர்களிற்கான குறைந்த வயதெல்லை கட்டுப்பாட்டை கொண்டிருக்கவில்லை. அதேவேளை வெளிநாடு செல்லும் இலங்கையருக்கு இழைக்கப்படும் பல்வேறு வகையான சுறண்டல்களில் இளம் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என லங்கா பிஸ்னஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_10.html"

Wednesday 9 February 2011

* எரிபொருள் விலை அதிரிக்க வேண்டும்: லங்கா ஐ.ஓ.சி அரசிடம் கோரிக்கை

ஒரு லீற்ரர் பெற்ரோலின் விலை 9 ரூபாவாலும், ஒரு லீற்ரர் டீசலின் விலை 21 ரூபாவாலும் அதிகரிக்க அரசிடம் கோரியுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி யின் இயக்குனர் சுரேஸ் குமார் தெரிவித்துள்ளதாக லங்கா பிஸ்னஸ் இனையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் எரிபொருட்களிற்கான விலை அதிகரித்துள்ளது.இதற்கமைய லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் விலையதிரிப்பினை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசு ஒரு லீற்ரர் பெற்ரோலுக்கான தீர்வையினை 10 ரூபாவால் குறைக்க திட்டமிட்டுள்ளதாக இன்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.

இதுவரை ஒரு லீற்ரர் பெற்ரோலிற்கு 15 ரூபா தீர்வை விதிக்கப்பட்டு வந்ததுடன் தற்போது 5 ரூபாவாக தீர்வை அமைவதால் பெற்ரோல் விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ஒரு லீற்ரர் பெற்ரோல் 115 ரூபாவிற்கு விற்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_09.html"

Tuesday 8 February 2011

* இலங்கையின் ஏற்றுமதி வருமானங்கள் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 2010 நவம்பரில் 834 மில்லியன் ஐ.அ.டொலரால் அதிகரித்துள்ளது. இது 2009 நவம்பருடன் ஒப்பிடுகையில் 36 வீத வளர்ச்சி என்பதுடன் 2004 ஒக்டோபருக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட ஆகக் கூடிய தொகை என மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது.


ஏற்றுமதி வருமானத்தில் கைத்தொழில் ஏற்றுமதிகள் (76வீதம்) பிரதான இடத்தினை வகிக்கின்றது. இதற்கு புடவை மற்றும் ஆடை ஏற்றுமதி அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளதாகும். இதேவேளை 2010ன் முதல் 11 மாதங்களில் மொத்தமாக ஏற்றுமதி வருமானம் 7,339 மில்லியன் ஐ.அ.டொலராக காணப்படுவதுடன், இது 2009ம் ஆண்டை விட 15.4 வீதம் அதிகமாகும்.

எனினும் 2009 உடன் ஒப்பிடுகையில் 32.6 வீதம் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துள்ளது. அதாவது 2010ன் முதல் 11 மாதங்களில் இறக்குமதிச் செலவுகளின் அளவு 12,083 மில்லியன் ஐ.அ.டொலர் என பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_5234.html"

* பிரித்தானியாவில் தங்கத்தின் விலை உயர்வு

பொருளாதார நிச்சயமற்ற நிலைமைகள் காரணமாக பிரித்தானியாவில் தங்கத்தின் விலை கடந்த மாதம் ஒரு அவுன்ஸ் 882 ஸ்டெர்லிங் பவுணாக அதிகரித்திருந்தது. இது 2007ல் இருந்த விலையிலும் பார்க்க இரு மடங்கு அதிகமானதாகும்.

இதேவேளை தங்கம் மீதான முதலீடு ஒரு காலத்தில் ஆபத்தானாதாக கருதப்பட்டது. ஆனால் இன்று தங்கத்தின் மீதான முதலீடு எப்போதுமே சிறந்த ஒரு முதலீடு என்று கருதப்படுகின்றது. தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற நிலையில், புதிதாக தங்கம் விளையும் இடங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

பிரிட்டனுக்குச் சொந்தமான வட அயர்லாந்திலுள்ள தொழில்படு நிலையில் இருந்த ஒரேயொரு தங்கச் சுரங்கத்தை 2007ல் கனேடிய நிறுவனமான கலண்டாஸ் பொறுப்பேற்றது. "ஒமாக்" என்பதே இந்தத் தங்கச் சுரங்கத்தின் பெயராகும். இந்த தங்கச் சுரங்கம் 1998ல் ஐ.ஆர்.ஏ கொரில்லாக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி 29 பேர் பலியானார்கள்.

எனினும் இச்சுரங்கத்தில் பிரிட்டிஷ் மகாராணி உட்பட பலர் முதலீடு செய்துள்ளனர். தங்கத்துக்கான உலகச் சந்தை நம்பிக்கையூட்டுவதாக உள்ளதென்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் கூறுகின்றார்.

பிரிட்டனில் ஒரு அவுன்ஸ் தங்கம் 158 ஸ்டெர்லிங் பவுணுக்கு ஒரு காலத்தில் விற்கப்பட்டது. தற்போது அதன் விலை 800 ஸ்டெர்லிங் பவுணுக்கும் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

என் ஆக்கம் உதயன் இணையத்தில்


submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_08.html"

Saturday 5 February 2011

* இலங்கையின் பணவீக்கம் இவ்வாண்டு உயரும்

இலங்கையின் பொருளாதாரம் இவ்வாண்டில் 7 வீதத்தால் வளர்ச்சியடையும். எனினும் பணவீக்கம் 8 வீதமாக உயரும் என சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு துறை, அன்னியச் செலாவணி ஒதுக்கு மற்றும் நாணயமாற்று வீதம் நிலையான தன்மையைப் பெற்று வருகின்றது. இப்போதுதான் இலங்கை சரியான பாதையில் பயணிக்கிறது என ஐ.எம்.எவ் ன் இலங்கைக்கான தூதுவர் கொசி மாதே தெரிவித்துள்ளார்.

கடனளிப்புக்காக இலங்கைப் பொருளாதாரம் 5வது தடவையாக ஐ.எம்.எப் ஆல் மீளாய்வு செய்யப்பட்டது. இதன் முடிவுகளை சமர்பித்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையின் பொருளாதார போக்கு திருப்தியளிப்பதாக உள்ளது. எனினும் இவ்வாண்டில் பணவீக்கம் அதிகரிக்கும். இதற்கு சர்வதேச உணவு விலையேற்றம், உள்நாட்டு வெள்ள அழிவுகள் பணவீக்க உயர்வை ஊக்குவிக்கும். எனினும் வெளிநாட்டு பாதிப்புக்கள் மற்றும் உள்நாட்டு மெய்சொத்து சந்தை தொடர்பாக மத்திய வங்கி சிறப்பான கண்கானிப்பினை மேற்கொண்டு வருகிறது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச வருமானம் மிகக் குறைவாக உள்ளது. அத்துடன் வரி மற்றும் முதலீட்டு சீர் திருத்தங்கள் சிறப்பாக உள்ளன. நிதித் துறையும் இப்போது வளர்ச்சிக்கு உதவக் கூடிய நிலையினை அடைந்துள்ளது. இன்னும் 4 - 5 வருடங்களில் தற்போதுள்ள 80% எனும் வரவுசெலவு பற்றாக்குறை நிலையை 60% மாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பேரினப் பொருளாதாரம் சிறப்பாக நகருகின்றது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்தாண்டு 6.5% பணவீக்கம் அமையும் என ஐ.எம்.எப் எதிர்வு கூறியது. ஆனால் 5.9% என குறைவாக பதிவு செய்தது. அத்துடன் ஐ.எம்.எப்பின் நோக்கம் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பல விமர்சனங்கள் இருப்பதாக பொருளியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நன்றி:-உதயன் இணையம்

submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_05.html"

Tuesday 1 February 2011

* இலங்கையில் புதிதாக ஐயாயிரம் ரூபா பெறுமதியிலும் பணநோட்டு


எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு புழக்கத்தில் இருக்கும் நாணயத்தாள்களுடன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளொன்றையும் அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தீர்மானத்தின் பிரகாரம் தற்போதைக்கு புழக்கத்தில் இருக்கும் 20,50,100,500, 1000,5000 ரூபா பெறுமதியான நாணயத்தாள்களுக்கும் புதிதாக நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

அதனுடன் இணைந்ததாக இலங்கையில் இதுவரை புழக்கத்தில் இல்லாத ஐயாயிரம் பெறுமதியான ரூபா நோட்டும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ரூபா நோட்டுகள் எதிர்வரும் சுதந்திர தினத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.

இலங்கையின் அபிவிருத்தி, சுபீட்சம், கலைகள், பறவைகள் என்பன புதிய ரூபா நோட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

நன்றி:- தமிழ்வின்

submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post.html"