Showing posts with label பிரிட்டிஷ் ஏர்வேஸ். Show all posts
Showing posts with label பிரிட்டிஷ் ஏர்வேஸ். Show all posts

Wednesday, 12 May 2010

* பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்களின் 20 நாள் 'மெகா வேலை நிறுத்தம்'

பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் 20 நாட்கள் மெகா ஸ்ட்ரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த வேலை நிறுத்தம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு குறித்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் சில வாரங்களுக்கு முன் இருமுறை வேலை நிறுத்தம் நடத்தினர்.இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது பிரிட்டிஷ் ஏர்வேஸ்.

முன்பு நடந்த வேலை நிறுத்ததில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ். இதனை கைவிட வேண்டும் என்று கோரியும், நிறுத்தப்பட்டுள்ள பயணச் சலுகை உள்ளிட்ட சம்பள உயர்வுகளை உடனே தரக் கோரியும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்களின் அமைப்பான யுனைட் கோரியுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸில் உள்ள 12000 விமான ஊழியர்களில் 90 சதவிகிதத்தினர் இந்த யுனைட்டின் அங்கத்தினர்களே.


20 நாள் ஸ்ட்ரைக்குக்கான தேதிகளையும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

மே 18-22, மே 24-28, மே 30-ஜூன் 3 மற்றும் ஜூன் 5-9 என நான்கு கட்டங்களாக இந்த ஸ்ட்ரைக்கை நடத்த உள்ளனர் ஊழியர்கள்.

ஏற்கெனவே ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ். இப்போது இந்த மெகா வேலை நிறுத்தம் நடந்தால், நஷ்டம் தாங்க முடியாத அளவுக்குப் போய்விடும் என்பதால், பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது நிர்வாகம். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/20.html"

Wednesday, 21 April 2010

* பிரிட்டிஷ் ஏர்வேஸ் - ஐபீரியா 'மெகா' இணைப்பு

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் ஸ்பெயினின் ஐபீரியா நிறுவனமும் இணைகின்றன.

இதன் மூலம் உலகின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் - ஐபீரியா உருவெடுத்துள்ளது.

இந்த இணைப்புக்கான முயற்சி கடந்த ஆண்டே துவங்கிவிட்டது. அனைத்து நடைமுறைகளும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இணைப்பின் மூலம் 400 மில்லியன் யூரோ சேமிக்கப்படும் என்றும், இது பங்குதாரர்கள், பயணிகள் மற்றும் தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் திட்டம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்த இணைப்புக்குப் பின் புதிதாக நிறுவனம் உருவாக்கப்படாது என்றும், ஏற்கெனவே உள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஐபீரியா அவற்றின் சொந்தப் பெயரிலேயே இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த இணைப்புக்குப் பிறகு 408 விமானங்களுடன் 200 விமான நிலையங்களில் 58 மில்லியன் பயணிகளுடன் இயங்கும் பெரிய விமான போக்குவரத்து நிறுவனமாக இது திகழும்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்குகிறது. மேலும் நிறுவனத்தின் ஊழியர்கள் வேறு தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நேரத்தில் இந்த இணைப்பு பெரும் இழப்பிலிருந்து காக்கும் என நம்புகிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/blog-post_21.html"