Showing posts with label அம்பானி. Show all posts
Showing posts with label அம்பானி. Show all posts

Monday, 14 June 2010

* அம்பானி சகோதரர்கள் தொலைத் தொடர்புத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை செல்கின்றனர்

இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர்களான அம்பானி சகோதரர்கள் இலங்கை செல்ல உள்ளனர். இலங்கையின் தொலைத் தொடர்புத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்த பேச்சுக்களை நடத்தவே அவர்கள் இலங்கைக்கு வர உள்ளதாக இலங்கையின் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஆசியப் பிராந்தியத்தில் தொலைத் தொடர்புத் துறையில் ஜாம்பாவான்களாகத் திகழும் அம்பானி சகோதரர்களின் வருகை இலங்கையின் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த அமுனுகம இது இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் ஏனைய முதலீட்டாளர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் ஒரு கோடியே நாற்பது லட்சம் பேர் தொலைபேசிகளைப் பாவிப்பதாகத் தெரிவித்த அமுனுகம இது தெற்காசியாவிலேயே மிகவும் அதிகமான விகிதாசாரம் எனவும் குறிப்பிட்டார்.

தகவல்:-The Official Government News Portal of Sri Lanka submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/blog-post_14.html"