Thursday 16 December 2010

* இலங்கையில் இரண்டாயிரம் ரூபா நோட்டுகள் நிறுத்தம்! ஐயாயிரம் ரூபா நோட்டுக்கள் அச்சிடப்படவுள்ளன

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஐயாயிரம் ரூபா நோட்டுகள் அச்சிடப்படவுள்ளன. அதேநேரம் தற்போது புழக்கத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபா நோட்டுக்களை அச்சிடுவது நிறுத்தப்படவுள்ளன. இந்த தகவலை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கையின் நாளாந்தம் ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. அதேநேரம் பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்திற்கொண்டு குறைந்த பொருட்களை கொள்வனவு செய்ய கூடிய பணத்தை காவி செல்வது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் என்ற காரணத்துக்காகவே ஐயாயிரம் ரூபா அச்சிடப்பட்டு, இரண்டாயிரம் ரூபா நோட்டுகள் நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் வைர விழாவை முன்னிட்டு ஐயாயிரம் ரூபா பெறுமதியான நாணயக் குற்றியொன்றை வெளியிட மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

1950.08.28 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி 2010.08.28 ஆம் திகதியன்று 60 ஆண்டுகளைப் பூர்த்திசெய்தமையைக் குறிக்கும் வகையிலேயே இந்த நாணயக் குற்றி வெளியிடப்படுகின்றது.

பல வர்ணங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டுள்ள இந்த நாணயக் குற்றியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் மரம் ஒன்றின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அதன் பெறுமதி குறிக்கப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட் அளவில் இந்த நாணயம் அச்சிடப்பட்டுள்ளதால் ஐயாயிரம் ரூபா பெறுமதியான இந்த நாணயக் குற்றி ஏழாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதான காரியாலயத்திலும் மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள அதன் கிளை அலுவலகங்களிலும் இந்த நாணயக் குற்றியைப் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய வங்கி அறிவிததுள்ளது.

நன்றி :-தமிழ்வின் submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/12/blog-post_16.html"

Wednesday 15 December 2010

* இலங்கையில் 5ஆயிரம் ரூபா நாணயக்குற்றி அறிமுகம்













இலங்கை மத்திய வங்கியின் வைரவிழாவை முன்னிட்டு ஐயாயிரம் ரூபா பெறுமதியான நாணயக் குற்றியொன்றை வெளியிட மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

பல வர்ணங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டுள்ள இந்த நாணயக் குற்றியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் மரம் உன்றின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அதன் பெறுமதி குறிக்கப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட் அளவில் இந்த நாணயம் அச்சிடப்பட்டுள்ளதால் ஐயாயிரம் ரூபா பெறுமதியான இந்த நாணயக் குற்றி ஏழாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி:- வீரகேசரி இணையம் submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/12/5.html"

Wednesday 8 December 2010

* அமெரிக்க நிறுவனங்கள் பொருளாதார விழ்ச்சியில் இருந்து மீள்கின்றனவா?


அமெரிக்க நிறுவனங்களின் மேலதிகாரிகள் மற்றும் நிதித்துறை நிர்வாகிகள் செல்வக்கொழிப்பிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் பத்து மில்லியனுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பொருளாதார மந்த நிலைக்கு முகம் கொடுத்துக்கொண்டுவரும் நிலையில் இவர்கள் மிக உயர்ந்த கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

2009ம் ஆண்டு அமெரிக்காவின் 450 பெரிய நிறுவனங்களின் நிர்வாகிகள் பெற்ற வருடாந்த கொடுப்பனவுகள் 11% அதிகரித்திருப்பதாக The Wall Street Journal வெளியிட்ட புதியதொரு கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாய், சராசரியான ஊதியம் (சம்பளங்கள், கொடுப்பனவுகள், பங்குகள் மற்றும் பிற ஊக்கச் சலுகைகள் ஆகியவை உட்பட) 3 சதவீதம் உயர்ந்து 2009ல் 7.3 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

நிறுவனங்களின் இலாபம் முந்தைய வருடத்தை விட இருமடங்காய் அதிகரித்திருந்ததன் விளைவே இந்த அதிகரித்த ஊதியங்கள். இதனால் மொத்தமாய் பங்குதாரருக்கான வருடாந்த வருவாய் 29% அதிகரித்திருந்தது.கடந்த இருவருட காலங்களில் நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கை குறைப்பு,மற்றும் ஊதியங்கள் மற்றும் நல உதவிகள் குறைப்பு என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன.முழு-நேரத் தொழிலாளர்களை விடுத்து வறுமை நிலை ஊதியங்களைப் பெறும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு பணியமர்த்தி கொஞ்சம் கொஞ்சமாய் உற்பத்தித் திறனை உயர்த்திக் கொண்டன.

சென்ற வருடத்தில் பெரும் ஊதியங்களை தட்டிச் சென்றிருக்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியல் பின்வருமாறு:

1. Gregory B.Maffei - Liberty Media Corp - இவர் சென்ற ஆண்டில் 87.1 மில்லியன் டொலர் தொகையை மொத்தமாய் ஊதியமாய் பெற்றுள்ளார் - இது அவரது 2008 தொகையைக் காட்டிலும் நான்கு மடங்கு.

2.Larry Ellison - Oracle's Founder - இவர் 68.6 மில்லியன் டொலர்களை பெற்றிருந்தார்.

3.Ray r.Irani - Occidental Petroleum Corp - இவர் பெற்ற தொகை 52.2 மில்லியன் டொலர்கள்.

4.Carol Bartz -Yahoo - இவர் 44.6 மில்லியன் டொலர்கள் பெற்றிருந்தார்.

5.Leslie Moonves - CBS - இவர் 39 மில்லியன் டொலர்கள் பெற்றிருந்தார்.

S&P 500 குறியீடு இந்த ஆண்டில் இதுவரை 7.5 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், 2010ல் மேல்நிலை நிர்வாகிகள் இன்னும் கூடுதல் ஊதியங்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்களும் வருவாய் எதிர்பார்ப்புகளை விஞ்சுகின்றன, பங்கு விலைகள் அதிகரிக்கின்றன, செயல்திறன் நன்றாக உள்ளது.ஆயினும், இந்த வருட இறுதியில் வோல் ஸ்ட்ரீட் தனது கொடுப்பனவுகளை அளிக்கும்போது நிதி மேலாளர்களும் (Hedge fund) தனியார் பங்கு வர்த்தகர்களும் பெறவிருக்கும் விசித்திரமான பெரும் தொகைகளுடன் ஒப்பிட்டால் ஊடகத் துறை, எரிசக்தித் துறை மற்றும் இணைய நிறுவனங்களின் தலைவர்கள் பெறக்கூடிய தொகை குறைவாகவே இருக்கிறது. Goldman Sachs, Morgan Stanley, Citigroup, Bank of America and JPMorgan Chase ஆகியவை தங்களது வருட-இறுதி கொடுப்பனவுகளுக்காக 89.54 பில்லியன் டொலர் தொகையை ஒதுக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தை உருக்குலைவின் விளிம்பிற்குக் கொண்டுவந்த நிதி முறிவின் வெறும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பெருநிறுவனங்கள் மற்றும் நிதிச் சந்தைகளின் “போட்டித்திறனையும்” ”இலாபமீட்டுநிலையையும்” பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்க முடியாது என்று வாதிட்டுக் கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் முதலாளித்துவ அரசாங்கங்கள் சிக்கனத்தையும், செலவுக் குறைப்பையும் கோருகின்றன.தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கைத் தரங்கள் நிரந்தரமாக குறைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளாதவரை வேலைக்கு அமர்த்தப் போவதில்லை என்பதை பணமூட்டைகளின் மீது அமர்ந்திருக்கும் அமெரிக்க பெருநிறுவனங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.

பொருளாதாரத்தை சமநிலைக்குக் கொண்டுவர யாருக்காவது ஊதிய வெட்டு அவசியம் என்றால், அது நிச்சயமாக கொழுத்த சம்பளத்தைப் பெறும் முதலீட்டு வங்கியாளர்கள்,மற்றும் பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் ஆகியோருக்குத் தான் அவசியம் என்று இதைப் படிக்கும் உங்களில் பலரும் நினைப்பீர்கள் என்று நிச்சயமாக எனக்குத் தெரியும். அப்படித்தான் சோசலிச சொர்க்கத்தில் விடயங்கள் நடக்கும், ஆனால் நியாயமானது என்பதைக் காட்டிலும் செயல்திறனை உருவாக்குவதில் மிகவும் மேம்பட்டவையான சந்தைப் பொருளாதாரங்களில் அப்படி நடக்காது.

உண்மையில், முதலாளித்துவம் இம்முறையில் தான் வேலை செய்கிறது, ஆனால் அதற்கும் “செயல்திறனுக்கும்” சம்பந்தமில்லை. கண்ணியமான இருப்பிடம், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு சீரமைப்புகள் ஆகிய சமூகத்தின் மிக அடிப்படையான தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் விடப்படும் நிலையில் மில்லியன் கணக்கான மக்களை வேலையின்மைக்கும் வறுமைக்கும் சபிப்பதில் என்ன செயல்திறன் கொட்டிக் கிடக்கிறது?

”மிகை நுகர்வு” பற்றிய எல்லா பேச்சுக்களிலும், ஆளும் வர்க்கத்தின் நுகர்வைக் குறைப்பதைப் பற்றி ஒருபோதும் ஆலோசிக்கப்பட்டதில்லை. அவர்களது முதலாளித்துவ அமைப்பு முறையும் குற்றவியல் நடவடிக்கைகளும்தான் உலக மக்களில் பெரும்பான்மையானோர் எதிர்கொள்ளும் திக்கற்ற நிலைமைகளுக்கு பொறுப்பானவை ஆகும்.

வீரகேசரி இணையத்தில்:- அமெரிக்க நிறுவனங்கள் பொருளாதார விழ்ச்சியில் இருந்து மீள்கின்றனவா? submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/12/blog-post.html"

Monday 6 December 2010

* பிரித்தானியாவில் 7லட்சம் பேர் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம்

ஒரு பக்கம் அரசின் 40 சதவீத செலவீனக் குறைப்பு நடவடிக்கை மற்றொரு பக்கம் சிறுவர்களுக்கான நன்மைகள் ரத்து ஆகியவற்றால் ஆட்டங்கண்டுள்ள பிரித்தானியர்களில் பலர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதற்கொண்டு அதிகப்படியான வரி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் பிரித்தானியக் குடும்பங்களின் பொருளாதார நிலை மேலதிக பின்னடைவைச் சந்திக்கும் என்பது உறுதி என்பதையும் நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கே போராட வேண்டிய நிலை ஏற்பட்டு விடலாம் எனவும் நிபுணர் தரப்பு எச்சரித்துள்ளது.

தற்போதைய சூழலில் பிரித்தானியாவில் 43,875 பவுண்ஸ் வருமானமீட்டுபவர்கள் தான் அதிகப்படியான வரி செலுத்துபவர்களாக மதிப்பிடப்படுகிறார்கள். இந்த வரம்பு அடுத்த வருடம் முதற்கொண்டு 42,475 பவுண்ஸ் என குறைக்கப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கானோர் இந்தப் பட்டியலில் சேர்ந்து விடுவர் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/12/7.html"

Thursday 11 November 2010

* உலக வல்லரசுகளின் நாணயப் போர்

சீனப் பிரதமர் வென் ஜியாபோ ஆற்றிய உரை ஒன்றில் ஐரோப்பிய அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களுக்கு சீன நாணயம் முக்கிய மறுமதிப்பீடு செய்யவேண்டும் என்ற ஒபாமா பிரச்சாரத்தில் சேர்க்க வேண்டாம் என்று முறையிட்டார். அத்தகைய நாணய மாற்றம் பல சீன ஏற்றுமதியாளர்களைத் திகைப்பில் ஆழ்த்திவிடும் என்று சுட்டிக்காட்டிய அவர், “சீனா அதனுடைய பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டால், அது உலகிற்குப் பேரழிவைத் தரும்” என்று எச்சரித்தார்.

பல ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகபட்சமாக 2 முதல் 3 வரையிலான இலாப சதவிகிதத்தைத்தான் கொண்டுள்ளன. “சிலர் கோரியுள்ளபடி யுவானை 20 முதல் 40 சதவிகிதம் வரை மதிப்புக் கூட்டினால், ஏராளமான சீன ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுவிடும், தொழிலாளர்கள் வேலைகளை இழந்துவிடுவர், நகரத்துக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் கிராமப் புறத்திற்குச் செல்ல நேரிடும். இவை அனைத்தும் சமூகமானது உறுதியான தன்மையில் நீடிக்க இடரைக் கொடுத்துவிடும்” என்று வென் விளக்கினார்.

சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, சீனா மூன்றாவது காலாண்டில் தொடர்ந்து 9.6 சதவிகிதம் வளர்ச்சியை அடைந்தது. இது இரண்டாவது காலாண்டு வளரச்சியான 10.3 சதவிகிதத்தை விடச் சற்றே குறைவாகும்.2009ல் சீனா கிட்டத்தட்ட 50 சதவிகித உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புக் கொடுத்துள்ளது. பல நிறுவனங்களுக்கும் இது பெரிய சந்தையாக இருப்பதற்கான திறனையும் கொண்டுள்ளது.

சீன ஏற்றுமதியாளர்கள் ஒரு குறுகிய இலாப எதிர்பார்ப்பில் தான் செயல்படுகின்றனர். ஏனெனில் அவர்களுடைய பொருட்களின் விலைகள் வெளிநாட்டு பெருநிறுவன வாடிக்கையாளர்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில், அவர்கள் தங்கள் தேவைகளைப் பிற குறைவூதிய நாடுகளான வியட்நாம் போன்றவற்றிற்கு எளிதில் மாற்றிக் கொள்ள முடியும். அநேகமாக ஒவ்வொரு சீனத் தொழிலிலும் ஏற்கனவே பரந்த முறையில் கூடுதல் திறனுள்ளது.

ஃபொக்ஸ்கான் நடத்தும் பெரும் அடிமை உழைப்பு ஆலைகள் மற்றொரு உதாரணம் ஆகும். இந்நிறுவனம் உலகின் மிகப் பெரிய ஆலைகளில் பெரும் புகழ்படைத்த ஆப்பிள், டெல் மற்றும் சோனி போன்ற நிறுவனங்களுக்காக மின்னணுப் பொருட்களை இணைப் பொருட்களாகச் செய்ய கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. குறைந்த ஊதியம் மற்றும் இராணுவ வகையிலான அடக்குமுறை பணிநிலைமைகளும் இந்த ஆண்டு பொக்ஸ்கானில் இளந் தொழிலாளர்கள் பலர் தொடர்ந்து தற்கொலைகள் செய்ததால் உயர்த்திக் காட்டப்பட்டன.

2008 கடைசியிலும், 2009 முதற் பகுதியிலும் 20 மில்லியன் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் ஏற்றுமதித் தொழில்களில் தங்கள் வேலைகளை இழந்துவிட்டனர். பெய்ஜிங் தன் பொருளாதாரத்தை குறைந்த கடனை அரசாங்க வங்கிகளிலிருந்து கொடுத்ததின் மூலம்தான் உறுதிப்படுத்த முடிந்தது. அதைப்போல் பாரிய உள்கட்டுமான கட்டமைப்புத் திட்டங்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கு உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் அது அமெரிக்க டொலருக்கு எதிராக யுவான் ஒப்புமையில் குறைந்த மதிப்புடையதை உத்தரவாதப் படுத்துவதற்கும் தலையிட்டது.அது சீன ஏற்றுமதிகளுக்கு உதவியது.இந்த நடவடிக்கைகள் சீனப் பொருளாதாரத்தை 10 சதவிகிதமளவு வளரச் செய்துள்ளன.

ஆனால் பெய்ஜிங் எதிர்கொள்ளும் சங்கடங்கள் அதிகரித்துள்ளன. சீனாவிற்கு எதிராக அமெரிக்கப் பிரச்சாரம், நாணய மறுமதிப்பில், பல துறைகளில் இரு சக்திகளுக்கும் இடையே உள்ள பெருகிய போட்டியின் ஒரு பகுதிதான். சீனாவின் பொருளாதார விரிவாக்கத்தை அமெரிக்காவின் உலக நிலைப்பாட்டிற்கு ஒரு சவாலாக அமெரிக்கா நோக்குகிறது. சீனாவை “நாணய முறையை சாதுரியமாக கையாளும் நாடு” என்று முத்திரையிடுவதாக ஒபாமா நிர்வாகம் அச்சுறுத்தியுள்ளது. இது பதிலடி நடவடிக்கைகளுக்கு வகை செய்யும்.

கடந்த வாரம் Fitch Ratings இன்படி உள்ளூர் அரசாங்க முதலீடுகள் சொத்துச் சந்தைகளில் நடந்துள்ளவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால், சீனாவின் பொதுக் கடன் இப்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 32 முதல் 47 சதவிகிதத்தில் உள்ளது. China Security Journal கடந்த வாரம் உள்ளூர் அரசாங்கக் கடன்களில் 1.15 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தில் 26 சதவிகிதம் அறவிடமுடியாமல் போகலாம் என்று எச்சரித்துள்ளது.

சீனாவில் ஊகம் என்பது வாஷிங்டனின் “பணப் புழக்கம் எளிதாக்கப்படும்” கொள்கையினால் எரியூட்டப்படுகிறது. அதுதான் சீனா போன்ற எழுச்சியடைந்துவரும் சந்தைகளில் அமெரிக்க டொலர்களை வெள்ளமாகப் பாயவைக்கிறது. சீனாவின் மக்கள் வங்கியின் கருத்துப்படி 120 பில்லியன் யுவான் ( $18 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) செப்டம்பர் மாதம் “சூடான பணமாக” (hot money-capital which is frequently transferred between financial institutions in an attempt to maximize interest or capital gain) நாட்டில் பாய்ந்தது—இது ஆகஸ்ட் மாத எண்ணிக்கையை விட இருமடங்கு ஆகும்.

ஆனால் பெய்ஜிங்கின் முக்கிய அச்சம் எந்தப் பொருளாதாரச் சரிவும் சமூக மற்றும் அரசியல் அமைதியின்மையைத் தூண்டும் என்பதாகும். ஏற்கனவே மே மற்றும் ஜூன் மாதங்களில் வேலைநிறுத்தங்கள் அதிக ஊதியங்களைக் கோரி கார்த் தொழிலும், மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு ஆலைகளிலும் நடைபெற்றன. இத்தொழிற்துறை நடவடிக்கை ஒப்புமையில் சிறு அளவிலிருந்து பொருளாதாரத் தேவைகளுடன் வரம்பு கட்டிக் கொண்டது. சீனாவின் 400 மில்லியன் தொழிலாளர்கள் மீண்டும் தொழில்துறை, அரசியல் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினால், அதன்பின் வென் எச்சரித்துள்ளதுபோல், அதிர்ச்சி அலை உலக முதலாளித்துவ முறை முழுவதும் உணரப்படும்.

வீரகேசரி இணையத்தில்:- உலக வல்லரசுகளின் நாணயப் போர் submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/11/blog-post.html"

Wednesday 1 September 2010

* பிரித்தானிய வங்கிகளில் 2014 வரை மிக குறைந்த வட்டி வீதமாகவே பேணப்படும்

2014 வரை 0.5 வீதம் என்ற மிக குறைந்த வட்டியிலேயே இங்கிலாந்து வங்கி தன்னுடைய பணிகளை தொடர வேண்டிய நிலையில் உள்ளது என பிரபல பொருளாதார கணிப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.


அரசு செலவீனக் குறைப்பை தொடங்கியுள்ளதால் அதை திறம்பட சமாளிப்பதற்காக வட்டி வீதத்தை அதிக படுத்த முடியாத நிலையில் இங்கிலாந்து வங்கி உள்ளது என ஒரு பொருளாதார கணிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

அதே நேரத்தில் இது குறித்த பல வேறுபட்ட கருத்துக்களும் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அடுத்த வருடத்திலிருந்து இங்கிலாந்து வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்கத் துவங்கும் என சட்டம் பொறுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டிலிருந்தே இங்கிலாந்து வங்கி 0.5 வீதம் என்ற மிக குறைந்த வட்டியிலேயே இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/09/2014.html"

Saturday 21 August 2010

* இலங்கைப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் பங்குலாப அறிவித்தல்கள்


Ceylon Tea Services PLC - (CTEA)
Date of Announcement:-23. Jul.2010
Rate of Dividend:- Rs.17.50 per share Final Dividend
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM:-03.Sep.2010
XD:-06.Sep.2010
Payment:- 08.Sep.2010

LANKA MILK FOODS PLC - (LMF)
Date of Announcement:-12.Aug.2010
Rate of Dividend: - Rs. 1.50 per share - First and Final Dividend
Financial Year: - 2009/2010
Shareholder Approval:- Required
AGM:- 15.Sep.2010
XD:-16.Sep.2010
Payment: - 27.Sep.2010


THE COLOMBO PHARMACY CO PLC - (PHAR)
Date of Announcement:-13.Aug.2010
Rate of Dividend: - Rs. 4.25 per share - Final Dividend
Financial Year: - 2009/2010
Shareholder Approval: - Required
AGM: - 23.Sep.2010
XD:-24.Sep.2010
Payment: - 04.Oct.2010

LANKA ASHOK LEYLAND PLC - (ASHO)
Date of Announcement:-16.Aug.2010
Rate of Dividend: - Rs. 15.00 per share - First & Final Dividend
Financial Year: - 2009/2010
Shareholder Approval: - Required
AGM: - 27.Sep.2010
XD:-28.Sep.2010
Payment: - 06.Oct.2010

LANKA ALUMINIUM INDUSTRIES PLC - (LALU)
Date of Announcement:-18.Aug.2010
Rate of Dividend: - Rs. 1.25 per share - First & Final Dividend
Financial Year: - 2009/2010
Shareholder Approval: - Required
AGM: - 28.Sep.2010
XD:-29.Sep.2010
Payment: - 07.Oct.2010

ROYAL PALM BEACH HOTELS PLC - (RPBH)
Date of Announcement:-18. Aug.2010
Rate of Dividend:- Rs.0.40 per share First & Final Dividend
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM:- 23.Sep.2010
XD:-24.Sep.2010
Payment :- 04.Oct.2010

RENUKA HOLDINGS PLC - (RHL)
Date of Announcement:-18. Aug.2010
Rate of Dividend:- Rs.0.80 per share First & Final Dividend (Voting & Non Voting)
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM:- 27.Sep.2010
XD:-28.Sep.2010
Payment :- 30.Sep.2010

RENUKA AGRI FOODS PLC - (RAL)
Date of Announcement:-18. Aug.2010
Rate of Dividend:- Rs.0.10 per share First & Final Dividend (Tax Free)
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM:- 27.Sep.2010
XD:-28.Sep.2010
Payment :- 30.Sep.2010

COCO LANKA PLC - (COCO)
Date of Announcement:-18. Aug.2010
Rate of Dividend:- Rs.1.00 per share First & Final Dividend (Rs. 0.94 Tax Free, Voting & Non Voting)
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM:- 27.Sep.2010
XD:-28.Sep.2010

CARGO BOAT DEVELOPMENT COMPANY PLC - (CABO)
Date of Announcement:-20. Aug.2010
Rate of Dividend:- Rs.2.25 per share First & Final Dividend
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM Date:- 21.Sep.2010
XD:-23.Sep.2010
Payment :- 29.Sep.2010

RENUKA CITY HOTELS PLC - (RENU)
Date of Announcement:-20. Aug.2010
Rate of Dividend:- Rs.5.50 per share First & Final Dividend
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM Date:- 21.Sep.2010
XD:-23.Sep.2010
Payment :- 29.Sep.2010


CEYLON TEA BROKERS PLC - (CTBL)
Date of Announcement:-20. Aug.2010
Rate of Dividend:- Rs.0.15 per share First & Final Dividend
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Not Required
XD:-01.Sep.2010
Payment :- 13.Sep.2010 submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/08/blog-post_21.html"

Tuesday 10 August 2010

* யாழ்ப்பாணத்தில் இந்திய வங்கியின் மேலும் ஒரு கிளை

இந்தியாவில் சென்னையைப் பிரதான தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கி யாழ்ப்பாணத்தில் அதன் கிளை ஒன்றை நிறுவ உள்ளது.ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த இந்தியன் வங்கி இயல்பற்ற சூழ்நிலை காரணமாக தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டது

இலங்கையில் இடம்பெற்று முடிந்த உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த அகதிகளுக்கான இந்தியாவின் உதவிகள் இவ்வங்கிக் கிளை மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிய வருகின்றது.

இதேவேளை, ஏற்கனவே கொழும்பில் கிளையை கொண்டுள்ள இந்தியன் வங்கியின் கிளைகளை அடுத்த இரண்டு வருட காலத்தில் இலங்கையின் ஏனைய இடங்களிலும் திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஸின் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கிளை தொடங்கப்பட்ட பிறகு கண்டியில் மேலும் ஒரு கிளை தொடங்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே போல இந்தோனேசியாவில் மேலும் ஒரு பிரதிநிதி அலுவலகம் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ளதகாவும் அவர் தெரிவித்தார். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/08/blog-post_10.html"

Tuesday 3 August 2010

* அமெரிக்காவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் அளவுக்கு வளர்ச்சி வேகம் இல்லை

அமெரிக்காவில் தொடர்ந்து வரும் வேலையின்மைக்குக் காரணம் அங்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய வளர்ச்சி இல்லாததே என்று கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 9.5 சதவீதமாக குறைந்துள்ளது என்றாலும், இதற்குக் காரணம், வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது அல்ல என்றும், வேலை வாய்ப்புக் கோரி பதிவு செய்திருந்த 5 இலட்சம் பேர் வேலை தேடும் முயற்சியைக் கைவிட்டுவிட்டதே என்று கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தில் மட்டும் புதிதாக 83,000 பேருக்கு பணி வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் வேலையின்மையைப் போக்க வேண்டுமெனில் பல லட்சக்கணக்கான பணி வாய்ப்புகள் ஒவ்வொரு மாதமும் உருவாக வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை.வீட்டுக் கடன் சிக்கலால் பாதிப்பிற்குள்ளான பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அமெரிக்க அரசு செய்த உதவிகள் பெரிய அளவிற்கு வளர்ச்சியை உறுதி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

பொருளாதாரப் பின்னடைவி்ற்குப் பிறகு இரண்டாவது ஆண்டின் இரண்டாவது அரையாண்டு துவங்கியுள்ள நிலையில், அமெரிக்க அரசு செய்த ஊக்கமளிப்பு நிதியுதவிகளின் தாக்கம் குறையத் துவங்கியுள்ளது அந்நாட்டில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/08/blog-post.html"

* பிரித்தானியர்கள் ஒவ்வொருவரும் £65,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் கடனாளிகள்

பிரித்தானியாவில் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் மொத்த கடன் சுமையை பிரித்துப் பார்க்கும் போது நாட்டில் இருக்கக்கூடிய ஆண், பெண், குழந்தைகள் என ஒவ்வொருவர் மீதும் 65,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் கடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான விபரங்களை தேசிய புள்ளி விபர அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. இதன் படி நாட்டிற்கு இருக்கும் மொத்த கடன் தொகை மட்டும் 4 ட்ரில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் என கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட ரீதியில் ஆய்வாளர்கள் கணித்து கூறிய தொகையை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். சராசரியாக பார்க்கப்போனால் ஒவ்வொரு குடும்பமும் இந்த பெருங்கடனை தீர்க்க ஐந்து வருடம் உழைக்க வேண்டியதிருக்கும்.

வரிப் பாக்கித் தொகைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக ஏற்படும் ஓய்வூதிய இழப்பீடு, அரசு ஓய்வூதிய திட்டங்கள் , தனியார் நிதி நிறுவனங்களில் தொழிலாளர்கள் பெற்றிருக்கும் கடன் தொகை, பொருளாதார சீரழிவால் முடங்கிப் போன வங்கிகளுக்காக செலவழிக்கப்பட்ட தொகைகள் இவை போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டே இந்த இறுதி புள்ளி விபரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய புள்ளி விபர அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசு சொத்துக்களின் மதிப்புக்கள், பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்புக்கள் அனைத்தும் முறைப்படி கணக்கிடப்பட்டு மொத்தமாக வந்த தொகையிலிருந்து கழிக்கப்பட்ட பின்னரே இந்த 4 ட்ரில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் பெறப்பட்டுள்ளது என்றும் புள்ளி விபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது சிட்டி திங் பேங்க் என்ற பொருளாதார ஆய்வு மையம் கடந்த வாரம் வெளியிட்ட 2 ட்ரில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் என்ற மதிப்பை விட இரட்டிப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/08/65000.html"

Monday 26 July 2010

* புதிய உத்தியை கையாண்டு வேலையை பெற்ற பிரித்தானிய இளைஞர்

எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு தனி தான். " தயவுசெய்து எனக்கு வேலை கொடுங்கள் " என்ற வாசகம் அடங்கிய பலகையுடன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொழிலதிபர்கள் அதிகம் பயணிக்கும் சாலையில் நின்ற வேலையில்லா இளைஞர் ஒருவர் நின்ற இடத்திலேயே பணி நியமனத்தை பெற்றுள்ளார்.

இரண்டு வருடங்களாக வேலையின்றி அரசு கொடுக்கும் நன்மைகளைப் பெற்று வாழ்ந்து வந்த பிரித்தானிய இளைஞர் 23 வயதான மார்க் வீல்டன். அரசு அளிக்கும் நன்மைகளிலேயே வாழத் தொடர விரும்பாத இவர் நேற்று புதிய உத்தி ஒன்றை கடைப்பிடித்தார். பலரும் பயணிக்கக் கூடிய சாலையில் " தயவுசெய்து எனக்கு வேலை கொடுங்கள் " என்ற வாசகம் அடங்கிய பலகையுடன் தன்னைத்தானே விளம்பரம் செய்து கொண்டார்.

மிக வேகமான பணி நேரத்தில் அந்த சாலையில் சென்ற அனைத்து வாகன ஓட்டிகளும் இதைக் கவனித்தனர். மழையையும் பொருட்படுத்தாது அந்த இளைஞர் நின்றது அனைவராலும் பார்க்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்த பின் அந்த வழியே வாகனத்தில் சென்ற மரவேலைகள் தொடர்பான நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் மார்க் வீல்டனிடம் நேர்காணல் நடத்தி 20 நிமிடங்களுக்குப் பின் அவருக்கு பணி நியமனமும் அளித்தார். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_26.html"

Friday 23 July 2010

* அரசாங்க செலவுக் குறைப்பால் பிரித்தானியாவில் குற்றச் செயல்கள் பெருக வாய்ப்பு

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் செலவீனக் குறைப்புக்களும்
,வேலையிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.

காவல்துறையில் அதிகப்படியான செலவீனக் குறைப்பு இங்கிலாந்திலும் வேல்ஸிலும் குற்றங்கள் அதிகம் பெருகவே வழி வகுக்கும் எனத் தலைமை காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசு துறைகளையும் போலவே காவல்துறைக்கு நிதி அளித்து வரும் உள்துறையிலும் 25 சதவீத செலவீனக் குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காவல் துறையில் அதிகாரிகளும், காவலர்களும் பணியாற்றும் விதத்தை மாற்றியமைப்பதன் மூலம் 12 சதவீத நிதியை சேமிக்க முடியும் என்றும் 25 சதவீத குறைப்பு என்பது மிகவும் அதிகப்படியானதால் காவலர்கள் திறமையுடன் பணியாற்ற முடியாத சூழல்கள் ஏற்படுவதோடு குற்றங்கள் பெருகும் என எச்சரித்துள்ளார் சர் டெனிஸ் ஒ கொன்னோர்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயம் என்பதால் அரசும் , உள்துறை அமைச்சகமும் இணைந்து காவல்துறையில் செலவை குறைப்பதை பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_23.html"

Thursday 22 July 2010

* அமெரிக்காவில் 7 மாதங்களில் 90 வங்கிகளுக்கு மூடு விழா

பொருளாதார மந்த நிலை காரணமாக, நிதிபிரச்னையை சமாளிக்க முடியாமல் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் 90 வங்கிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெரும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. அது, உலக அளவில் பொருளாதார மந்த நிலை யையும் ஏற்படுத்தியது.

நிதிப் பிரச்னையை சமாளிக்க முடியாமல், ஏராளாமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் நஷ் டத்தில் இயங்கி வருகின்றன; பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இதன் காரணமாக, அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்துள்ளது. அரசு ஊக்குவிப்பு சலுகைகளை அறிவித்தபோதும், நிதி ஆதாரமின்றி வங்கிகள் மூடப்படுகின்றன.கடந்த மாதம் மட்டும் அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் 9.5 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. நிதிப் பிரச்னை, வேலையிழப்பு போன்ற காரணங்களால் வங்கிகளும் தள்ளாடத் துவங்கிவிட்டன.

மிகப் பெரிய வங்கிகள் தவிர, நடுத்தர மற்றும் மூன்றாம் நிலை வங்கிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஹோம் நேஷனல் வங்கி, பே நேஷனல் வங்கி, ஐடியல் பெடரல் சேமிப்பு வங்கி போன்றவை கடந்த மாதத்தில் பெரும் நஷ்டத்தில் இயங்கின. கடந்த ஏழு மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் 90 வங்கிகள் மூடப் பட்டுள்ளன. சராசரியாக ஒரு மாதத்துக்கு 13 வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. பொருளாதார மந்த நிலை சீராகும் பட்சத்தில் தான், அமெரிக்காவில் வங்கிகளின் நடவடிக்கை இயல்பு நிலைக்கு திரும்பும். வங்கிகளின் நடைமுறைகளில் ஏற்பட்ட பாதிப்பு இந்த மூடலுக்கு காரணம் என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/7-90.html"

Tuesday 20 July 2010

* பிரித்தானியாவில் பொதுத்துறையில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களின் ஊதிய உயர்வு 2 வருடங்களுக்கு நிறுத்தி வைப்பு

பிரித்தானியாவில் வருடத்திற்கு 21,000 பவுண்டுகளுக்கும் குறைவான ஊதியம் பெற்றுகொண்டு பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களின் சம்பள உயர்வு இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

21,000 பவுண்டுகளுக்கும் குறைவான ஊதியம் பெறுபவர்களுக்கு அவர்களை பாதுகாக்கும் விதமாக 250 பவுண்டுகள் சம்பள உயர்வாக அளிக்கப்படும் என அமைச்சர்கள் முன்பு சுட்டிக் காட்டியிருந்தனர். இது போன்று சம்பளம் நிறுத்தி வைக்கப்படுவதன் விளைவாக பலர் தங்கள் வேலையை இழப்பது தடுக்கப்படுமென அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

பொதுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பொருளாதார சூழல்களுக்கு ஏற்ப தான் ஊதியம் அளிக்கப்படுகிறதே தவிர அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவில்லை என சில தொழிலாளர் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

குறைவான ஊதியம் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு இந்த இரண்டு வருடங்களில் குழந்தைகளுக்கான தொகை அதிகம் கொடுப்பதன் மூலமாக உதவப்படும் என்றும் அரசுக் கருவூல தலைமை செயலர் டன்னி அலெக்சாண்டர் மேலும் கூறியுள்ளார்.

லங்கா சிறி இணையத்தளத்தில் (உலகச்செய்திகள்):-பிரித்தானியாவில் பொதுத்துறையில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களின் ஊதியம் 2 வருடங்களுக்கு நிறுத்தி வைப்பு submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/2.html"

* பிரித்தானியாவில் வங்கிகளாக செயல்பட உள்ள தபாலகங்கள்

பிரித்தானியாவின் இயந்திரமயமான வாழ்க்கைக்கு இடையே வங்கிகளுக்கு சென்றால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தபால் நிலையங்களும் இனிமேல் சிறிய வங்கிகளாக செயல்படும் என்ற அரசின் அறிவிப்பு மக்களுக்கு சிறிது நிம்மதியை கொடுத்துள்ளது.

பிரித்தானியாவில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் எவரும் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் தங்கள் அடிப்படை கொடுக்கல் வாங்கல் தேவைகளுக்கு தபால் நிலையங்களையும் பயன்படுத்தலாம் என பிரித்தானிய அரசு இன்று அறிவித்துள்ளது.வங்கியிலிருந்து பணம் எடுப்பது, பாக்கித்தொகையை சரிபார்ப்பது, காசோலைகளுக்கு பணம் செலுத்துவது உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் இதில் அடங்கும். நடப்பு கணக்கு வைத்திருக்கும் அனைவருமே நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களையும் பயன்படுத்தலாம் என தபால் விவகார அமைச்சர் எட்வர்ட் டவே தெரிவித்தார்.

அதிகப்படியான மக்கள் தபால் நிலையங்களை பயன்படுத்தும் போது தபால் நிலையங்களின் சேவைகளும் அதிகரிப்பதுடன் மக்களின் நேர விரயமும் இதனால் குறையும் என நம்புவதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார். இந்த முறையை நாட்டில் உள்ள பிரபல வங்கிகள் வரவேற்றுள்ளன. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_20.html"

Monday 19 July 2010

* ஊழியர்களை குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு

பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோ சாப்டிலும், ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பல முன்னணி நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையை கையாளத் துவங்கியுள்ளன.பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க துவங்கியுள்ளன.

சிறிய அளவில் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 5,000 பேரை வேலை நீ்க்கம் செய்தது. இந் நிலையி்ல் இந்த வாரத்தில் மேலும் பலரை நீக்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.எத்தனை பேர் நீக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், அது மிகச் சிறிய அளவிலேயே இருக்கும் என்று அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாப்ட் கிளைகள் முழுவதிலும் இந்த பணி நீக்கம் அமலாக்கப்படும் என்று தெரிகிறது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_19.html"

Friday 16 July 2010

* அமெரிக்காவில் வீடு விற்பனை கடும் சரிவு

இந்த ஆண்டு மே மாதத்தில் அமெரிக்காவில் வீடுகள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீடுகள், ரியல் எஸ்டேட் விற்பனை மோசமடைந்துள்ளது.ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 33 சதவீதம் (கிட்டத்தட்ட 4.46 லட்சம் வீடுகள்) சரிவாகும்.

மே மாதத்தில் 3 லட்சம் வீடுகளே விற்பனையாகியுள்ளன.சென்ற ஆண்டு மே மாதத்தில் 3.69 லட்சம் வீடுகள் விற்பனையாகின. அதனுடன் ஒப்பிடுகையில் சரிவு 19 சதவீதம் ஆகும்.

வீடுகள் விற்பனையில் ஏற்படும் சரிவு பொருளாதார தேக்க நிலையை குறிப்பிடும் அம்சம் என்பதால் அமெரிக்கா இன்னும் பொருளாதார மந்த நிலையிலிருந்து முழு அளவில் மீளவில்லை என்பது தெளிவாகிறது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_16.html"

Thursday 8 July 2010

* நிதி பற்றாக்குறையை குறைக்க G 20 நாடுகள் கூட்டத்தில் முடிவு

உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவில் இருந்து நிறுவனங்களைக் காப்பாற்ற அளிக்கப்பட்ட நிதிகளைத் திரும்பப் பெற்று 3 ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறையை பாதியாகக் குறைக்க G 20 நாடுகள் மாநாடு ஒப்புக் கொண்டுள்ளது.

பொருளாதாரப் பின்னடைவால் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொண்ட நிறுவனங்களைக் காப்பாற்ற அளிக்கப்பட்ட நிதியை குறுகிய காலத்தில் திரும்பப்பெற்றால் அது மீண்டும் சிக்கலை உருவாக்கிவிடும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையிலும், நிதி நிலையை மேம்படுத்த பற்றாக்குறையை பாதியாகக் குறைக்க வளர்ந்த நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பற்றாக்குறையை பாதியாகக் குறைப்பது தொடர்பான இந்த உறுதி மொழி ஜி 20 நாடுகள் மாநாட்டின் இறுதி அறிக்கையில் அளிக்கப்படும். மூன்றாண்டுகளில் நிதிப் பற்றாக்குறைத்து அதன் மூலம் கடன் சிக்கலால் ஏற்பட்ட நிதி நிலை சமமின்மையை சீர்படுத்துவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

லங்கா சிறி இணையத்தளத்தில் (உலகச்செய்திகள்):- நிதி பற்றாக்குறையை குறைக்க G 20 நாடுகள் கூட்டத்தில் முடிவு submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/g-20.html"

Wednesday 7 July 2010

* மிலங்க விலைச்சுட்டியில் பட்டியலிடப்படவுள்ள 25 கம்பனிகள்-(01 July,2010 - 31 Dec 30, 2010 )



01 July,2010 - 31 Dec 30, 2010 வரை மிலங்க விலைச்சுட்டியில் (Milanka Price Index -MPI) பட்டியலிடப்படவுள்ள 25 கம்பனிகள்.

* Banks, Finance and Insurance


- Commercial Bank of Ceylon

- DFCC Bank

- Hatton National Bank

- Janashakthi Insurance

- Merchant Bank of Srilanka

- National Development Bank

- Nations Trust Bank

- Pan Asia Banking Corporation

- Sampath Bank

- Seylan Bank


* Beverages, Food and Tobacco

- Distilleries Company of Sri Lanka

* Diversified

- John Keells Holdings

- Richard Pieris

* Manufacturing

- ACL Cables

- Chevron Lubricants Lanka

* Telecommunications

- Dialog Telekom

* Hotels and Travels

- Asian Hotels and Properties

- John Keells Hotels

* Health Care

- Nawaloka Hospitals


* Investment Trusts

- Environmental Resources Investments

* Land and Property

- Overseas Reality (Ceylon)

* Power and Energy

- Lanka IOC

* Chemical and Pharmaceuticals

- Chemical Industries (Colombo)

* Construction and Engineering

- Colombo Dockyard

* Trading

- Brown and Company submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/25-01-july2010-31-dec-30-2010.html"

Monday 5 July 2010

* ஆசிய சந்தையில் மசகுஎண்ணெயின் விலை குறைந்தது

அமெரிக்க பங்குச் சந்தை சரிவைத் தொடர்ந்து மசகுஎண்ணெயின் விலை ஆசிய சந்தையில் மேலும் சரிந்துள்ளது.ஆசிய சந்தையில் மசகுஎண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 75 டொலருக்கும் கீழ் குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் மசகுஎண்ணெய்க்கான தேவையில் ஏற்பட்ட பெரும் சரிவுதான் இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் டோக்கியோ, நியூயார்க் பங்குச் சந்தைகளில் சரிவு காணப்படுவதாலும் சர்வதேச சந்தையில் மசகுஎண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த நிலை நீண்ட நாள் நீடிக்காது என்றும், இந்தியா, சீனா போன்ற நாடுகளின் மசகுஎண்ணெய் தேவை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்ப்பதால், நம்பிக்கையுடன் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

லங்கா சிறி இணையத்தளத்தில் (உலகச்செய்திகள்):- ஆசிய சந்தையில் மசகுஎண்ணெயின் விலை குறைந்தது submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post.html"

Monday 28 June 2010

* பிரிட்டனில் வேலையில்லா நிலை 10 சதவிகிதத்திற்கு உயரும் அபாயம்

கன்சர்வேடிவ்-லிபரல் கூட்டணி அரசாங்கம் பொதுச் செலவை குறைப்பதற்கான அதன் திட்டங்களை அறிவித்த சில நாட்களுக்குள்ளேயே,பிரிட்டனில் வேலையில்லா நிலையை 10 சதவிகிதத்திற்கு மேல், அதாவது 3 மில்லியன் உயரக் கூடும் என்ற மதிப்பீட்டைக் கொடுத்து ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது.

The Chartered Institute of Personnel and Development (CIPD) வரவிருக்கும் குறைப்புகளால் 725,000 க்கும மேலான வேலைகள் ஆபத்திற்கு உட்படக்கூடும், பிரிட்டன் முழுவதும் பொதுத் துறையில் 12 சதவிகிதம் அல்லது 6 மில்லியன் தொழிலாளர்கள் இதில் அடங்குவார்கள் என்று கணித்துள்ளது. தற்பொழுது 2.5 மில்லியன் என்று இருக்கும் வேலையின்மை 2012 க்குள் 3 மில்லியனை அடையும், அந்த அளவிலேயே 2015 வரை இருக்கும் என்றும் கூறியுள்ளது.

CPID ஆனது வரிகளை உயர்த்துவது என்பதற்குப் பதிலாக, செலவு குறைப்பதானது வேலை நெருக்கடியை இன்னும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. நிதி மந்திரி ஜோர்ஜ் ஓஸ்போர்ன் நிதியப் பற்றாக்குறையைக் குறைக்கும் விதத்தில் 'சேமிப்புக்களில்' கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தை செலவுகளை குறைப்பதன் மூலம் கொண்டுவர விரும்புகிறார். மிகுதி 20 சதவிகிதம் மட்டுமே வரி உயர்வின் மூலம் அடையப்படும்.

மொத்தத்தில் CIPD, மேலாளர் மற்றும் நிர்வாகப் பகுதியில் தேசிய சுகாதாரப் பணி (NHS)இல் 175,000 பணிகளும், ஆட்சித்துறை, கல்வித்துறைகளில் 200,000 பணிகளும் உள்ளூராட்சிப் பதவிகளில் 350,000 இழக்கப்படும் என்று எதிர்பார்க்கிறது. தேர்தலுக்கு முன்பு, கன்சர்வேடிவ்கள் அதிக செலவு கொடுக்கும் தகவல் தொழில்நுட்பத் திட்டங்களில் குறைப்புக்கள், ஆலோசகர்களின் குறைப்புக்கள் ஆகியவற்றின் மூலமும், முன்னணிப் பணிகளைப் பாதுகாப்பதன் மூலமும் சேமிப்புக்கள் அடையப்படலாம் என்று கூறியிருந்தனர். ஆனால் பதவிக்கு வந்த உடனேயே, பிரதம மந்திரி டேவிட் கெமரோன் பொதுச் செலவுகளில் இருந்து 6.25 பில்லியன் பவுண்டுகள் நிதியைக் குறைத்தார்.


இத்தகைய அளவுகளில் வரவு-செலவுத் திட்டங்களைக் குறைப்பது நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு, பொதுத்துறையில் இருந்து வெளியே இருப்பவர்களுக்கும் பேரழிவு விளைவுகளைக் கொடுக்கும். பல பொதுத்துறைப் பணிகளின் மூலம் ஒப்பந்த வேலையைக் கொண்டவர்கள் 1.7 மில்லியன் தொழிலாளர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இவர்கள் குப்பை சேகரித்தல், தூய்மைப்படுத்துதல், ஓய்வு வசதிகளை நிர்வகிப்பவர்கள், பள்ளிகளில் உணவு அளிப்பவர்கள் என்று உள்ளனர். போக்குவரத்துத் துறையில், குறிப்பாக தேசிய ரயில் பணியிலும் பல உள்ளூர் பஸ் சேவைகளும் அரசாங்கத்திடம் இருந்து வரும் அதிக உதவித் தொகைகளைப் பெரிதும் நம்பியுள்ளன.


அரசாங்க ஆதரவு அகற்றப்படுவது என்றால் இத்தொழிலாளர்களில் பலர் ஒப்பந்தங்கள் குறைக்கப்படும்போது உதவி நிதிகள் கொடுக்கப்படுவது இல்லை. ஏற்கனவே இந்த ஆண்டு 1.7 பில்லியன் பவுண்டுகளைக் குறைப்பதில் அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது. அதற்காக அது அளிப்பாளர்களிடமும் மற்ற அமைப்புக்களுடனும் ஒப்பந்தங்கள் பற்றிய மறு பேச்சு, வரவு-செலவுத் திட்ட வார்த்தைகள் நடத்த உள்ளது.இத்தகைய குறைப்புகளால் நேரடி விளைவு தனியார் துறையிலும் உணரப்படும். அங்கு பல நிறுவனங்களும் பொது அதிகாரங்களுடன் வணிகத் தொடர்பை நம்பியுள்ளன. இதன் பொருள் இன்னும் உயர்ந்த வேலையில்லா நிலை என்ற அச்சுறுத்தல் ஆகும்.

வேலையில் இருந்து நீங்கிவிட்ட தொழிலாளர்கள் மிகக் குறைந்த பொதுநல முறையைத்தான் எதிர்கொள்ளுவர். ஆண்டு ஒன்றுக்கு 4 பில்லியன் பவுண்டை அரசாங்கம் பொதுநலத் தரங்களை முடக்குவதன்மூலம் சேமிக்க முயல்கிறது. இதைத்தவிர இன்னும் அதிகமும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் செலவுப் பரிசீலனைக்குள் நலன்கள், வரிகளுக்கு சலுகைகள் ஆகியவற்றையும் உள்ளடக்க அது முடிவெடுத்துள்ளது. இதன் பொருள் ஏற்கனவே மிகக் குறைந்த சமூக ஆதரவுத் தளம் கொண்டுள்ள மிக நலிந்தோர் சமுதாயத்தில் இன்னும் குறைவான நலன்களைத்தான் பெறுவர் என்பதாகும்.

குழந்தைகள் நலன்கள், இயலாதவர்களுக்கான நலன்கள், வேலையின்றி இருப்பவர்கள் ஆகியோரைப் பற்றிக் குறிப்பாக கவனம் செலுத்தப்படுகிறது. அரசாங்கம் உதவி நலன்களைப் பெறுவதற்கான தகுதிகளைக் குறைக்க வழிவகைகளை அரசாங்கம் முடிவெடுத்தாலும், அப்படியே நலன்களின் தரங்களைக் குறைத்துவிடவும் அது முடிவெடுக்கலாம்.

பொதுப் பணிகள், பொதுநலச் செலவுகள் ஆகியவற்றில் குறைப்புக்களைக் கொண்டு வரும் உந்துதலில், அரசாங்கம் பிரிட்டிஷ் தொழில்துறை கூட்டமைப்பு (CBI) உடைய ஆதரவைப் பெற்றுள்ளது. CBI ஆனது நிதி மந்திரி இன்னும் கடுமையான குறைப்புக்களை, இப்பொழுது அறிவித்தவற்றைவிடத் தீவிரமாக அறிவிக்க வேண்டும், அதுதான் வரி உயர்வைத் தவிர்க்கும் என்று கூறியுள்ளது.

CBI வியாழனன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "வணிகக் குழு பற்றாக்கறையைச் சமாளிப்பதற்கு இதுவரை அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கிறது. வரவு-செலவுத் திட்டத்தைப் பயன்படுத்தி இங்கிலாந்தின் நிதிய நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் விதத்தில் செயல்பட்டு, இன்னும் விரைவான விதத்தில் கட்டுமானப் பற்றாக்குறையில் குறைப்பு, இன்னும் கடுமையான பொருளாதார முன்கருத்துக்களை ஏற்றல், செலவுத் திட்டங்களை இன்னும் விரிவாக்குதல் இதற்குத் தேவை" என்று வாதிட்டுள்ளது.

OBR எனப்படும் வரவு-செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகம், பிரிட்டனின் பொருளாதாரம் பற்றிச் "சுதந்திர" கணிப்புக்களை அளித்தல், செலவு முடிவுகள் பற்றி ஆலோசனை கூறல் ஆகியவற்றிற்காக புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது, கடன் வாங்குதல், வளர்ச்சிக் கணிப்புக்கள் பற்றித் திங்களன்று அறிவிப்பை வெளியிடும். இது பிரிட்டனின் பொருளாதார வாய்ப்புக்கள் 2011, அதற்கு அப்பால் கீழிறக்கும். அதைத்தவிர தற்பொழுதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவிகித வளர்ச்சி என்பதும் 2 ஐ ஒட்டிக்குறைக்கப்படும் என்ற ஊகம் வந்துள்ளது. இதையொட்டி ஒப்புமையில் பிரிட்டனின் கடன் அளவு பெருகும்.

ஐரோப்பா முழுவதும் இதே போன்ற திட்டங்கள் வந்துள்ளதைத் தொடர்ந்து, அதுவும் இந்த வாரம் 80 பில்லியன் யூரோச் செலவுகள் ஜேர்மனியில் குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, காமரோன் அரசாங்கம் தொழிலாளர் வர்க்கம் அதன் பொறுப்பைக் கொண்டிராத பொருளாதார நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/10.html"

Wednesday 16 June 2010

* உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிமப் புதையல்

உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்கா வின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டொலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் வாசிக்க:- உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிமப் புதையல் submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/blog-post_16.html"

Tuesday 15 June 2010

* புதிய ஐபோன்-4G ஜூன் 24 முதல் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தனது வெற்றிகரமான ஐபோனின் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் 40 சதவீத வருவாய் ஐபோன் விற்பனை மூலம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "ஐபோன்"கள் 2007ல் சந்தைக்கு வந்தன. இதுவரை 5 கோடி போன்கள் விற்பனையாகியுள்ள நிலையில், தற்போது மேலும் பல புதிய அம்சங்களுடன் அதன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" மாடல் சந்தைக்கு வந்துள்ளது.

ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சகல வசதிகளையும் கொண்டதாகத் திகழ்கிறது. OS 4 எனும் இயங்குதளத்தில் அதிவேகமாக இயங்கும் திறன் கொண்ட இந்த புதிய செல்போனில், Video Calling, Retina high-resolution display, 5 மெகா பிக்ஸல் கேமரா, லெட் ஃப்ளாஷ், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு வசதி, வை-ஃபி என ஏராளமான வசதிகளை உள்ளடக்கியது இந்த புதிய செல்போன்.

முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையதளத்தை பயன்படுத்தவும் முடியும்.

ஜூன் 24 முதல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனை செய்ய உள்ளது.

ஜூன் 15 முதல் இந்த ஐபோன்-4 க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே ஐபோன் வைத்திருப்பவர்கள், புதிய சாஃப்ட்வேர்களை ஐ ட்யூன் தளத்தில் வரும் ஜூன் 21 முதல் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.

சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா உள்பட 21 நாடுகளில் ஜூலையில் விற்பனைக்கு வருகிறது ஐபோன். இந்தியா உள்ளிட்ட 88 நாடுகளில் வரும் செப்டம்பரில்தான் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/4g-24.html"

Monday 14 June 2010

* அம்பானி சகோதரர்கள் தொலைத் தொடர்புத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை செல்கின்றனர்

இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர்களான அம்பானி சகோதரர்கள் இலங்கை செல்ல உள்ளனர். இலங்கையின் தொலைத் தொடர்புத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்த பேச்சுக்களை நடத்தவே அவர்கள் இலங்கைக்கு வர உள்ளதாக இலங்கையின் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஆசியப் பிராந்தியத்தில் தொலைத் தொடர்புத் துறையில் ஜாம்பாவான்களாகத் திகழும் அம்பானி சகோதரர்களின் வருகை இலங்கையின் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த அமுனுகம இது இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் ஏனைய முதலீட்டாளர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் ஒரு கோடியே நாற்பது லட்சம் பேர் தொலைபேசிகளைப் பாவிப்பதாகத் தெரிவித்த அமுனுகம இது தெற்காசியாவிலேயே மிகவும் அதிகமான விகிதாசாரம் எனவும் குறிப்பிட்டார்.

தகவல்:-The Official Government News Portal of Sri Lanka submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/blog-post_14.html"

Tuesday 8 June 2010

* 2 மாதங்களிலே 2 மில்லியன் ஐபேட் விற்பனை

ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கையடக்க கம்ப்யூட்டரான ஐபேட் விற்பனைக்கு வந்து 2 மாதங்களிலே 2 மில்லியன் ஐபேட்களை விற்று சாதனை படைத்துள்ளது.

இந்த வேகத்தில் ஐபேட்கள் விற்பனை தொடர்ந்தால், விற்பனை அளவு எங்கோ போய்விடும் என்கிறார்கள் எலெக்ட்ரானிக் சந்தை வல்லுநர்கள். ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் தயாரித்த ஐபாட்(i Pod),ஐபோன் (i Phone) முதல் 2 மாதங்களில் முறையே 125,000,820,000 விற்பனை ஆனது என்கிறார் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 8.13 மில்லியன் ஐபேட்கள் உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபேட்களுக்கு கிடைத்துள்ள பிரவேற்பைத் தொடர்ந்து டெல், சோனி, ஹெச்பி போன்ற நிறுவனங்களும் ஐபேட் போன்ற டேப்லட் பிசிக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/2-2.html"

Friday 4 June 2010

* மலேசிய TOP பணக்காரர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்!


பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இரு தமிழர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

மலேசியாவில் 40 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் 2 தமிழர்களும் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் அனந்த கிருஷ்ணன். இவரது சொத்து மதிப்பு 7.4 பில்லியன் டொலர் . 72 வயதான இவர் மலேசியாவில் செல்போன் இணைப்பு வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். உலகத்திலேயே உயரமான கட்டடங்களில் ஒன்றான பெட்ரோனாஸ் டவர் உரிமையாளர்களில் இவரும் ஒருவர்.

இதுதவிர இவருக்குச் சொந்தமாக சாட்டிலைட் டி.வி.சேனல்களும் உள்ளன.

கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்ற இன்னொரு தமிழர் ஏ.கே.நாதன். 54 வயதான இவர் உலோக உற்பத்தி மற்றும் கட்டுமானத் தொழிலில் முன்னணியில் உள்ளார். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/2.html"

Thursday 3 June 2010

* இலங்கையின் இறக்குமதி வரியின் விபரங்கள்

இலங்கையில் வாகனங் களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தாலும், மின்சார உபகரணங்களின் மேலதிக வரி 15 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.


(படத்தை பெரிதாக பார்க்க அதன் மேல் அழுத்தவும்)
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/blog-post_03.html"

Wednesday 2 June 2010

* இலங்கையில் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது

இலங்கையில் வாகனங் களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தாலும், மின்சார உபகரணங்களின் மேலதிக வரி 15 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு நேற்று முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. வரிக் கட்டமைப்பை இலகுபடுத்தவும் பரந்துபட்டதுமாக்கும் நடவடிக்கையாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுங்க வரியின் மீதான 15 சதவீத மேலதிக வரியை நீக்கியுள்ளார்.

அத்துடன் பெரும்பாலான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர வகைகள் மீதான 2.5 சதவீத இறக்குமதி வரியும் நீக்கப்பட்டுள்ளது. அதேவேளை சுங்கவரி, 0, 6, 15, 30 என்ற நான்கு கட்ட வரிக் கட்டமைப்பில் இலகுபடுத்தப்பட்டுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் அறிக்கையொன்று கூறுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதனால் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் ஒரு நடவடிக்கையாக இது அமைவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் வாகனங்கள் மீதான இறக்குமதி வரி 50 சத வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச பிரபல்யம் பெற்ற விற்பனை பெயர்களை தாங்கியுள்ள பொருட்களுக்கு இலங்கையை கவர்ச்சிகரமான விற்பனை மையமாக உருவாக்கும் நோக்கில் தொலைபேசிகள், கைக்கடிகாரங்கள், கமராக்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களின் ஒட்டுமொத்த வரி 10 சத வீதத்துக்கும் குறைவாக கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகைய பொருட்களுக்கு துறைமுக வரி மற்றும் நாட்டை நிர்மாணிக்கும் வரி ஆகியவை மட்டுமே விதிக்கப்படும். பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் மேலதிக வரி ஆகியவை இந்த பொருட் களுக்கு விதிக்கப்படமாட்டா.

உள்ளூர் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் திரிபு வரி குறைக்கப்பட்டுள்ளது. முறையற்ற இறக்குமதி போட்டித் தன்மையில் இருந்து பாதுகாப்பு தேவைகளை உள்ளூர் நடவடிக்கைகளை குறிப்பிட்ட இறக்குமதி பாதித்தால் மட்டுமே இந்த வரி தொடர்ந்து செலுத்த ப்பட வேண்டியிருக்கும். மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர வகைகள் இறக்குமதியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இவற்றின் மீதான வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொருட் குவிப்புக்கு எதிரான சட்டம், லேபல் இடுதல் தொடர்பான சட்டம், தரமான பொருட்களை இறக்குமதி செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் சூழல் மாசடைவதை குறைப்பதற்கும் உள் ளூரில் மேற்கொள்ளப்படும் கைத்தொழில் களை பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசாங்கமானது இலகுவான வரிக் கட்டமைப்பை நோக்கிச் செல்லும் நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கு இறக்குமதி நிலையில் விசேட பொருட்கள் வரிக்கு மட்டுமே உரித்தாகும். இது சிறிய வர்த்தகர்களுக்கான நிர்வாக நடைமுறைகளை பெரிதும் குறைக்கும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/50.html"

Tuesday 1 June 2010

* தமன்னாவுடன் போட்டி போடும் த்ரிஷா,ஸ்ரேயா,ரீமா சென்,அஞ்சலி யாருக்கு வெற்றி??

திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் - 2010




விபரங்களுக்கு


வாக்களிக்க submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/blog-post.html"

Friday 28 May 2010

* இலண்டனில் இன்று ஐபேட் (iPad) விற்பனை கோலாகலமாக ஆரம்பம்

இலண்டனிலும் வேறு பல நகரங்களிலும் ஐபேட்(iPad) வாங்குவதற்காக பல மணி நேரம் முன்னதாகவே வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். இலண்டனில் இன்று காலை 8 மணிக்குத் திறந்த ஆப்பிள் கடைக்கு நேற்று நண்பகலில் இருந்தே மக்கள் வரிசையாகக் காத்திருக்கக்த் தொடங்கிவிட்டனர்.

பிரபல நகச்சுவை நடிகர் Stephen Fry முன்கூட்டியே பதிவு செய்து ஒரு ஐபேட் வாங்கினார். ஏற்கனவே அமெரிக்காவில் ஒன்றை அவர் வாங்கியிருந்தார். இப்போது மீண்டும் வேறு ஒரு மாதிரி ஐபேட் வாங்கியுள்ளார். இதை என்ன செய்யப் போகிறீர்கள் என்று நிரூபர்கள் கேட்டதிற்கு நான் இதைக் கொண்டு போய் தடவப் போகிறேன் என்றார். ஆம் தொடு திரைத் தொழில் நுட்பம் தடவுவதன் மூலம் இயங்கும். அதை அவர் அப்படி நகைச் சுவையாகச் சொன்னார்.


ஐ-பொட், ஐ-போன், ஐபேட் ஆகியவற்றை வெற்றீகரமாகச் சந்தைப் படுத்தியதால் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பெரும் பெறுமதி மதிப்புயர்வைப் பெற்றுள்ளன. கடந்த் 10 ஆண்டுகளில் அவற்றின் மதிப்பு 10 மடங்கு உயர்ந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளின் மொத்த மதிப்பு இப்போது $222bn (£152.5bn) ஆக உயர்ந்துள்ளது. இதனால்தொழில்நுட்ப நிறுவனங்களின் பெறுமதி வரிசையில் இதுவரை முதலாம் இடத்தில் இருந்த மைக்ரோசொfர் இப்போது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப் பட்டு ஆப்பிள் முதலாம் இடத்தை அடைந்துள்ளது. மைக்ரோசொfரின் சந்தை மதிப்பு $219bn (£150.5 bn). submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/ipad.html"

* துபாய் வேர்ல்டை கடன் நெருக்கடியிலிருந்து காப்பாற்ற புதிய உடன்பாடு

கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துபாய் வேர்ல்டு நிறுவனத்துக்கு கைகொடுக்கும் விதத்தில் ஒரு புதிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி இந்த நிறுவனத்தின் மொத்தக் கடன்தொகையான 23.5 பில்லியனில் 14.4 பில்லியன் டாலரை இரண்டு தவணைகளாகப் பெற்றுக்கொள்ள கடன்கொடுத்த நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

5 ஆண்டுகள் மற்றும் 8 ஆண்டு தவணைகளில் இந்த கடன் தொகை செலுத்தப்படும்.

மீதியுள்ள 8.9 பில்லியன் டாலர் கடனை, துபாய் அரசே செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம், உடனடியாக இந்த பெரும் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திலிருந்து தப்பித்துள்ளது துபாய் வேர்ல்டு.

துபாய் வேர்ல்டு நிறுவனத்தின் கடன் நெருக்கடியால் உலக சந்தையே பெரும் சரிவுக்குள்ளானது நினைவிருக்கலாம். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/blog-post_28.html"

Thursday 27 May 2010

* நல்லா ரசிச்சிட்டு ஓட்டு போடுங்கையா!

நண்பர் சதீஸ் சென்ற வருடம் பதிவுலகம் திரையுலக கலைஞர்களுக்கு விருது வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு அந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே போல இவ்வருடமும் திரையுலகுக்கு விருது வழங்கும் விழாவை சிறப்பாக நடாத்த எண்ணி இது பற்றி ஒரு பதிவு இட்டுள்ளார்.

அப் பதிவு இதோ


வணக்கம் மக்கள்ஸ்,

மீண்டும் ஒரு தடவை ஒரு பிரமாண்டமான அறிவிப்புடன் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. கடந்த வருடம் என்(SSHATHIESH in பார்வை) வலைப்பூவில் தனியாக சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக உங்கள் வாக்குகள் மூலம் அபிமானம் பெற்றவர்களை தெரிவு செய்து மகிழ்ந்தேன். நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து தங்கள் அபிமானிகளை தெரிவு செய்தனர். அதன் பின் அண்மையில் தான் அதை தமிலிஷில் பிரசுரிக்க உங்கள் அமோக ஆதரவுடன் பிரபல இடுகையாகியது. விளையாட்டாக நான் ஆரம்பித்த ஒரு விடயம் உங்கள் பலரின் அபிமானம் பெற இம்முறை அதை கொஞ்சம் விரிவாக்கி சிலர் சேர்ந்து செய்யலாமா என்ற எண்ணம் தோன்றவே சில பதிவர்களுடன் இதை கலந்துரையாடினேன்.

கலந்துரையாடலில் கிடைத்த ஊக்கம் தொடர்ந்து இந்த முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொண்டுள்ள பதிவர் கான்கொன், எரியாத சுவடுகள் பவன், என் உளறல்கள் வந்தியத்தேவன் மாமா, ஐந்தறைப்பெட்டி சுபாங்கன், நா எழுதும் கெளவ்பாய் மது அண்ணா ஆகியோரின் ஒத்துழைப்புடனும் இன்னும் சில பதிவுலக நண்பர்களுடனும் இணைந்து இந்த முயற்சியை ஆரம்பிக்கின்றோம். வழக்கமாக நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு தரும் நீங்கள் நிச்சயம் இந்த முயற்சிக்கும் கை கொடுப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

இங்கே எங்கள் குழுவில் சேராது வெளியில் இருந்து ஆதரவு தர சில பதிவர்கள் தயாராக இருக்கும் நிலையில் ஒரு சில திரட்டிகளும் இதற்கு நல்ல சமிக்கை காட்டியுள்ளன. எனவே திரட்டிகளின் பங்கும் இங்கே மிகப்பெரிய பங்காக இருக்கும் என நம்புகின்றோம். எனவே அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றியை தெரிவிப்பதோடு சக பதிவர்கள், வாசகர்கள் எல்லோரிடமும் இதற்கு ஆதரவு கேட்கின்றோம். பதிவுலகம் இன்று மிகப்பெரிய சக்தியாக மாறி உள்ளது. பல நிறுவனங்கள்,அமைப்புக்கள் திரை உலகிற்கு விருது வழங்கி வரும் நிலையில் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பதிவுலகில் வரும் காலத்தில் பிரமாண்ட விழாக்களுடன் இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. எனவே பூனைக்கு மணியைக் கட்டுவது யார்? நாங்கள் கட்டி இருக்கின்றோம்.

இந்த விருதுகளை நாம் வழங்க யார் என கேட்கலாம். சாதாரண ரசிகர்கள் தான் நாங்கள். ஆனால் பதிவர்கள் என்னும் மிகப்பெரிய சக்திகள். இது ஒரு குறிபிட்ட பிரதேசத்துக்கோ அல்லது குறிப்பிட்ட நாட்டுக்கோ அல்லது கண்டத்துக்கோ உரியதல்ல. நம் பதிவர்கள் எல்லோரும் இதன் பங்காளிகள். எனவே எங்களுக்குள் போட்டியாளர்களுக்காக தெரிவுகளுக்கான விவாதம்(நலன் விரும்பிகளும் பங்கு பெறுகின்றனர்) நடை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நீங்களும் எங்களுடன் தாராளமாக கை கோர்க்கலாம். இடம் காலம் மறந்து பதிவர்கள் என்ற ஒரு குடையின் கீழ ஒன்றாவோம். சாதிப்போம்.

இவ்வகையான புதிய முயற்சிகளுக்கு பங்குச்சந்தை - ஸ்ரீலங்காவின் ஆதரவு என்றும் உண்டு.
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/blog-post_27.html"

* அமெரிக்காவில் 5 மாதங்களில் 73 வங்கிகள் மூடப்பட்டுள்ளன

அமெரிக்காவில் பொருளாதார சீர்குலைவு இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. கடந்த ஐந்து மாதங்களில் 73 வங்கிகள் அங்கு மூடப்பட்டுள்ளன. மேலும் பல வங்கிகள் வரும் நாட்களில் திவாலாகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மாதத்திற்கு சராசரியாக 14 அமெரிக்க வங்கிகள் திவாலாகி வருகின்றனவாம். உலக அளவில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டதிலிருந்து இதுவரை அமெரிக்காவில் 775 வங்கிகள் திவாலாகி மூடப்பட்டுள்ளனவாம்.

இந்த நிலை மேலும் தொடரும், மேலும் பல வங்கிகள் சீர்குலையும் என அமெரிக்க பெடர் டெபாசிட் இன்சூரன்ஸ் கழகம் எச்சரித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில் 73 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. அனைத்துமே நடுத்தர மற்றும் சிறிய வங்கிகள்.

மே மாதம் மட்டும் 9 வங்கிகளை அமெரிக்காவில் மூடியுள்ளனர். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/5-73.html"

Monday 24 May 2010

*இந்தியாவுக்கு தனது முக்கியமான செயல்பாடுகளை பிரிட்டனிலிருந்து மாற்றியது Barclays

பிரிட்டனில் புதிய கன்சர்வேடிவ் அரசு பதவியேற்ற கையோடு, வங்கித் துறை கட்டுப்பாடுகள் மற்றும் வரி விதிப்பை தீவிரமாக்கியுள்ளது. இதனால் பிரிட்டனின் பிரபலமான பார்க்லேஸ்( Barclays) வங்கி, தனது செயல்பாடுகளை இந்தியாவுக்கு மாற்றிக் கொள்ளத் துவங்கியுள்ளது.

முதல் கட்டமாக, பிரிட்டனின் நார்த்தாம்ப்டன் நகர அலுவலகத்திலிருந்து 140 முக்கியப் பணிகளை இந்தியாவுக்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது பார்க்லேஸ்.

இதுகுறித்து பார்க்லேஸ் வங்கியின் CEO ஜான் வார்லி கூறுகையில், "பிரிட்டனில், குறிப்பாக லண்டனில் அதிகரிக்கும் வரி விதிப்புகள் மற்றும் நெருக்கடிகள் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.இத்தகைய வரிவிதிப்புகள் லண்டனை கடும் பாதிப்புக்குள்ளாக்கும்.

இந்தியா எங்களுக்கு வசதியான நாடாக உள்ளது.ஏற்கெனவே இந்தியர்களுக்கு சேவையைத் தொடங்கியுள்ளோம். பல நாடுகளில் NRI பிரிவைக் கூடத் துவக்கியுள்ளோம்.

இந்தியாவில் எமது நடவடிக்கையை அதிகரிக்கக் காரணம் சிக்கனம்தான் என்றாலும், இந்தியாவையே இனி சர்வதேச சேவை மையமாக்க மாற்ற விரும்புகிறோம்", என்றார். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/barclays.html"

Friday 21 May 2010

* ATM தானியங்கி இயந்திரத்தை கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் மரணம்

வங்கியிலிருந்து பணத்தை எடுக்கும் முறையை மகா எளிமையாக்கியுள்ள ஏடிஎம் மெஷினைக் கண்டுபிடித்தவரான ஜான் ஷெப்பர்ட் பேரோன்(John Shepherd-Barron) ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 84.

இந்த ஷெப்பர்ட் தான் உலகின் முதலாவது ATM இயந்திரத்தைக் கண்டுபிடித்தவராவார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் இவர் அங்குள்ள ரைமோர் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததாக அவரது இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்யும் அலிஸ்டைர் ரின்ட் கூறினார்.

60ம் ஆண்டுகளில் ஒருமுறை தான் கணக்கு வைத்திருந்த வங்கிக்குப் போயிருந்தார் ஷெப்பர்ட். ஆனால் வங்கி பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதையடுத்து தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை உருவாக்குவேன் என்று அறிவித்தார் ஷெப்பர்ட். சொன்னதோடு நிற்காமல் அந்த இயத்திரத்தையும் கண்டுபிடித்தார். தானியங்கி சாக்லேட் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த பணம் தரும் ATM இயந்திரத்தை அவர் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து 2007ல் பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில், எனது பணத்தையே என்னால் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் தானியங்கி சாக்லேட் தரும் இயந்திரத்தைப் பார்த்தேன். அதை அடிப்படையாக வைத்து இந்த ATM இயந்திரத்தை உருவாக்கினேன் என்றார்.

ஷெப்பர்ட் கண்டுபிடித்த முதலாவது தானியங்கி பணம் தரும் இயந்திரம், வடக்கு லண்டன் புறநகர்ப் பகுதியில், பர்க்லேஸ் வங்கிகிளையில் 1967ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி நிறுவப்பட்டது. இதுதான் உலகின் முதலாவது ATM இயந்திரமாகும்.

அப்போது பிளாஸ்டிக் டெபிட் கார்ட் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து ஷெப்பர்ட் கண்டுபிடித்த மெஷினில், வேதிப் பொருள் தடவப்பட்ட சிறப்பு கார்டுகள் பயன்படுத்தப்பட்டன.

மேலும் இதை பயன்படுத்துவதற்காக வாடிக்கையாளர்களுக்கு ஆறு இலக்கம் கொண்ட அடையாள எண்களை உருவாக்கினார் ஷெப்பர்ட். ஆனால் ஆறு எண்ணாக இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு சிரமமாக இருக்கும் என ஷெப்பர்டின் மனைவி கரோலின் தெரிவித்ததால் அதை நான்கு இலக்க எண்ணாக மாற்றினார் ஷெப்பர்ட்.

சமையலறையில் வைத்து இதுகுறித்து நான் எனது மனைவியுடன் விவாதித்தேன். அப்போது அவர், என்னால் நான்கு இலக்க எண்களைத்தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்றார். இதையடுத்தே நான்கு இலக்க எண்களை நான் உருவாக்கினேன் என்றார் ஷெப்பர்ட்.

தற்போது உலக அளவில் 10.7 லட்சம் ATM இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. இதற்குப் பிள்ளையார் சுழி போட்ட ஷெப்பர்ட் தற்போது மரணமடைந்துள்ளார்.

ஷெப்பர்டுக்கு மனைவி, 3 மகன்கள், 6 பேரப்பிள்ளைகள் உள்ளனர் submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/atm.html"

Wednesday 19 May 2010

* இந்தியா போகிறார் வார்ன் பப்ட் (Warren Buffet) ... முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு!

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வார்ன் பப்ட் (Warren Buffet) இந்தியாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

உலகின் பெரிய பணக்காரர்களில் முக்கியமானவர் வார்ன் பப்ட். பெரிய முதலீட்டாளர் இவர். பெர்க்சயர் ஹத்வே (Berkshire Hathaway) என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனம்தான் கோக கோலா கம்பெனியில் கணிசமான அளவு பங்குகளைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கு வெளியே வார்ன் பப்ட் முதலீடு செய்திருப்பது மிகக் குறைவுதான். அப்படிப்பட்டவர் முதல் முறையாக இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருவதாக பெர்க்ஷையர் ஹதாவேயின் செய்திக் குறிப்பு கூறுகிறது. இதுகுறித்து தனது நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக வார்ன் பப்ட்யும் உறுதிப்படுத்தியுள்ளார்.

வரும் மார்ச் மாதம் இந்தியாவுக்கு வருகிறார் வார்ன் பப்ட். இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தியில், "முதல் முறையாக இந்தியாவில் முதலீடு செய்ய வார்ன் பப்ட் திட்டமிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது இந்தியா. இந்த சூழலில் எந்த அளவு முதலீட்டை இந்தியாவும் அமெரிக்காவும் அனுமதிக்கும் என்று ஆராய்ந்து வருகிறார்..." என்று குறிப்பிட்டுள்ளது.

ஆசியாவில் மூன்று நாடுகளில் மட்டுமே வார்ன் பப்ட் முதலீடு செய்துள்ளார். தென் கொரியாவின் போஸ்கோ, சீனாவின் பிட் மற்றும் இஸ்ரேலில் மட்டுமே இவரது முதலீடுகள் உள்ளன.

இந்தியாவில் இன்ஸுரன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்ய பெர்க்சயர் ஹத்வே விரும்புவதாக பப்ட் தெரிவித்துள்ளார்.

பெர்க்சயர் ஹத்வே மறு காப்பீட்டு வர்த்தகத்தை தலைமையேற்று நடத்துபவர் அஜீத் ஜெயின் என்ற இந்தியர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/warren-buffet.html"

Monday 17 May 2010

* ஒரே மாதத்தில் அமெரிக்காவில் 290,000 வேலைவாய்ப்புக்கள்

வேலைவாய்ப்பு விஷயத்தில் மீண்டும் தன் பழைய பரபரப்புக்குத் திரும்புகிறது அமெரிக்கா .

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே 290,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

கடந்த நான்காண்டுகளில் ஆறுதலளிக்கும் முதல் செய்தி இதுவே என அமெரிக்கர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் வேலையின்மையின் அளவும் இரட்டை இலக்கத்திலிருந்து 9.9 சதவீதம் என ஒற்றை இலக்கத்துக்கு இறங்கி வந்துள்ளது.

உற்பத்தித் துறை, மருத்துவத் துறை என பல துறைகளில் இதுவரை 805,000 பேர் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளனர். கடந்த பிப்ரவரியில் 120,000 பேருக்கு வேலை அளிக்கப்பட்டது.

விரைவில் அமெரிக்க காங்கிரஸுக்கு தேர்தல் வரவிருப்பதால், வரும் மாதங்களில் அதிக அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் குறியாக உள்ளது ஒபாமா நிர்வாகம்.

அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பினாலும், நிறுவனங்கள் வேலைக்கு ஆளெடுப்பதில் தயக்கம் காட்டின. இப்போது நிலைமை நம்பிக்கை தரும் அளவுக்கு மேம்பட்டுள்ளதால், மீண்டும் அதிக அளவு ஆட்களை எடுக்க ஆரம்பித்துள்ளன. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/290000.html"

Wednesday 12 May 2010

* பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்களின் 20 நாள் 'மெகா வேலை நிறுத்தம்'

பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் 20 நாட்கள் மெகா ஸ்ட்ரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த வேலை நிறுத்தம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு குறித்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் சில வாரங்களுக்கு முன் இருமுறை வேலை நிறுத்தம் நடத்தினர்.இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது பிரிட்டிஷ் ஏர்வேஸ்.

முன்பு நடந்த வேலை நிறுத்ததில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ். இதனை கைவிட வேண்டும் என்று கோரியும், நிறுத்தப்பட்டுள்ள பயணச் சலுகை உள்ளிட்ட சம்பள உயர்வுகளை உடனே தரக் கோரியும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்களின் அமைப்பான யுனைட் கோரியுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸில் உள்ள 12000 விமான ஊழியர்களில் 90 சதவிகிதத்தினர் இந்த யுனைட்டின் அங்கத்தினர்களே.


20 நாள் ஸ்ட்ரைக்குக்கான தேதிகளையும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

மே 18-22, மே 24-28, மே 30-ஜூன் 3 மற்றும் ஜூன் 5-9 என நான்கு கட்டங்களாக இந்த ஸ்ட்ரைக்கை நடத்த உள்ளனர் ஊழியர்கள்.

ஏற்கெனவே ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ். இப்போது இந்த மெகா வேலை நிறுத்தம் நடந்தால், நஷ்டம் தாங்க முடியாத அளவுக்குப் போய்விடும் என்பதால், பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது நிர்வாகம். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/20.html"

Thursday 6 May 2010

* MasterCard நிறுவனத் தலைவராக இந்தியாவின் அஜய் பங்கா!

மாஸ்டர் கார்டு(MasterCard) நிறுவனத்தின் CEO இந்தியாவைச் சேர்ந்த அஜய் பங்கா (Ajay Banga) வரும் ஜூலையில் பொறுப்பேற்க உள்ளார்.

புனே நகரைச் சேர்ந்த Ajay Banga, டெல்லியில் படித்தவர்.Indian Institute of Management, Ahmedabadஉயர் படிப்பு முடித்தவர்.

பொதுவாக இம்மாதிரி சர்வதேச நிறுவனப் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் வெளிநாட்டில் ஒரு பட்டமாவது பெற்றிருப்பார்கள். ஆனால் பங்கா முழுக்க முழுக்க இந்தியாவிலேயே படித்துப் பட்டம் பெற்றவர்.

நெஸ்லே(Nestle) நிறுவனத்தில் தனது கேரியரைத் துவக்கிய Ajay Banga, பின்னர் சிட்டி குரூப்பில் சேர்ந்தார். 2005 வரை சிட்டி குரூப்பில்(Citigroup) தான் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.

மாஸ்டர்கார்டில் தலைவர் மற்றும் CEO பொறுப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் சேர்ந்தார் அஜய் பங்கா.வருகிற ஜூலை 1ம் தேதி, மாஸ்டர்கார்டின் தற்போதைய CEO ராபர்ட் செலாண்டர் பதவி விலகுகிறார். அன்றே Ajay Banga பொறுப்பேற்கிறார்.

CEO பொறுப்பேற்ற பிறகும் மாஸ்டர்கார்டு தலைவர் பதவியில் இவர் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் பங்காவின் முன் இப்போதுள்ள ஒரே சவால், தங்களுக்கு சற்று முன்னே பயணிக்கும் விசா கார்டு நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளவேண்டும் என்பதே! submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/mastercard.html"

Wednesday 5 May 2010

* 1 மில்லியன் ஐபேட்( i Pad) விற்று ஆப்பிள் சாதனை!

1 மில்லியன் ஐபேட்களை (கையடக்க கம்ப்யூட்டர்) விற்று சாதனை படைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

28 நாட்களி்ல் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனை இது.

ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் தயாரித்த ஐபாட்(i Pod) கருவி இந்த விற்பனை அளவை எட்ட 74 நாட்கள் தேவைப்பட்டன. ஆனால் இதில் மூன்றில் ஒரு பங்கு கால அளவுக்குள் 1 மில்லியன் ஐபேட்களை விற்றுள்ளது ஆப்பிள் என்கிறார் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

அரை அங்குல தடிமன் மற்றும் 1.5 பவுண்ட் எடை மட்டுமே கொண்ட ஐபேட்களுக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கம்ப்யூட்டருக்கான அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் 12 மில்லியன் அளவுக்கு டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன. 1.5 மில்லியன் இ புத்தகங்கள் ( E-Books)விற்பனையாகியுள்ளன. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/1-i-pad.html"

Tuesday 4 May 2010

* வர்த்தக உலா பகுதியில் என் கட்டுரை

இந்த வார வீரகேசரியில்(02-05-2010) வர்த்தக உலா பகுதியில் என் கட்டுரை பிரசுரமாகியுள்ளது!

மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய Apple

விபரங்களுக்கு படத்தை சொடுக்கி பெரிதாக்குங்கள்

என் தளத்தில் :-மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய ஆப்பிள்!
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/blog-post.html"

Friday 30 April 2010

* மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய ஆப்பிள்!

அன்றைக்கு மிகவும் சிக்கலில் மூழ்கியிருந்தது ஆப்பிள் நிறுவனம். அதன் தயாரிப்புகள் எதுவும் வேலைக்காகவில்லை. அந்த சமயத்தில் இந்த நிறுவனத்தில் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்து, முட்டுக் கொடுத்து நிறுத்தியது ஒரு நிறுவனம்.... அது.. ஆப்பிளின் பரம எதிரி எனப்பட்ட பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட்!.

கிட்டத்தட்ட மூழ்கிக் கொண்டிருந்த ஒரு கப்பலை மேலே கொண்டு வந்ததைப் போன்ற ஒரு பணியை பில்கேட்ஸ் செய்தார். வாக்குரிமையில்லாத பங்குகளை அவர் வாங்கிக் கொண்டார். அத்துடன் ஆப்பிள் கம்ப்யூட்டர்களிலும் செயல்படத்தக்க விதத்தில் மைக்ரோசாப்ட் மென்மொருளை உருவாக்கிக் கொடுத்தார் (முன்பு ஆப்பிள் கணிப்பொறிகளை வாங்க அனைவரும் தயங்கியதற்குக் காரணம், மைக்ரோசாப்ட் மென்பொருளை அவற்றில் செயல்படுத்த முடியாமலிருந்ததுதான்!). அன்றைக்கு கம்ப்யூட்டர் உலகின் முடிசூடா மன்னன் மைக்ரோசாப்ட்தான். அதற்கு மாற்றே இல்லாத நிலை.


13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிலைமை அப்படியே தலைகீழ்... ஐபோன், ஐபாட், ஐபேட் என ஆப்பிள் தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலை. சந்தை மூலதன மதிப்பில் இன்று மைக்ரோசாப்டை அப்படியே பின்னுக்குத் தள்ளிவிட்டது ஸ்டீவ் ஜாப்ஸின் தலைமையிலான ஆப்பிள்!

இன்றைய நிலவரப்படி ஆப்பிளின் சந்தை மதிப்பு 241.5 பில்லியன். மைக்ரோசாப்ட் சந்தை மதிப்பு 239.5 பில்லியன் டாலர்!

அமெரிக்க நிறுவனங்களில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது ஆப்பிளுக்கு. அடுத்த இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள மைக்ரோசாப்ட்.


நிச்சயம் தனது நிறுவனத்துக்கு இப்படியொரு நிலை வரும் என்று பில்கேட்ஸ் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார் என்கிறது அமெரிக்காவின் பிரபல பத்திரிகை. அதாவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதென்பார்களே... அப்படி ஒரு நிலை பில்கேட்ஸுக்கு. காரணம், ஆப்பிளில் முதலீடு செய்யுமாறு கூவிக் கூவி அழைத்தும் ஒரு டாலர் தரக்கூட ஒருவரும் முன்வரவில்லை அன்றைக்கு!

அன்று ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஒரு பில்கேட்ஸ் தேவைப்பட்டார். இன்று சரிவிலிருந்து நிமிர பில்கேட்ஸுக்கு ஒரு ஸ்டீவ் பால்மர் (Steve Ballmer) (மைக்ரோசாப்ட்டின் இன்றைய CEO) மட்டும் போதாது, ஸ்டீவ் ஜாப்ஸ்களும் தேவை என்று கமெண்ட் அடித்துள்ளது அந்தப் பத்திரிகை.(Jobs then needed Bill Gates far more than Gates needed Jobs. )

Source:-

Apple now bigger than Microsoft in m-cap-Times of india

Apple tops Microsoft on S&P 500, index's guardian says submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/blog-post_30.html"

Wednesday 21 April 2010

* பிரிட்டிஷ் ஏர்வேஸ் - ஐபீரியா 'மெகா' இணைப்பு

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் ஸ்பெயினின் ஐபீரியா நிறுவனமும் இணைகின்றன.

இதன் மூலம் உலகின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் - ஐபீரியா உருவெடுத்துள்ளது.

இந்த இணைப்புக்கான முயற்சி கடந்த ஆண்டே துவங்கிவிட்டது. அனைத்து நடைமுறைகளும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இணைப்பின் மூலம் 400 மில்லியன் யூரோ சேமிக்கப்படும் என்றும், இது பங்குதாரர்கள், பயணிகள் மற்றும் தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் திட்டம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்த இணைப்புக்குப் பின் புதிதாக நிறுவனம் உருவாக்கப்படாது என்றும், ஏற்கெனவே உள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஐபீரியா அவற்றின் சொந்தப் பெயரிலேயே இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த இணைப்புக்குப் பிறகு 408 விமானங்களுடன் 200 விமான நிலையங்களில் 58 மில்லியன் பயணிகளுடன் இயங்கும் பெரிய விமான போக்குவரத்து நிறுவனமாக இது திகழும்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்குகிறது. மேலும் நிறுவனத்தின் ஊழியர்கள் வேறு தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நேரத்தில் இந்த இணைப்பு பெரும் இழப்பிலிருந்து காக்கும் என நம்புகிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/blog-post_21.html"

Monday 19 April 2010

* பிரிட்டிஷ் பங்குச்சந்தையில் மோசடி

பிரிட்டிஷ் பங்குச் சந்தையை மோசடி செய்த குற்றத்துக்காக வெளிநாடு வாழ் இந்தியர்கள் இருவருக்கு அபராதமும் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஈடுபடத் தடையும் விதித்துள்ளது பிரிட்டன்.

சமீர் பட்டேல் மற்றும் ராபின் சாப்ரா ஆகிய இருவரும் லண்டனில் வசிக்கும் இந்திய முதலீட்டாளர்கள். பிரிட்டிஷ் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்தனர்.

இவர்களில் ராபின் சப்ரா, எவால்யுவேஷன் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தில் அனலிஸ்டாக பணியாற்றி வந்தார். அப்போது பங்குச் சந்தை மற்றும் பங்குகள் பற்றிய ரகசிய விவரங்களை தனது நண்பரான சமிர் பட்டேலுக்கு அவ்வப்போது சொல்லி வந்துள்ளார். 3 சீஸன்களில் இதுபோல் செய்து, ஏராளமான லாபத்தைப் பெற்றுள்ளனர் இருவரும்.

இந்த விவரங்களை பிரிட்டிஷ் நிதி சேவை முகமை கண்டுபிடித்து, இருவருக்கும் முறையே £180,541 மற்றும் £ 95,000 பவுண்டுகள் அபராதமாக விதித்துள்ளது.மேலும் சமீர் பட்டேல், ராபின் சத்தா இருவருமே தொடர்ந்து பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடத் தடையும் விதித்துள்ளது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/blog-post_19.html"